குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 26, 2011

ஞானகுரு - 07: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குவதால் ஏற்படும் பலன் என்ன?


ஸ்லோகம் - 02

வாக்கியம் 04: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குங்கள்

பலர் தமக்கு தேவையில்லாத காரியங்கள் பலவற்றை எப்போதும் செய்தவண்ணம் இருப்பர். இதனை ஏன் செய்யவேண்டும்? இதன் விளைவுகள் என்ன? என்பதனை சிந்திக்காமல் காரியங்களை செய்வதன் மூலம் கர்மங்கள் அதிகரிக்கின்றது. காரியங்கள் அனைத்தும் பலன் தரக்கூடியவை, அதாவது எண்ணும் ஒரு எண்ணம் கூட மனதளவிலாவது பலனைத்தரும். அதை செய்யலாம் இதை செய்யலாம் என்ற எண்ணம் எழும்போது அதனது தேவை, விளைவு அறிந்து உறுதியுடன் ஆராய்ந்து அதனை செய்யலாமா இல்லையா என்பதனை முடிவெடுக்க வேண்டும். கர்மங்களை விலக்கவேண்டும் என்றவுடன் எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல. எனெனில் கர்மத்தின் அமைப்பினை விளங்கியவர்களுக்கு தெரியும் கர்மம் என்பது செய்யப்பட்டது, செய்யப்படுவது, செய்யப்போவது என்று முன்று வகைப்படும். இதனையே சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என்பர். மனிதனாக பிறந்தவர்கள் கர்மங்களை செய்யாமல் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது.  கர்மங்களை செய்தே ஆகவேண்டும். இறைவழியில் சென்று பிறவாபேரின்பம் பெற விரும்புபவர்கள் புதிதாக கர்மம் சேராமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இப்படி காரியங்களை உறுதியுடன் விலக்கினால் சித்தத்தில் புதிய கர்மங்கள் சேராது.

இதனை ஒரு உதாரணத்துடன் விளங்க முற்படுவோம். ஒரு கம்பனியில் ப்ராஜெக்ட் மானேஜர் (Project Manager) ஆக ஒருவர் இருக்கிறார், பல ஆண்டுகளாக வேலை செய்துவிட்டார், அடுத்து பதவி உயர்வையோ, அல்லது ஓய்வையோ விரும்புகிறார் என்றால் என்ன செய்யவேண்டும். அவர் தனக்கு தரப்பட்ட தற்போதைய வேலையினை விதிக்கப்பட்ட இலக்குகளுக்கு (Objectives) ஏற்ப சரியாக முடித்தல் வேண்டும். பின்பு புதிய ப்ராஜெக்டுகளை மேலதிகமாக ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும். அதுபோல் நவீன மொழியில் ஆன்மீகத்தினை விளக்குவதானால் ஒவ்வொருமனிதனும் வாழ்க்கை என்பது ஒரு ப்ராஜெக்ட் (Project), அந்த ப்ரொஜெக்டினை நடாத்த வந்திருக்கும் மானேஜர் தான் மனிதன். ப்ராஜெக்டில் இலக்குகள், காலக்கெடு இருப்பதைப்போல் மனிதவாழ்க்கையிலும் சரியான இலக்குகள் இருக்கின்றன. அவற்றை அறிந்து எமது ஆயுள்காலத்திற்குள் அடைவோமானால் சித்தர்கள், முனிவர்கள் பெற்ற பதவிஉயர்வினையும் (Promotion) பெறலாம், அல்லது பிறவாப்பேரின்பம் எனும் ஓய்வினையும் (Retirement) பெறலாம்.

இந்த வாக்கியத்தில் சொல்லப்பட்ட அறிவுரை நீங்கள் திறமையான ப்ராஜெக்ட் மனேஜராக இருப்பதற்கு தங்கள் இலக்கில் மட்டும் கவனம் வையுங்கள் என்பதும் எப்போதும் எந்த விடயத்தினை செய்வதற்குமுன்னும் அதனுடைய விளைவுகள் பலன்களை தீர ஆராய்ந்து செய்யுங்கள் என்பதாகும்.  இந்த உபதேசத்தினை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பின்பற்றலாம், உலகியல் முன்னேற்றத்திற்கும் பின்பற்றலாம்.

2 comments:

  1. அற்புதமான விளக்கம்... உதாரணத்துடன் விளக்கியது இன்னும் சிறப்பு..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அற்புதமான பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...