குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, February 03, 2012

சித்த வித்யா பாடங்கள்: 11 மனித காந்தசக்தியினை வளர்ச்சியுறச் செய்யும் பயிற்சிகள்

சென்ற பாடத்தில மனித கந்த சக்தியினை வளர்ச்சியுற செய்யும் அடிப்படைகளை விளக்கினோம், அதனை படித்த சில நண்பர்கள் அவற்றை தெளிவான பயிற்சி முறையுடன் விளக்கினால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தனர். அவர்களது விருப்பபடி அந்த முறைகளை தொகுத்து தந்துள்ளோம்.

மனித காந்தம் மனம் பிராணன் என்ற இரு பகுதிகளை உடையது. மனம் காந்தத்தின் தன்மையினை (Quality) தீர்மானிக்கும், பிராணன் அதன்  வலிமையினை (Strength) தீர்மானிக்கும். 

இதன் அடிப்படையில் கீழே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுளை சாராமல் தமது காந்த சக்தியினை வளர்த்துக்கொள்ளவும் ஆன பயிற்சிகளை தருகிறோம்.

முதலாவது பிராணா சக்தியினை வளர்ப்பதற்கான பயிற்சி ;

அடிப்படை 

முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள், முடியுமானால் பத்மாசனம், சித்தாசனம், சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.  இயலாதவர்கள் நேராக நின்று கொண்டும் செய்யலாம். 

கைகளை பக்க வாட்டில் தளர்ச்சியாக பக்கவாட்டில் தொங்க விட்டு மெதுவாக மூச்சினை முழுவதும் வெளியேற்றி விட்டு பின் மூச்சினை உள்ளிழுக்கும் பொது கைகளை மேலுயர்த்தி நன்றாக மூச்சினை எடுத்து பின்னர் மூச்சினை வெளிவிடும் பொது கைகளை பக்கவாட்டில் விடவும். இப்படி ஆரம்பத்தில் மூன்று தடவைகளும் பின்னர் 5  தடவைகளும் செய்து வரவும். 

இப்படி செய்யும் போது மூச்சிழுக்கும் போது நல்ல காந்த சக்தி உங்களுக்குள் வந்து நிரம்புவதாகவும் வெளியேறும் போது உங்கள் உடலில் மனதில் உள்ள தீயவை வெளியேறுவதாக பாவிக்கவும்.

இதனால் உங்கள் காந்த சக்தி அதிகரிக்கும்.

நடு நிலை 

சூரிய நமஸ்காரம் பிராண சக்தியினை அதிகரிக்க செய்யும் ஒரு அரிய செயல்முறையாகும், இதனை தெரிந்த வர்கள் மேற்கூறிய பாவனையுடன் ஒவ்வொரு அசைவின் உடனும் செய்துவருவதால் அதிகரிக்கலாம. 


உயர் நிலை பயிற்சி  

கும்பக பிரணாயமமே அதிகளவு காந்த சக்தியினை பெறுவதற்கான வழி, ஆனால் நேர்முகமாய் பயில் வேண்டியது. 

கடவுள் நம்பிக்கை உள்ள நபர்களிற்கான பயிற்சி 
  1. உங்கள் இஷ்ட தெய்வத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்,
  2. அத்தெய்வதிற்குரிய சிறிய மந்திரமொன்ரை எடுத்துக்கொள்ளுங்கள் (ஓம் "நமசிவாய, நாராயணய, சரவணபவாய, துர்கையை" நமஹா என்றவாறு அல்லது காயத்ரி மந்திரம், இஸ்லாமிய நண்பர்கள் "பிஸ்மிள்ளஹி  ர்ரகுமநிர்ரஹீம் என ஜெபிக்கலாம் )
  3. பின்னர் குறித்த நேரத்தில் மனதில் உங்களது இஷ்ட தெய்வத்தினை பாவித்த வண்ணம் மந்திரத்தினை உங்களது மூச்சினை மெதுவாக உள்ளிழுக்கும் போது உங்களது இஷ்ட தெய்வத்தினது அருள் காந்த சக்தி சென்று உடல் மனதில் கலப்பதாக பாவித்து வரவும்.
  4. ஓரிரு மாத கால பயிற்சியில் நிச்சயமாய் உங்கள் காந்த சக்தி வளர்ந்திருப்பதை அனுபவமாக உணரலாம்.  
இவற்றை எப்படி பிரயோகிப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

சத்குரு பாதம் போற்றி!

3 comments:

  1. அய்யா வணக்கம். எங்களின் வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அருமையான பதிவு ! நன்றி !

    ReplyDelete
  3. மிகவும் உபயோகமான தகவல்கள்.. பிரணாயாமம் பற்றி சற்று விரிவாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...