குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 24, 2011

ஸ்ரீ சனீஸ்வரர் பெருமை - சனீ தோஷத்திற்கு ஓர் எளிமையான பரிகாரம்!


இந்தப் பதிவினை படிக்கு முன் கட்டாயம் கீழ்வரும் இணைப்புகளை படித்தபின் வாசிக்கவும்

============================================================================



முன்னொரு காலத்தில் மாவீரன் விக்கிரமாதித்தியன் உஜ்ஜனி எனும் நகரை ஆண்டு வந்தான், அவன் மிகுந்த இரக்க முடையவனும், அறிவாற்றலும் உள்ள அரசன். அவன் பல கலைகளை கற்று தேர்ந்ததுடன் அந்தக்கலைகளில் விற்பனராகிய அறிவாளிகளை மிகுந்த மதிப்புடன் தனது அவையில் வைத்திருந்தான். தனது குடிமக்களை தந்து சொந்தப் பிள்ளைகள் போல் கருதினான். அதுபோல் மக்களும் தமது அரசனை தமது தந்தைபோல் மதித்து போற்றி வந்தனர். ஆகவே அவனது அரச எல்லைக்குட்பட்ட அனைத்துக் குடிமக்களும் மிக்க மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வாழ்ந்து வந்தனர். 

பத்துத் திசைகளிலுமிருந்து தேனுடைய பூக்களை நோக்கி வண்டுகள் வருவது போல் அவனது அறிவாற்றலும், அறிவைத் தேடும் பண்புகண்டு அவனது காலத்திலிருந்த அனைத்து துறைசார் அறிஞர்களும் அவனை நோக்கி வந்தனர். அரசனும் தன்னை அண்டி வந்த அனைத்து அறிஞர்களையும் தக்க மரியாதை செலுத்தி அவர்களுடன் கருத்துப்பகிர்ந்து தனது அறிவையும் வளர்த்துக்கொள்வதை பெரும் மகிழ்வுடன் செய்து வந்தான். 

அதாவது தற்காலத்தில் பேராசிரியர்கள் ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்டு ஆண்டுகொருமுறை கலந்துரையாடல் நடத்தும் முறையினை தனது அரச அவையில் ஏற்பாடு செய்து தானும் அதில் ஒருவனாக பங்குபெற்றி வந்தான். அரசியல், சமயம், தத்துவம், மருத்துவம் என பலதுறைகளில் கலந்துரையாடல் செய்து அறிவு பரவ வழி செய்தான். 

இப்படியாக அறிவுபரவச்செய்து வரும் பல கலந்துரையாடல்கள் நடாத்தி வந்தான். மன்னனோ மற்றவர்களோ தமது கருத்தினை, சந்தேகங்களினை அவையினர் முன் வைப்பார்கள், அவற்றிற்கு மன்னன் விக்கிரமாதித்தியன்  உட்பட மந்திரிகள், பண்டிதர்கள், தாந்திரீகர்கள், ஜோதிடவிற்பனர்கள் போன்ற துறை சார்ந்த அறிஞர்கள் தமது கருத்தினை தெளிவு படுத்துவர், ஒரு நாள் இப்படியான அறிஞர்கள் குழுமியிருந்த அவையில் விக்கிரமாதித்தியன் தனது சந்தேகம் ஒன்றினை முன் வைத்தான்; அது ;

நவக் கிரகங்களில் முதன்மையானவர் யார்? என்பது!

அந்த அவையில் வராஹமிரர் போன்ற ஜோதிட சாஸ்திரத்தில் கரைகண்ட ஜோதிட ஞானிகள் பலர் இருந்தனர், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரகத்தினையும் உபாசித்து அந்த கிரகம் தொடர்பான அறிவையும் அந்த கிரகத்துக்குண்டான அருளையும் ஞானத்தினையும் பெற்றிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் மன்னனது இந்தக் கேள்விகளை தங்களது பக்கங்களிலிருந்து அணுக தயாராகினர். விக்கிரமாதித்திய மன்னனும் மன்னனது அவையினரும் ஆவலுடன் அந்த விற்பனர்களது பதிலினை கேட்க ஆவலாயினர்! 

நாமும் ஆர்வமுடன் அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதனை நாளை பார்ப்போம்!


1 comment:

  1. சனீஸ்வரனே போற்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...