குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 25, 2011

பிராண சாத்திர விளக்கம் (சீன அடிப்படையில்)

சீன போர்க்கலை, தியான யோகங்கள், மருத்துவம் என்பன இந்திய மரபினை அடிப்படியாக கொண்டு வளர்ந்தது என்பது இன்று வரலாற்று ஆசிரியர்கள்  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள், இவை ஆதாரத்துடனும் நிருபிக்கப்பட்டும உள்ளனஅதேவேளை  தமிழ் சித்தர்களது யோக விளக்கத்தினை நேரடியாக சித்தர் பாடல்களில் இருந்து விளங்க முற்படும் போது பல கருத்துவிவாதங்கள், எது சரி எது பிழை என்ற முரண்பாடுகள் ஆகியன பெரும் பிரச்சனையாகும், இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக எமது முன்னோரிடம் இருந்து சென்ற வித்தைகள் மற்றைய கலாச்சாரத்தில் எப்படி வளர்ந்தது என்ற மூலங்களை அறியும் போது எமது கேள்விக்கு சில விடைகள் கிடைக்கலாம். இந்த அடிப்படையில் பிராண சக்தி பற்றி விளங்கிகொள்வதற்கு சீன யோக அடிப்படைகள் இங்கு பகிரப்படுகிறது. இது பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை கூறவும்.
சீன மொழியில் பிராணனைக் குறிக்கும் சொல் "சீ - Chi" என்பதாகும். சீனர்கள் பிரபஞ்சத்தின் மூன்று சக்திகள் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர், சொர்க்கம், பூமி, மனிதன் என்பனவே அவையாகும். இந்த முன்றும் இயங்குவதற்கு அவசியமானது "சீ" எனப்படும் பிராண சக்தியாகும். இவற்றுள் சொர்க்கப் பிராணசக்தி எல்லாவற்றிலும் உயர்ந்தது. இதுவே  சூரியன், சந்திரன்,நட்சத்திரங்கள் என்பவற்றிலிருந்து பூமிக்கும், மனிதனுக்கும் கிடைக்கும் சக்தியாகும். இந்த சொர்க்க பிராணசக்தியினாலேயே பூமியின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பிராணசக்தி எப்போதும் சமனிலையில் இருக்க முற்படும். இந்த சமநிலை பாதிக்கப்படும் போது அதனை சீர் செய்வதற்காக ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றங்கள், நில நடுக்கங்கள் என்பனவாகும். சொர்க்கப் பிராணசக்தியிலிருந்து பூமி தனது பிராண சக்தியினைப் பெற்று சமநிலையடைகிறது. இந்த சொர்க்கப் பிராண சக்தியிலும் பூமிப் பிராணனிலிருந்தும  உயிர்கள் பிராண சக்தியினை பெறுகிறது. இவற்றுக் கிடையிலான சமநிலையே எல்லவற்றிற்குமிடையிலான வாழ்க்கை, இந்த பிராணனை இழக்கும் போது அழிவு, குழப்பம்   அல்லது மரணம் உண்டாகிறதுஅடுத்து இந்த "சீ" எனப்படும் சக்தி எல்லவற்றறுடனும் கலந்து காணப்படுவது, அதாவது வெப்பசக்தியை எடுத்தால் அதனுடன் உள்ள பிராணன்  "ரீசீ" எனப்படும். இதுபோல் ஒவ்வொரு பௌதீக சக்திகளுடனும் கலந்துள்ள மூல சக்திதான் பிராண சக்தி எனது சீனபிராண சக்தியினுடைய அடிப்படை  விளக்கமாகும்.
சீன யோக அடிப்படையில் பிராணக்தியினை ப்படுத்த முனைபர் இந்தப் ந்தகொள்கையினை விளங்கிக்கொள்வது என்பது அவசியமானது.
மனித உடலில் இந்த பிராண சக்தியின் பயன்பாடு என்னவென்பதே அனைவரது ஆர்வமும் உண்மையான் நோக்கமும் கூட. ஆதலால்  மனித உடலில் இந்த பிராண சக்தி எப்படி செயல்படுகிறது என்பதனை இந்தப் பதிவுகளில் அறிந்து கொள்வோம்.
சீன மொழியில் "சீ" என்பது இரு எழுத்துக்களால் குறிக்கப்படுகிறது, முதலாவது எழுத்து "வெறுமையினையும்" இரண்டாவது எழுத்து "அக்கினி" யினையும் குறிக்கிறது. அதாவது "யின் –Yin" "யங் - Yang" எனப்படு இருமைகளால் இந்த பிராண சக்தி ஆளப்படுகிறது. இவற்றைதான் இந்திய யோக மரபில் "இடகலை" "பிங்கலை" என்பர்.
"யின்" பெண்மை, சந்திரன், வெறுமை, குளுமையினையும், "யங்" ஆண், சூரியன், நெருப்பினையும் குறிக்கும்.
சீன மருத்துவ கோட்பாட்டுகளின் படி உள்ளுறுப்புகளில் "யங்" ஆகிய நெருப்புதன்மை அதிகரித்தோ, குறைந்தோ காணப்படக்கூடாது. இரண்டும் சமநிலையில் இருக்கும் போது ஆரோக்கியம், கூடிக் குறையும் போது நோய் ஏற்படும். இதனை அதிகரிப்பதோ குறைப்பதோதான் சீன மருத்துவமுறைகளின் அடிப்படை சிகிச்சை கோட்பாடு.
மனித உடலில் இந்த "சீ" பிராணசக்தியின் தொழிற்பாடு சொர்க்கப் பிராணசக்தியாலும், பூமிப்பிராணசக்தியாலும் ஆளப்படுகிறது. இதனது அளவே ஒருவனது விதியினை தீர்மானிக்கிறது. இந்த இடத்தில் சோதிடவியலில் கிரகங்களின் தாக்கத்தினை இந்த சொர்க்க பிராண சக்தியுடன் ஒப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் தாக்கமும் சீன பிராண சக்தி தத்துவத்தின் படி சொர்க்கப் பிராணனின் காரணியாககருதலாம்.
மனிதன், பூமி, பிரபஞ்சம் ஆகிய இந்த பிராண சக்திகளின் அடிப்படைத்தொடர்புகளை அறிவதன் மூலம் நடக்க இருப்பதை அறியும் கலைதான் " சிங் - I Ching" எனப்படும் சீன சோதிட முறை.
சீனர்கள் ஆயிரம் ஆயிரமாண்டு காலமாக தமது அனுபவங்களை எந்தவித திரிபுமின்றி பதிந்து வைத்துள்ளார்கள், அதே நேரம் தமது கலாச்சார அறிவினை யாரிடமும் விட்டுக்கொடுத்து மறக்கவுமில்லை என்பதற்கு இந்த பிராண வித்தை பற்றிய அவர்களது அறிவு ஒரு சான்றாகும்.
அத்துடன் ஆயிரம் வருடங்களாக சொர்க்கப்பிராணன், பூமி, இயற்கை, மனிதன் ஆகியவற்றின் தொடர்புகளை பதிந்து "மாற்றங்களின் புத்தகம் - Book of change - யீ சிங்" எனப்படும் நூலாக ஆக்கி வைத்துள்ளனர். இதன் படி பிராண சக்தியின் அளவினை கணிப்பிடும் முறையினையும் உருவாக்கு வைத்துள்ளனர். இதுவே பெங்சுயி போன்றவற்றில் பயன்படுகிறது. பெங் சுயி எனப்படும் சீனா வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை இதுவேயாகும்.
சீன யோக மரபு நிலைத்து நிற்பதற்கும , ஏற்றுக்கொள்ளக்கூடிய கலையாக இருப்பதற்கு அனைத்து இடைத்தொடர்புகளும் சரியாக கோர்க்கப்பட்டுள்ளமை  ஒரு மூலகாரணமாகும்.
இந்த "சீ" பிராண சக்தியினை கட்டுப்படுத்தும் முறை உடலசைவுகளுடன் கூடிய சுவாசப்பயிற்சி, ஆம் இது பிராணாயாமத்துடன் கூடிய ஆசனப்பயிற்சியின் இன்னுமொரு வடிவம்தான். ஆனால் சீனப் பயிற்சியில் இந்த பயிற்சிகளுக்கான தொடர்புகள் (Continuity) மிக அருமையாக இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த பதிவில் சீன பிராண சாத்திரத்தின் அடிப்படையான நாடிகளைப்பற்றியும் அதனூடான பிராணனின் ஓட்டத்தினையும் பற்றி பார்ப்போம். இதுவே அக்யுபஞ்சர், அக்யுபிரசர், டிம் மாக் எனப்படு சீன வர்மம் ஆகியவற்றிற்கான அடிப்படையாகும்.

3 comments:

  1. இங்கிருந்து சீனா சென்ற விசயங்கள் தவிரவும் சீனாவிலேயே பல விசயங்கள் தோன்றி அவை இங்கு வந்திருக்க வாய்ப்புகள் உண்டு.. ஏனெனில் பல இந்திய சித்தர்களின் சீன தொடர்பு, அங்கு ஏற்கனெவே இருந்த ஞானியர்களை சந்திப்பதற்காகவும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்துக்கவும்கூட இருந்திருக்கலாம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. ஆம் நிச்சயமாக, ஒவ்வொரு நாகரீகமும் தமக்குரிய வடிவத்தை அந்த கலாச்ச்சார பாரம்பரியத்திற்கேற்ப வளர்த்திருக்கும், ஆனால் அதன் அடித்தளத்தில் ஒற்றுமை இருக்கிறது, அதன் மூலங்களை ஒப்பிடுவதன் வழியாக‌ விடைதெரியாத புதிர்களை அவிழ்க்கலாம் என்பது எமது கருத்து! சீன (தாவோவியல்)யோகமும்! இந்திய தாந்திரீகத்தின் அடிப்படையும் ஒத்தது! அதேபோல் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகமும் போதிதர்மரின் போதனைகளது மூலமும் ஒத்தது, வரும் பதிவுகளில் இவற்றையும் அலசுவோம்!

    சிந்தனை தூண்டலிற்கு நன்றி!

    ReplyDelete
  3. Dear sir

    Reading this, now i remember a siddhar poem which i read long ago which mentioned..

    "nayayai ottum oru ezhuthu"

    that poem said that one word is very important. Hearing chinese 'chi' i guess they all mentioned same thing. wow.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...