குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, March 14, 2012

காயத்ரி சாதனைக் குறிப்புகள் - 01

காயத்ரி மந்திரமானது ரிஷிகளின் மூல மந்திரமாக இருந்து வருகிறது, அதன் அமைப்பு இரு வகைகளில் பயன் படுகிறது, ஒன்று அர்த்தமுள்ள பிரார்த்தனையாக ஆழ்மனதிற்கு ஒரு சுய ஹிப்னாடிச மறை மொழியாக (auto suggesstion) மனதை செம்மைப்படுத்துகிறது, இரண்டாவது அதன் அதிர்வுகள் எல்லா மந்திரங்களது அதிர்வுகளையும் வழங்கி மனிதனில் சூஷ்ம சக்தியினை விழிப்பிற்க கூடியதாக உள்ளது, சாதாரண வைதிகர்கள் பயன்படுத்தும் காயத்ரி முதலாவது வகையினை சார்ந்தது, இரண்டாவது முறை தாந்திரிக அடிப்படையில் தீட்சை மூலம் செயற்படுத்த படுவது. இரண்டாவது முறையில் முறையாக சித்தி பெற்ற குருமுறையாக சாபவிமோசனம் செய்வித்து மந்திர தீட்சை பெறுதல் வேண்டும். இப்படியான தீட்சையினால் பெறப்படும் காயத்ரி மந்திர சித்தியினால் ஒருவன் தனது ஆன்ம பரிணாமத்தினை சாதனையினை பூர்த்தி செய்யும் வழியில் ஞானம் உருவாக்கி அவனை வலி நடாத்தும்.

இத்தகைய அரிய மந்திரத்தின் சக்தி தவறாக பயன்படக்கூடாது என்பதனை கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் அவை வைதிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் கருத்தில் அதனுடைய உபயோகம் மட்டுப்படுத்த பட்டது. தார்காலத்தில் அனைவரும் காயத்ரி ஜெபிக்கலாம் என்பது நிறுவப்பட்டுள்ளது, ஆதலால் இவற்றை பற்றி விவாதித்தல் அவசியமற்றது.

காயத்ரி மந்திரத்தின் பொருள்

"எல்லாம் வல்ல பரம்பொருள் எமது அறிவினை ஒளிர செய்து சரியான வழியில் இட்டு செல்லட்டும்"

இந்த பொருள் மிக எளியதும் மனிதனது அனைத்து தேவைகளையும் தீர்ப்பதற்கான அடிப்படை தகுதியை வழங்க்கிவதாகவும் உள்ளது. ஒருவனுடைய அனைத்து பிரச்சனைக்கும் காரணம் அறியாமை, அறியாமையினால் துன்பம் வருகிறது, ஆகவே துன்பத்தினை தீர்பதற்கு அறியாமையினை நீக்குதல் வேண்டும், எந்த பிரச்சனையினையும் எதிர்கொள்ளும் மனநிலையும் தீர்க்கும்  பக்குவமும் அறிவு தெளிவானவர்களுக்கு இலகுவாகும். தினசரி இந்த பொருளினை மனதில் சிந்தித்து காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து வருபவர்களுக்கு படிப்படியாக புத்தி இறை ஞானத்துடன் தொடர்பு கொள்ளத்தொடங்கும், அவை வலுக்க எந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் தன்மை உண்டாகும்.

இந்த செயல்முறையினை மேலும்  தெளிவாக விளக்குவதானால் ஒருமனிதன் எந்த முடிவுகளையும் எடுக்கும் போதும் அவனுடைய மேல் மனம் ஆழ்மனதினை தொடர்பு கொள்ளும், அந்த வேளையில் ஆழ்மனம் தரும் தகவல்களை வைத்துக்கொண்டு மேல்மனம் அந்த விடயம் தொடர்பாக புத்தியின் துணையுடன் ஆராயும், இதன் படியே ஒருவரும் முடிவுகள் அமையும், இந்த செயல்முறையில் மேல்மனதினை, ஆழ்மனம் செல்வாக்கு செலுத்தும், ஆழ்மனதினை புத்தி செல்வாக்கு செலுத்தும், இவற்றின் தன்மை, தூய்மை, பலம் போன்றவற்றின் தன்மைக்கு அமைய ஒருவருடைய ஆற்றல் செயல் அமைந்திருக்கும். பொதுவாக மேல்மனம் தர்க்க மனம் - ஒருவிடயதினை சரியா, பிழையா என ஆராய்ந்து கொண்டிருப்பது, இவற்றுக்குரிய தகவல்களை எந்த வித ஒழுங்கும் இல்லாமல் வழங்கிக்கொண்டு இருப்பது ஆழ்மனம், இதுதான் சரி , இது பிழை என ஒப்பீடு வழங்குவது புத்தி, ஆக புத்தி சரியாக இருந்தால் மற்றைய இரு பகுதிகளும் சரியாக வேலை செய்யும்.

காயத்ரி மந்திரம் என்பது இந்த பொறிமுறையினை சரி செய்யும் ஒரு உபகரணமே (tool) ஆகும், அதன் பொருள் ஆழ்மனதிற்கும் மேழ்மனதினையும் புத்தியுடன் இணைக்கும் செயலை செய்கிறது, அதன் மந்திர அதிர்வுகள் புத்தியை தெய்வ சக்தியான பரஞானத்துடன்  இணைக்கிறது.  

இதுவே எந்த பிரார்த்தனைக்கும் பொருந்தும் செயல்முறை இரகசியமாகும் - அதாவது எந்த மந்திரதினது அதிர்வு புத்தியை இறை சக்தியுடன் இணைக்கும், அதற்கு பொருள் 
இருப்பின் அது மனம் - புத்திகளை ஒழுங்குபடுத்தும். 

இந்த விளக்கத்தின் மூலம் காயத்ரி மந்திரம் எப்படி செயற்படுகிறது என்பதன் அடிப்படை விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். 

ஓம் சத்குரு பாதம் போற்றி! 

2 comments:

  1. மந்திரங்கள் செயல்படும் முறைமை பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். மந்திரங்களின் இன்னொரு முக்கிய பணி, நம் மனதை தூய்மைப் படுத்துவதும் (Cleaning), பண்படுத்துவதும் (Refining) ஆகும். அந்த தூய்மைப்படுத்தும் பணி முழுமையடைந்தால்தான் மந்திரத்தின் முழுபயனை ஒருவர் அடைய முடியும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  2. தங்கள் பகிவுக்கு நன்றி... சித்தர்தள் என்று கூறி தமிழை விடுத்து சமசுகிருத மந்த்ரங்களை விளக்கியதின் பொருள் தான் புரிய வில்லை....

    தாங்கள் தெரிவித்த கருத்தின் படி ஒரு வினா எனக்கு எழுந்தது... இந்த காயத்ரியை அனைவரும் பயன்படுத்தக் கூடாது என்று யார் அந்த தடையை நீக்கியவர் யார்? மேலும் இந்த ஒரே காயத்ரி மந்த்ரத்துக்கு பல விளக்கங்கள் இருந்தால் குழம்புபவர் சிலர் அல்ல பலர்

    ”இத்தகைய அரிய மந்திரத்தின் சக்தி தவறாக பயன்படக்கூடாது என்பதனை கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் அவை வைதிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் கருத்தில் அதனுடைய உபயோகம் மட்டுப்படுத்த பட்டது. தார்காலத்தில் அனைவரும் காயத்ரி ஜெபிக்கலாம் என்பது நிறுவப்பட்டுள்ளது, ஆதலால் இவற்றை பற்றி விவாதித்தல் அவசியமற்றது”

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...