குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 13, 2011

போதிதர்மர் பற்றிய சரித்திரக்குறிப்புகளும் உபதேச சுருக்கமும்



இன்றை திகதியில் திரையுலகம் தந்த பாதிப்பால் தமிழ் வலையுலகத்தில் தேடப்படும் சித்தர் போதிதர்மர், அவர் பற்றிய வாழ்க்கைகுறிப்புகளும் அவரது முக்கிமான உபதேச சுருக்கமும் தங்கள் பார்வைக்கு.

போதிதர்மர் சீனாவுக்கு சென்று போர்க்கலையினை கற்பித்து அந்த போர்க்கலை பல வடிவங்களை பெற்று இன்று உலகம் போற்றும் பலவிடயங்க்களை சீனா போர்க்கலையின் பெற்றுள்ளது. இது பற்றிய வரலாற்றுத்தகவல்களை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவில் நோக்கம்.

  • கி.பி 500 போதிதர்மரின் காலம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • அவர் தியானமுறையினை போதித்துவரும் போது துறவிகள் உடல் அளவில் வலிமை இன்றி இருந்ததால் தொடங்க்கப்பட்டதே உடல் அசைவு முறைகள், பின்பு அவை போர்க்கலையாக வடிவமைக்கப்பட்டது.
  • போதிதர்மரைப்பற்றிய விபரங்கள்  Michael Spiesbach என்பவரால்  Journal of Asian Martial Arts, 1992, vol. 1, no. 4, இல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதன் படி;
  • போதிதர்மரின் போர்க்கலைக்கான உள்ளீடுகள் எவ்வளவு என்பது பற்றி விவாதம் பல உள்ளதாக குறிப்பிடுகிறார்.
  • போதிதர்மரைப்பற்றிய முதலாவது சரித்திர குறிப்பு Luoyang jia lan ji, (“The History of the Monasteries of Luoyang”) கி.பி 574 இல்  Yang Xuanzhi என்பாரால் எழுதப்பட்டுள்ளது. இவர் கி.பி 574 இல யொங் நிங் ஆலயதிற்கு சென்ற போது 150 வருடங்கள் முதுமையான வேற்று நாட்டவரான Sramana Bodhidharma என்பவரை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்
  • அடுத்த குறிப்பு Guifeng Zongni (780-841) என்ற புத்த சமய அறிஞர் தனது நுலான  Dao Zuan's Xu gao seng zhuan (“Biographies of Eminent Tang Monks”) இல் ஒரு இடத்தில் "மேற்கிலிருந்து போதிதர்மர் ஏன் வந்தால்" என்று ஒரு வசனத்தினை பதிந்துள்ளார்.
  • அடுத்த முக்கியமான ஆதாரம்  Dao Yuan's Jing de zhuan deng lu (“The Records of Transmission of the Lamp”) கி.பி 1001 இல் எழுதப்பட்டது.
  • சீனாவின் புத்த விகாரைகளின் குறிப்புகளின் படி அவர் சீனாவுக்கும் வந்த காலப்பகுதி கி. பி 520, கி.பி 470, கி.பி 420 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அவரது பயண வழிதொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

        1. சென்னை, குவாங்க்சோஉ, கடல்வழியாக, பின்பு நிலதினூடு நன்சிங்க் (படம் - ௦௧).
        2. சென்னை, பாமிர் பீடபூமி, மஞ்சள் நதி ஓரமாக லூஓயாங் (படம் - 02)

சென்னை, குவாங்க்சோஉ, கடல்வழியாக, பின்பு நிலதினூடு நன்சிங்க்
சென்னை, பாமிர் பீடபூமி, மஞ்சள் நதி ஓரமாக லூஓயாங்
  • போதிதர்மர் காஞ்சிபுரத்தில் மன்னனது 3வது மகனாக பிறந்தார், ஆகவே போர்க்கலையில் வல்லமை மிகுந்த அரச குடும்பத்தில் பிறந்தார்.
  • தனது ஏழாவது வயதில் மனமே மாணிக்கம் (ஜென் கோட்பாடு) என்பதனை உணர்ந்தார்.
  • அவரது ஆசிரியர் பிரஞ்னதாரா, பெண் குரு. 
  • இதன் பின் சரித்திரக்குறிப்புகளின் படி பல்லவ மன்னன் சிம்மவர்மன் இவரை குருவாக கற்பிக்க அழைத்ததாகவும். இவர் அரிய சித்திகள் நிறைந்த யோகினியாவார்.
  • இவர் ஞானமடைந்த போதிதாரா என்ற இளவரசனை போதிதர்மன் என பெயர் மாற்றம் செயதார்.
  • குருவான பிரஞ்னதாராவின் மறைவிற்கு பின் போதிதர்மர் அவரது ஆணையின் பெயரில் சீனதேசம் பயணிக்கிறார்.
  • போதிதர்மர் அவரது போதனைகளில் அவர் சக்கரவர்த்தி Wu Dai (465-550) அவர்களின் அரச அவையில் இருந்ததாகவும், பின் அவரது ஆதரவின்மையால் Yangtze நதியினை கடந்து Luoyang சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவரது போதனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் கேலி செய்யப்பட்டதாகவும், உணவுக்கு கூட வழியற்று கடைசியாக அந்த இடத்தினை விட்டு சென்றதாகவும் குறிப்புட்டுள்ளர்.
  • இறுதியாக Henan  மானிலத்தில் உள்ள Song  மலையினை அடைந்து அங்கு Shaolin Temple அமைத்து தான் கற்ற போதனைகளை சீன மொழியில் மாற்றம் செய்யும் பணியில் ஆழ்ந்தர்.
  • அவரது பிரதம சீடராக Shen Guang கற்றார்.
  • இந்த வேளையில் அவர் மாணவர்கள் உடல் வலிமையற்று இருப்பதை கண்டு, இந்திய யோக முறைகளில் ஒன்றான பிராணணை (in Chinese Chi, Japanese Ki) வசப்படுத்தும் மூச்சுப்பயிற்சியும், உடற்பயிற்சி அசைவுகளையும் வடிவமைத்து பயிற்று வித்தார்.

 போதிதர்மரின் உபதேசங்கள்
லங்கவதாரா சூத்ரா (Lankavatara Sutra) - மனதினை பயிற்சிக்குள்ளாக்கி புத்த நிலையினை அடைவது பற்றியது. போதிதர்மரின் உபதேசப்படி முதலில் கற்கை (Theory), அதாவது புத்த நிலையினை எப்படி அடைவது என்பது பற்றி கற்றல் வேண்டும், பின் பயிற்சி! பயிற்சியின் முக்கிய நோக்கம் மனதின் காம, குரோத, மாச்சர்யங்களை அழித்தல், அதன் மூலம் புத்த நிலையினை அடைதல். அவரது உபதேசங்கள் மூன்று:
  1. Bao Yen Hsin: இன்ப துன்பங்களை, ஏற்ற இறக்கங்கங்களை, புகழ்ச்சி இகழ்ச்சிகளை எதுவித காரணமும் சொல்லாமல் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளல்.
  2. Sui Yen Hsin: அனைத்து சூழல்களும் கர்ம விதியின் படி நடக்கின்றது என்பதனை உணர்ந்து, நம்மை சுற்றி நல்ல விடயங்கள் நடக்கும் போதும், கெட்ட விடயங்கள் நடக்கும் போதும் மனதின் சம நிலை இழந்து விடாமல் இருத்தல் வேண்டும்.
  3. Tsung Fa Hsin: பயிற்சியின் மூலம் மனசமனிலையே புத்த நிலை என்பதை உணர்தல், அனுபவித்தல்.
எப்படியோ போதிதர்மர் தென்னிந்தியாவில் இருந்து சென்றார் என்று சரித்திர ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவர் உலகிற்கு தந்த ஞானம் அனைவரும் அறிய வேண்டியது. அதன் அடிப்படைகள் நிச்சயமாக தாந்திரீகமும், பத்ஞசலி யோகம் என்பவற்றை சார்ந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இதில் எம்மிடமிருந்து சென்றது என்று "மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" என்பதனை அறிந்து இவற்றை நாமும் கற்க வேண்டிய அவசியம் உண்டென்று அறிவோம். 

உசாத்துணை:


4 comments:

  1. போதிதர்மரை வைத்து செய்த வியாபாரம் நன்றாகவே நடந்துள்ளது.. அதில் அவர் ஒரு மருத்துவர் மற்றும் போராளி என்பதே பிரதானமாக சொல்லப்படுகிறது.

    அதையும் மீறி அவர் சொன்ன ஞான மார்க்கத்தை விளக்கும் முதல் பதிவு தங்களுடையதுதான்.

    வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. தகவல்களின் தொகுப்பு அருமை. உங்கள் உழைப்பு இதில் தெரிகிறது.
    http://venpuravi.blogspot.com/2011/11/blog-post_14.html

    ReplyDelete
  3. சுமன்
    எனக்கொரு சந்தேகம். அதுவென்னவெனில் சித்தர் போகரும், போதி சத்துவரும் ஒன்றோ என்றுதான். ஏனெனில் சித்தர் போகரும் சீனதேசம் சென்றதாகக் கூறப்படுகிறது அல்லவா.
    சந்தேசம் தீர்க்கவும்
    -சாந்தண்ணா-

    ReplyDelete
  4. @ சாந்தன்

    இல்லை அவர் வேறு, போகரது போதனைகளின் சீன வடிவம் விரைவில் பதிவிடவுள்ளேன், அப்போது பார்க்கவும்!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...