குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 14, 2011

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 03


பகுதி -03 

ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.


21. கோரக்கர்: சந்திரனின் வீடு எது? சூரியன் எது? எந்த வீட்டில் காலம் இசை பாடும்?  எங்கு பஞ்ச பூதங்க்களும் சமப்படும்?

22. மச்சேந்திர நாதர்: மனமே சந்திரனின் வீடு, பிராணனே சூரியன், சூன்யத்தில் காலம் இசைபாடும், ஞானத்தினை அடையும் போது பஞ்ச பூதங்களும் சமப்படும்.
கோரக்கர்: அமாவாசை என்பது என்ன? அதை எப்படி அறிவது? எது அல்லது எங்கு மஹா அமிர்தமாகும்? அதை எங்கு பெற்றுக்கொள்வது?பேரின்ப நிலையில் மனம் எங்கு உள்ளது?

           23. கோரக்கர்: அமாவாசை என்பது என்ன? அதை எப்படி அறிவது? எது அல்லது     எங்கு மஹா அமிர்தமாகும்? அதை எங்கு பெற்றுக்கொள்வது?பேரின்ப நிலையில் மனம் எங்கு உள்ளது?

24. மச்சேந்திர நாதர்: அமாவாசையில் சூரியன் இருண்ட இரவாக கருதப்படல் வேண்டும், அதை உருவாக்குவது சந்திரனாகும். மஹா அமிர்தம் கீழிருந்து மேல்கொண்டு செல்வதால் கிடைப்பதாகும். பேரின்ப நிலையிலே மனமானது எமக்குள்ளேயே உருவாகும் சொர்க்கத்தில் (ஆனந்தத்தில்) நிலைத்திருக்கும்.

குறிப்பு: இதில் மனம், பிராணன் ஆகியவற்றை கட்டுப்படுத்தி, குண்டலினியை மேலெழுப்பி அமிர்தத்தினை அடையும் முறை கூறப்பட்டுள்ளது. அனைத்தும் படி பாஷையாக கூறப்பட்டுள்ளது.

25. கோரக்கர்: எது கெட்ட வார்த்தையினை அழிக்கும்? நல்ல வார்த்தை எங்கு வசிக்கும்? எந்தப்பக்கம் பன்னிரெண்டங்க்குல பிராணன் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது?

26. மச்சேந்திர நாதர்: நல்ல வார்த்தை கெட்ட வார்த்தையினை விழுங்குகிறது, அதுவே எப்போதும் தனாகவே நிரந்தரமாக இருக்கிறது. பன்னிரெண்டங்குல பிராணன் குருவின் வார்த்தையால் கட்டுப்படுத்தப்படுகிறது.

27. கோரக்கர்: யார் ஆதி குரு? யார் பூமியின் துணைவன்? எது ஞானத்தின் இருப்பிடம்? எது சூனியத்திற்கு வாசல்?

28. மச்சேந்திர நாதர்: அநாதியான இருப்பே ஆதிகுரு; சொர்க்கமே பூமியின் துணைவன்; விழிப்புணர்வே ஞானத்தின் இருப்பிடம்; விழிப்புணர்வுடனான அனுபூதியே சூன்யத்தினை அடைவதற்கான வாயில்!

29. கோரக்கர்: விழிப்புணர்வுடனான அனுபூதியினால் மாயையுடனான தொடர்பு அறுந்த பின்  எப்படி சந்திரனை (சோம சக்கரம்) பிளப்பது? எப்படி அணையை கட்டுவது? உடலை எப்படி அழியாது சிரஞ்ச்சீவிதன்மையுடையதாக்குவது?

30. மச்சேந்திர நாதர்: அனுபூதியுடனான விழிப்புணர்வு மனதில் வரும் போது உலக மாயை அறுகின்றது, பின்பு பிராணனை கட்டுப்படுத்துவதால் சந்திரன் அழிவான், உண்மையான ஞானத்தினால் அணையை கட்டி குருவை அறிதல் மூலம் ஒருவனுக்கு அமரத்துவம் உண்டாகிறது. 

1 comment:

  1. மிக நுட்பமான சூட்சுமங்களைப் பற்றி கூறுகிறீர்கள்.. முழுதும் புரியவில்லை. படித்து மட்டுமே வைக்கிறேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...