குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 01, 2011

சித்தர்களின் காயகற்ப இரகசியம் - வெண்சாரை கற்பம்

=================================================================================
இந்த பதிவு நேற்றைய பதிவின் தொடர்ச்சியாதலால் அதனைப் படித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கவும். அதற்கான சுட்டி;
சித்தர்கள் கூறும் சுழுமுனை நாடி பற்றிய குறிப்புகளும் காயகற்பத்தின் யோக இரகசியமும்
=================================================================================

நேற்றைய பதிவில் சுழுமுனை பற்றி பார்த்தோம், இன்று சுழுமுனைக்கும் சித்தர்கள் கூறிய காயகற்ப இரகசியத்திற்குமுள்ள தொடர்பினைப் பார்ப்போம்.

சுழுமுனையின் சித்திர நாடியினுடாக குண்டலினியான மகா பிராண சக்தியினை செலுத்துவதையே வேண்சாரை கற்பம் என குறிப்பிட்டுள்ளார்கள்.

சுழுமுனையினுள் உள்ள சித்திர நாடியினுள் பிராணணை நிலை நிறுத்தி ஒருவரது சூஷ்ம உடலின் பிராண அதிர்வை பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு இந்த பூவுலகில் நிலை நிறுத்தி மனிதர்களுக்கு உதவுவதே சித்தர்கள் கூறும் காயகற்பம். இப்படிச் செய்தவர்கள் தான் அகத்தியர் முதலான சித்தர்கள் கிரியா பாபாஜி போன்ற யோகிகள். ஸ்தூல உடலை வைத்திருப்பதல்ல‌, ஸ்தூல உடலிற்கான கற்பமுறைகள் சாதாரண ஆயுளை விட சிறிது அதிகரிக்க உதவும். அது பற்றி வேறொரு பதிவில் ஆராய்வோம்.
இந்த பதிவில் சூஷ்ம உடலினை பலப்படுத்தி காயகற்பமடைய வைக்கும் யோக இரகசியத்தினைப் பற்றி மிக சுருக்கமாக பார்ப்போம்.
இந்த பதிவின் நோக்கம் கருதி அகத்தியர் கற்ப தீட்சையில்  இருந்து பாடல்கள் எடுத்தாளப்படுகிறது. இது பற்றி பல்வேறு சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அகத்தியர் ற்பதீட்சையிலே (பாடல் 81, 82 ) இதனையே பரிபாஷையில் இவ்வாறு கூறுகிறார்;
பாதையென்றஅட்டாங்கயோகியானால்
பார்மனே ற்பமொன்று சொல்லுவேன்கேளு,
பேதையென்று லையாதே பொதிகைக்காப்பால்
பிரமாய் கோடி யோசனைதான் மேரு,
கோதையென்றஅரதிலே யிடப்பாகத்தில்  கொடுவிடமாம்
வெண்சாரை ப்பாகத்தில்,
வேதையென்றமேருகிரிதனிலே பின்னி விளையாடு
மிரண்டுமொன்றாய் விஷதாமே

இதன் பொதுப் பொருள்: இய‌, நிய‌, ஆச‌, பிரணாயாமம் எனும் அட்டாங்கயோகம் கைக்கொள்ளும் சாதனானால் னே உனக்கு உன் உடலை அழியாது வைத்திருக்கஒரு ற்பமுறை கூறுகிறேன் கேள்! பொதிகை லைக்கு அப்பால் கோடி யோச()னை தூரத்தில் மேரு லையுள்ளது, அதிலே தோல் நிறைந்த‌ (கோதையின் அகராதி பொருள் தோற்கட்டு, உடும்பு, கோதை ஆறு) இட‌ம் ஒன்று உள்ளது, அதன் இடப்பாகத்தில் விடம் நிறைந்த பாம்பும் அதன் வலப்புறத்தில் வெள்ளை நிறசாரைப் பாம்பும் உள்ளது. அது மேருகிரியில் குலாவி விளையாடும் போது விஷமாகும்.
அடுத்தபாடலில்
விஷமானஅரவு ண்டும் பிணைந்து நிற்கும்
வேதான்தகாமமெனும் பீடந்தனை,
குசமானயோகியவ்விடத்திற் சென்றால் கொடுவுடந்தான்
முழுங்கிவிடு மாய்ப்போவர்,
நிசமானகுளிகைகொண்டசித்தரானால் நிமிசத்தில்
காமபீடத்தை நீக்கி, திசமானதீட்சையினால் போனாலுந்தான் ....
பொதுப் பொருள்:
இப்படி விஷமானபாம்பு இரண்டும் பிணைந்து நிற்கும் போது காமம் மிகுந்து காணப்படும், அந்தநேரத்தில் யோகம் கும் யோகி அங்கு சென்றால் அந்தகொடுமையானவிடம் அவனை விழுங்கி மாக்கி விடும், குளிகையுடையசித்தர் ஒருவர் செல்வாரானால் நிமிடத்தில் காமத்தினை நீக்கி தீட்சையெனு க்தி பாய்ச்சலால் ட்டுப்படுத்தி ப்படுத்துவார்,
இதனை மேலோட்டமாக இப்படி விளங்கிகொண்டஒருவர் எப்படி எடுத்துக்கொள்வார், ஆகா! மேருமலையில் ஒரு இடத்தில் இரண்டு பாம்புகள் கொடியவிஷத்துடன் காமல்லாபம் செய்து கொண்டிருக்கும், அதனை குளிகை உள்ளசித்தர் ஒருவது உதவியுடன் பிரித்தெடுத்து றியாக்கி உண்டால் ற்பகாலம் வாழலாம் என்று,
இனி இவ‌ற்றின் குறிவில‌க்க‌ப் பொருள் என்ன‌வென்று பார்க்க‌லாம்;
அகத்தியர் கற்ப தீட்சை  பாடல்களது யோக விளக்கம்;
பாதையென்ற அட்டாங்க யோகியானால் பார்மகனே கற்பமொன்று சொல்லுவேன்கேள : இந்த வரியில் இந்த பாடலின் பொருளை அறியக்கூடியவன் யார் என்பதனைக் குறிப்பிட்டுவிட்டார், அட்டாங்க யோகம் தெரிந்து , யோக நாடிகள் பற்றிய அறிவு உள்ளவராக இருந்தால் மட்டும் இதன் உண்மை விளங்கும் என்று.
பேதையென்று மலையாதே: சொல்ல‌ப்போவ‌தைக் கேட்டு ம‌லைத்து ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு த‌வ‌றாக‌ விள‌ங்கிக்கொள்ளாதே என‌ எச்ச‌ரிக்கிறார்.
 பொதிகைக்காப்பால் : சித்தர்கள் பொதிகையில் வாழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிவர், அவர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டிற்கு எப்படி தென்றல் வருகிறது, தென்மேற்கு காற்றிலிருந்து பொதிகை தென்றலாக்கி கொடுக்கிறது, அதுவே பொதிகையின் தனிச்சிறப்பு, அந்தக்காற்றிலிருந்து வரும் நீரை அங்கு ஒடுக்கி தாமிரபரணியாக நதியாக தென்னாடு செழிக்க செய்கிறது. இதே செயல் சூட்சும உடலில் பிராணனனது சுற்றோட்டத்தில் நடைபெறுகிறது, இது பொதிகை சூட்சும உடலில் எங்கே உள்ளது? பிரபஞ்ச பிராணன் பெரும் வேகத்துடன் வரும் பொழுது அதனிக்கட்டுப்படுத்தி நதிகளாக்கி உடல் முழுவதும் பரவச்செய்யும் இடம் எங்கு உள்ளது? அதுதான் காண்டம் எனப்படும் யோக நாடிகள் உருவாகும் இடமாகும். சித்தர்களது பரிபாசையில் பொதிகை என்பது பிராணசக்தியை பரவ வைக்கும் யோக நாடிகளின் ஆரம்ப ஸ்தானமான காண்டம் எனும் பகுதியாகும்.
பிரபலமாய் கோடி யோசனைதான் மேரு: கோடி யோசனை என்பது எண்ணற்ற என்று பொருள்படும், அதாவது காணடத்திலிருந்து உருவாகும் எண்ணற்ற யோக நாடிகள் (இது 72000 என்பது சித்தர்களின் பொதுவான கணக்கு)மேருவுடன் இணைகிறது, மேரு என்பது முள்ளந்தண்டினை குறிக்கும், அதாவது சுழுமுனையின் அமைவிடம்.
கோதையென்ற அரவதிலே யிடப்பாகத்தில்  கொடுவிடமாம் வெண்சாரை வலப்பாகத்தில்: அரவு என்பது அசைவு என்றும் பொருள் கொள்ளலாம், அதாவது நாடி என்பதனை மறைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுவிடம் என்பது ராஜச குணத்தினை குறிக்கும், ஆக இந்த விவரணம் சுழுமுனையின் உள்ளே காணப்படும் வஜ்ர நாடியினை குறிப்பதாகும். வெண்சாரை என்பது வெண்ணிறமானசித்திரநாடி, இவையிரண்டும்,
வேதையென்ற மேருகிரிதனிலே பின்னி விளையாடு மிரண்டுமொன்றாய் விஷமதாமே: இவை இரண்டும் சுழுமுனையில் சாதாரஉலவாழ்க்கையினால் பிராணஓட்டம் சிக்கலாகி பின்னி பிணைந்து விஷமாகி விடுகின்றது.
விஷமான அரவு ரண்டும் பிணைந்து நிற்கும் வேதான்த காமமெனும் பீடந்தனை குசமான யோகியவவ்விடத்திற் சென்றால் கொடுவுடந்தான் முழுங்கிவிடு மலமாய்ப்போவர்: இப்படி பிராண ஓட்டம் சிக்கலாகி விஷமாகநிற்கும் நாடிகள் இரண்டினூடாகவேதாந்தம் எனும் அறிவுடையஆனால் காமவாசனை அழியாதயோகம் குபர் பிராணஓட்டத்தினை செலுத்தப் போனால் அது விஷமாகி அவரை அழித்து விடும். (இதையே புராணத்தில் திருப்பாற்கலை டைந்ததையாககூறியுள்ளார்கள்).  இதில் அகத்தியர் பெருமான அழகாகச் சொல்கிறார், இந்த ரகசியத்தை அறிவால் அறிந்து கொண்டால் மட்டும் போதாது, சித்தியாவதற்கு  சித்தத்திலுள்ள வாசனைகளும் அழியவேண்டும் என்று!
நிசமான குளிகைகொண்ட சித்தரானால் நிமிசத்தில் காமபீடத்தை நீக்கி, திசமான தீட்சையினால் போனாலுந்தான்: உண்மையாக இரகசியத்தை (குளிகை) அறிந்து  து ஆழ்மமாகியசித்தத்தினை ட்டுப்படுத்தக்கூடியல்லமை உள்ளஒருவரானால் (சித்தர் என்பதன் பொருள்) (ஏனனெனில் சித்தமே தில் எண்ணவிருத்திகளை உருவாக்குவது, சுழுமுனையில் பிராணன் செல்லும் போது சித்தவிருத்தி இருக்குமானால் அது விஷமாகி சூஷ்மஉடலையும் கெடுத்து ஸ்தூலஉடலையும் அழித்து விடும், அதனாலேயே ஞ்சலியார் சித்தவிருத்தி நிரோதமே யோகம் என்றார் )காமம் எனும் ஆசைகளை சித்தத்தில் நீக்கி புதிய தெய்வசம்ஸ்காரங்களை (தீட்சை என்பது சூட்சும உடலில் தெய்வ சம்ஸ்காரங்களை பதிப்பித்தல் என்பதே உண்மையான பொருள்) பதிப்பித்து இந்த நாடிகளூடாக பிராணனை செலுத்துவார் என்பதே இதன் பொருள்.
இவற்றின் மேலதிக விபரம் அகத்தியர் கற்ப திட்சையில் விரிவாக ஆனால் பரிபாசையில் கூறப்பட்டுள்ளது. வேறொரு சந்தர்ப்பத்தில் இதுபற்றிப் பார்ப்போம்!

இதுவே சித்தர்களின் யோக‌ ற்பமுறை பற்றிய சுருக்கமான‌ விளக்கம், சித்தர் பாடலிகளில் சரியான புரிதல் ஏற்பட இவை உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.
அடுத்த பதிவில் வேறொரு சித்தர் நூலில் இருந்து இந்த வேண்சாரையைப் பற்றிய குறிப்புகளை  பகிர்வோம்.

2 comments:

  1. அன்பு சகோ
    அருமை, அருமை

    பாடலை விவரித்த விதம்

    ஒரு பானை சோற்றுக்கு
    ஒரு சோறு பதம்

    பதிவுகள் அனைத்தும் மனதுக்கு இதம்

    நன்றியுடன்
    ஷரீப்

    ReplyDelete
  2. விளக்கமும் பதிவும் - அருமை ! அருமை ! எவர் ஒருவருக்கும் வாய்க்கப்பட்டிருக்கிறதோ அவரால் மட்டுமே எழுத முடியும் பதிவு இது. உங்களுக்கு பதினென் சித்தர்களும் ஆசீர்வாதங்களை அளிப்பார்கள். இதை எழுதும் போது மனது சில்லிடுகிறது.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...