குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 30, 2011

சித்ரகுப்தன் கதை சூட்சுமமும் பௌர்ணமி தினமகிமையும்


சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம்  செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்கவாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமனுக்கு சொல்பவர். சுருங்கச்சொன்னால் எமதர்மராஜனின் கணக்குப்பிள்ளை. இவரைப்பற்றிய கதைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். 

பார்வதி தேவி வரைந்த சித்திரம் அவராலேயே உயிர் கொடுக்கப்பட்டது, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.

சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். 

இவற்றை விட இவரது பெயர் கூறும் இன்னொரு விடயம் என்ன வெனில் "சித்ரம்" என்றால் வரையப்பட்டது என்று பொருள், குப்தம் என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். 

இனி இவர் பற்றிய மேற்கூறிய புராணக்கதை பற்றிய சூட்சுமத்திற்கு வருவோம்; 

முதலாவது பார்வதி தேவி வரைந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டார் என்பது, பார்வதி தேவி உலகினை படைத்த சக்தி, அந்த சக்தியின் ஒருபகுதி தான் மனச்சக்தி, மனச்சக்தி தெய்வமனம் (divine mind), ஆகாய மனம் (Cosmic mind), மனித மனம் (Human mind) என இயங்குகிறது. தெய்வமனத்தின் ஒரு கூறுதான் ஆகாய மனம், ஆகாய மனத்தின் ஒரு கூறுதான் மனித மனம். ஆக மனித மனம் எண்ணும் எண்ணங்கள் ஆகாயமனத்தில் பதியப்பட்டு சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட எண்ணங்கள் பிரபஞ்சமனதிற்கு செல்லும் போது அதன் செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு மூன்று மனங்களும் இணைக்கப்படும் போது ஒருவனுடைய பாவ புண்ணிய கணக்குகள் செயல் பெறத்தொடங்குகிறது. ஆக இந்த மூன்று மனங்களை இணைக்கும் சக்தி அல்லது சேமிப்பகம் தான் "சித்ரகுப்தன்" - அதாவது மனித எண்ணங்கள் சேமிக்கபடும் சித்தம் எனப்படும் ஆழ்மனம் (Subconsciousness mind) சித்ரகுப்தரின் ஒரு பகுதி, இது போல் ஆகாய மனத்தில் சேமிக்கப்படும் "ஆகாய சித்தம்" சித்ரகுப்தனின் ஒரு பகுதி. பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து தோன்றினார் என்பது பிரபஞ்ச மனசக்தியிலிருந்து பகுக்கப்பட்ட ஒரு பகுதி என்பதேயாகும். நவீன உளவியல் சற்று தெரிந்தவர்களுக்கு புரியும் மனம் என்பதின் ஒரு கூறுதான் "சித்தம்" எனும் ஆழ்மனம் என்று. அதாவது பகுக்கமுடியாதபடி மனமும் சித்தமும் இரண்டறக்கலந்தவை. ஆக சித்ரகுப்தன் என்பது நம் எல்லாருடைய சித்தம் எனப்படும் ஆழ்மனமேயாகும். 

இரண்டாவது சித்திரை மாதம் தொடர்பான கதை, நாம் எல்லோரும் அறிவோம் சித்திரை மாத பௌர்ணமி சித்ரகுப்தரிற்கு விஷேடம் என்று. சோதிடம் அறிந்தவர்களுக்கு தெரியும் சந்திரன் மனக்காரகன், அதாவது பூமியில் வாழும் மனிதரனைவரது மனமும் சந்திரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பௌர்ணமி அன்று மனச்சக்தி அதிகரிக்கும். அதனால் தான் அதனை தாங்கும் வலிமையற்ற நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. சித்தபிரமை பிடித்தவர்களுக்கு அதிகமாகிறது. அதே நேரம் மனதினை அடக்கி ஆளதெரிந்தவர்களுக்கு சாதனை புரிய ஏற்ற நாள். இதனால் தான் பௌர்ணமி அம்பிகைக்கு விஷேடமாக கருதப்படுகிறது. ஏனேனில் மனச்சக்தி தான் அனைத்திற்கும் அடிப்படை.  ஆக பௌர்ணமி அன்று நாம் மனதில் எண்ணும் எண்ணம் அதிக வலிமையுடையதாக எமது சித்தத்திற்கூடாக ஆகாய மனத்தில் பதியப்பட்டு, பின்பு பிரபஞ்ச மனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு காரியம் நிறைவேறுகிறது. இதனால் தான் பௌர்ணமி அன்று விரத நாளாகவும், புனித நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற வழிமுறையும் இதுதான். இது சித்ராபௌர்ணமி அன்று மட்டும் என்பதில்லை, எந்த பௌர்ணமி தினத்திலும் இதே விளைவுதான். குறைந்தது வருடம் ஒருமுறையாவது இந்த இரகசியத்தினை பயன்படுத்தி மக்கள் பயன்பெறட்டும் என்று சித்தர்கள், ரிஷிகள் இவ்வாறு கதைகளாக கூறியுள்ளார்கள். 

1 comment:

  1. சித்ரா பௌர்ணமி பற்றி சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...