குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 05, 2011

காயத்ரி மந்திரத்தின் மூலம் சூஷ்ம சக்திகளை விழிப்பித்தல்


குருதேவரிடம் கற்ற குறிப்புகளின் படி...

மனிதன் தனது வாயால் உச்சரிக்கும் சொற்கள் மனதிலும் உடலிலும் மாற்றத்தினை உண்டு பண்ணுகிறது என்பதனை அனைவரும் அறிவோம். ஒருவனை கோபமாக ஏசும் போது மனமும் உடலும் கொந்தளிப்பு ஏற்படுவதனை அனைவரும் உணர்ந்திருப்பர். இதுதான் மந்திர சாஸ்திரத்தின் அடிப்படை. மந்திரங்கள் குறித்த சொற்கள் அட்சரங்கள் மூலம் மனதிலும் சூஷ்ம உடலிலும் சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துக்கள் 24 வகையான பேறுகளை அளிக்கவல்லது. 

காயத்ரி மந்திரம் 24 அட்சரத்துடன்:

தத்/ ஸ/ வி/ துர்/ வ/ ரே/ ணி/ யம்/ பர்/ கோ/ தே/ வ / ஸ்ய/ தீ/ ம/ ஹி/ தி /யோ/யோ/ ந/ ப்ர/ சோ /த /யாத்

ஒவ்வொரு அட்சரமும் மனிதனில் விழிப்பிக்கும் குணங்கள் ஆற்றல்கள் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. 


அட்சரம்
விழிப்படையும் குணம்
01
தத்
எடுத்த காரியத்தில் வெற்றியடைதல்
02
பராக்கிரமம்
03
வி
எதையும் பொறுப்புடன் பராமரித்தல்
04
துர்
நல்வாழ்வு
05
யோகம்
06
ரே
அன்பு/காதல்
07
ணி
பணம்
08
யம்
தேஜஸ்
09
பர்
பாதுகாப்பு
10
கோ
புத்தி/நுண்ணறிவு
11
தே
அடக்கம்
12
நிஷ்டை
13
ஸ்ய
தாரணா சக்தி வளர்ச்சி
14
தீ
பிராண சக்தி வளர்ச்சி
15
தன்னடக்கம்
16
ஹி
தாபோசக்தி
17
தி
வருங்காலமறியும் பண்பு
18
யோ
விழிப்புணர்வு
19
யோ
ஆக்கபூர்வமான மன நிலை
20
இனிமை
21
ப்ர
சேவை
22
சோ
ஞானம்
23
இலட்சியம்
24
யாத்
தைரியம்


இது எப்படியென இன்னும் விரிவாக பார்ப்போம். மனிதனுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு தோல்விக்கு, இன்ப துன்பங்களுக்கு உணர்ச்சிகள் பெரும் பங்காற்றுகின்றன. இவை பெரும்பாலும் நாளமில்லச்சுரப்பிகள் எனப்படும் Endocrine system களால் சுரக்கப்படும் ஹோமோன்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இந்த நாளமில்லாச்சுரப்பிகள் மனிதனுடைய சூஷ்ம உடற் செயற்பாடுகளுடன் தொடர்புடையவை. அதனால் தான் சூஷ்ம உடலில் காணப்படும் ஆறாதாரங்கள் என எமது தாந்திரீக நூற்களில் குறிக்கப்படும் ஆதாரங்கள் மேற்குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் தாமரைகளாக வர்ணிக்கப்படுகின்றன. கீழே காணப்படும் படத்தினைப்பார்க்கவும். 


ஒருவர் மந்திரத்தினை ஜெபிக்கும் போது இந்த கிரந்திகள் சூஷ்மமான அதிர்வுகளுக்கு உள்ளாகி பௌதீக உடலினையும் சூஷ்ம உடலினையும் சமனிலைப்படுத்துகிறது.அதேபோல் குறித்த மனதில் உணர்ச்சிகள் உண்டாகும் போதும் இந்த கிரந்திகள் செயற்பட்டு உடலில் மாற்றத்தினை உண்டு பண்ணும்.  இவ்விரண்டு உடல்களும் சரியான விகித்தில் பரிவுறும் போது மனிதன் தனது இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான். சாதாரணமாக எந்த மந்திரத்தினையும் ஜெபிக்கும் போது இந்த செயன்முறை நடைபெறும், வேறு மந்திர ஜெபத்தின் போது எமது மனம், உணர்ச்சி நிலைகள் முக்கியம். எண்ணம் உணர்ச்சி தவறாக இருப்பின் பலனும் தவறாக இருக்கும். இறுதியில் பாதிப்புத்தான் மிஞ்சும். 

ஆனால் காயத்ரி மந்திரத்தின் சிறப்பு இதில்தான் அடங்கியுள்ளது. மந்திரத்தின் பொருளே மனதிற்கு நல்ல நிலையினை தருமாறு விஸ்வாமித்திர மகரிஷி அமைத்துள்ளார். இதை வேறுவிதத்தில் விளங்கப்படுத்துவதானால், நீங்கள் வேறு மந்திர சாதனை (காளி, துர்கை, பகளாமுகி) செய்வதற்கு சரியான பக்குவம் தேவை, இல்லாமல் பீஜாட்சரங்களை ஜெபிக்கும் போது கோரிய பலன் கிடைக்காமல் பிரச்சனைக்குள்ளாகலாம், ஆனால் காயத்ரி ஜெபம் செய்யத்தொடங்கும் போது ஆரம்ப கால சாதனை உங்களில் மெது மெதுவாக பக்குவத்தினை உண்டு பண்ணும் பின்னர் சரியான பக்குவம் உருவான பின்னர் படிப்படியாக உயர்வடையச்செய்யும். இதன் செயன் முறையினை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

காயத்ரி சாதனை செய்வதற்கான பக்குவத்தினை பெற காயத்ரி சாதனை செய்வதுதான் ஒரேவழி! 

இந்த பக்குவம் பெற எம் அனைவரையும் குருதேவர், விஸ்வாமித்திரர், வஷிஸ்டர், பிரம்மா மகரிஷிகள் ஆசீர்வதிக்கட்டும்! 


3 comments:

  1. பக்குவம் பெற குருவருள் துணை நிறகட்டும்..

    ReplyDelete
  2. காயத்ரி மந்திரத்தில் இத்தனை பொருள்களா?? அற்புதமான விளக்கம்.. அருமை...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    சிவ.வள்ளியப்பன்GS123
    குரு நாமாவளி சொல்லும் பொழுது உடல் முழுதும் சூட்டுடன்கூடிய ஒரு வகையான அத்திர்வு உண்டாகிரது.

    ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனைக்கான மாதிரி படத்திட்டமும் நாம் எந்தநிலையில் என்ன பாடம் கற்கபோகிறோம் என்கிற குறிப்புகள் தான் உள்ளது பாடம் ஏதும் இன்னும் வரவில்லை ஐயா

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...