குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 04, 2012

மனிதனின் சூட்சும தன்மை - மனிதன் சூட்சும பொறிகளை உடையவன் (சூட்சுமப் பார்வை - பகுதி 03)

உலகில் உள்ள நமது பௌதீக உணர்வுகளால் அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சூட்சுமம் செயற்படுகிறது என்பது பற்றிசென்ற பதிவில் பார்த்தோம். இன்று மனிதனில் இந்த சூட்சுமத்தினை உணரக்கூடிய தன்மை உண்டா? என்பது பற்றிப் பார்ப்போம். 

சென்ற பதிவின் அடிப்படையில் மனிதனின் எந்தவொரு ஸ்தூல உணர்விற்கும் நிகரான சூட்சும உணர்வு இருத்தல் வேண்டும் என்பதனை அனுமானித்திருப்பீர்கள். 

மனிதன் உணர்வு எதன் மூலம் செயல் கொள்ளுகிறது, அதாவது கண் மூலம் பார்க்கிறோம் என்றால் கண் ஒளியினை ஏற்று மூளையில் செலுத்த மூளை அதனை படமாக்க அதனை உணர்வது மனம். மனதிற்கு உணர்வினை தருவது எது? ஆன்மா. 

மனமும் ஆன்மாவும் எமது பௌதீக கருவிகளால் உணரமுடியாதவை, அவை எப்படி தோற்றம் பெற்றது என்பது பற்றி எமது முன்னோர்கள் கூறுகிறார்கள். 

"மனித உடல் மூலப்பிரகிருதியால் ஆனது போல மனித மனமும் பிரபஞ்ச மனமாகிய மூலத்திலிருந்தே தோற்றம் பெற்றது, அதுபோல் ஆன்மா பரமான்மா எனப்படும் இறைவனில் இருந்து தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சுருக்கமாக சொன்னால் எமது பௌதீக, சூட்சும கரணங்களுக்கு சரியான பிரபஞ்ச கரணங்கள் எம்மைச் சூழ, எம்மில் கலந்து உள்ளது என்று உணர்ந்திருந்தனர். இதையே "அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு" என்று சித்தர்கள் கூறிவைத்தார்கள். இந்த சூஷ்ம நிலையினை உணர்ந்த முன்னோர்கள் இது ஏழு படிமுறைகளில் செயல் கொள்வதாக அறிந்துள்ளனர். இவற்றையே ஏழு உலகங்கள் என வர்ணித்து வைத்தார்கள், அவற்றின் தொடர்பினை ஏற்படுத்தும் மையங்கலே உடலில் உள்ள மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரையிலான ஏழு ஆதாரங்களாகும். 

சாதாரணமாக மனிதனிற்கு பௌதீக உலகத்துடன் தொடர்பு கொள்ள கூடிய புலன்கள் மட்டுமே வளர்ச்சியடைந்திருக்கும். குண்டலினி யோக மொழியில் சொல்வதானால் மூலாதார சக்கரம் மட்டுமே விழிப்படைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் பலர் தமது மூலாதாரசக்கரத்தினை பாழ்படுத்திய நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இது பற்றி தனிக்கட்டுரைத் தொடரில் ஆராய்வோம். இங்கு கூறவருவது மனிதனில் சூட்சுமப் பொறிகள் உண்டு என்பதே!

சுருக்கமாக கூறுவதானால் 
  • மனிதனது பௌதீக உடலையும் தாண்டி மனிதனுக்கு சூட்சும உலகுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் உள்ளது.
  • அந்த ஆற்றல் மனதாலும், ஆன்மாவாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இந்த சூட்சும உலகு ஏழு படி நிலையில் உள்ளது, இதனையே ஏழு உலகங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏழு உலகங்களே காயத்ரி மந்திரத்தின் வ்யாக்ருதிகள் எனப்படும் பூர், புவஹ, ஸ்வஹ, மஹ, ஜன, தப, ஸத்யம் எனப்படுவன. சாதாரண காயத்ரியில் முதல் மூன்று வ்யாக்ருதிகளே உச்சரிக்கப்படும், காயத்ரி மந்திரத்தின் உண்மையான பயன்பாடே மனித பரிணாமத்தினை ஒவ்வொரு உலகமாக உயர்த்தி ஸத்யமாகிய பரமான்வுடன் ஒன்றுவதுதான் அல்லது சூட்சும உலகுடன் தொடர்புகொள்ளும் முறையினைக் கூறுவது.  சாதாரண நிலையில் பூர்- பூமி, புவஹ - பிராண உலகம், ஸ்வஹ - மானச உலகம் இவற்றை தொடர்பு கொள்ளும் சக்தியினைத்தரும், ஏனெனில் இவை மூன்றுமே மனித வாழ்வில் உடனடி தொடர்பில் உள்ளவை, இதற்கு மேலுள்ள உலகங்கள் ஆன்ம சக்தி வலுப்பெற்றவர்கள் மாத்திரமே தொடர்பு கொள்ளக்கூடியவை. காயத்ரி மந்திர சாதனை மூலம் சூஷ்ம உலகுடன் தொடர்புகொள்ளும் முறை பற்றியும் வேறொரு பதிவில் பார்ப்போம்.
  • ஆகவே மற்றைய உலகுடன் தொடர்பு தொடர்பு கொள்ள எமது சூஷ்ம உடலில் உள்ள மேற்கூறிய ஏழு நிலைகளை செயல் படுத்தினால் அந்தந்த நிலைக்கு ஏற்ற சூட்சும பார்வை, புலனுணர்வுகள் ஏற்படும். 
  • பௌதீக பார்வையினை பெற கண்களும் மூளையும் நரம்பும் உள்ளது போல், சூஷ்ம பார்வையினை பெற மனம், புத்தி, சித்தம், அஹங்க்காரம் என்ற அந்தக்கரணங்கள் உள்ளன. 
  • உதாரணமாக கனவு நிலையில் எமது கண்கள் செயற்படுவதில்லை, ஆனால் காட்சிகளை காண்கிறோம், எப்படி? சித்தமாகிய ஆழ்மனதில் பதிந்த எண்ணப்பதிவுகள் உறக்க நிலையில் மனதில் செயற்பட்டு காட்சிகளாகின்றது, அதனை புத்தியும் அஹங்காரமும் ரசிக்கின்றன. இதுபோல் குறித்த சூட்சும உலகில் ஒருவிடயத்தினைப் பற்றி மனதினை இருத்தி ஆன்மசக்தியினை செலுத்தினால் அந்த உலகத்திற்கான காட்சியினை காணலாம்.
  • எப்படியெனில் ஒருவருடைய கர்மா என்ன என அறிய முதலில் எமது பிராண, மன உடலில் கவனத்தினை செலுத்தி பின்னர் அதன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள அவரது கர்மா பற்றிய சம்பவங்கள் மனதில் திரைப்படம் போன்று ஓடத்தொடங்கும். 
  • இந்த அடிப்படையிலேயே சூட்சுமப் பார்வை செயற்படுகிறது. இதனையே சூஷ்ம திருஷ்டி எனக் கூறுவர். 
அடுத்த பதிவில் சூட்சும திருஷ்டியின் அறிவியல் அடிப்படை பற்றி பார்ப்போம்.

சத்குரு பாதம் போற்றி!

Tuesday, July 03, 2012

சித்தர் காப்பு பிரயோகம்

எனது ஆன்மீக சகோதரர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது, வாசகர்களுக்கு பயன்படும் எனக் கருதி இங்கு பதிகின்றோம், விநாயகர் கவச பதிவில் கூறப்பட்டது போன்று இதனையும் பிரயோகிக்கலாம். 

"முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலைகாப்பு; 
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ; 
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர்பாதங் காப்பு ; 
அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ; 
அன்பே உருவாக்கும்அகப்பேய் பாதங் காப்பு ; 
பரம கயிலாய குரு போகர் பாதங் காப்பு ; 
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு; 
சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர் பாதங் காப்பு ; 
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங் காப்பு ; 
வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர் பாதங் காப்பு ; 
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங் காப்பு ; 
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர் பாதங் காப்பு ; 
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங் காப்பு ; 
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங் காப்பு ; 
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங் காப்பு ; 
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங் காப்பு ; 
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங் காப்பு ; 
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங் காப்பு ; 
கொல்குணம் போக்கும் கோரக்கர் பாதங் காப்பு ; 
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங் காப்பு ; 
தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்டதேரையர் பாதங் காப்பு ; 
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங் காப்பு ; 
போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர் பாதங் காப்பு ; 
நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ; 
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ; 
பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ; 
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ; 
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ; 

காப்பான கருவூரார் , போகநாதர்கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரமம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார்கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ".

குருப்பூர்ணிமை



இன்று குருப்பூர்ணிமை நாள், அவரவர் குருவை ஸ்தூலமாகவும், மானசீகமாகவும் வணங்கி ஆசிபெற சிறந்த நாள். இந்த நன்நாளில் குருவைப்பற்றி தியானிக்க உதவியான சில வரிகளை இங்கு பதிவிடுவோம்.



குருமண்டல தியானம் குரு கீதையின் படி...

ஹம்சம் எனும் இரண்டு சஞ்சரிக்கும் இதழ்களைக் கொண்ட தெய்வீகமான சஹஸ்ராரத் தாமரையில் உலகின் தோற்றத்திற்கும், மறைவிற்கும் காரணமாயும், பல உடல்களில் உறைவதாயும், சுதந்திரமாயும், ஆனந்தமளிப்பதாயும், ஆதியிலும், அந்தத்திலும் ஒரு நிலையுடையதாயும், பிளவுபடாததாயும், அறிவென்னும் சுவை நிறைந்ததாயும் அளவு கடந்ததாயும், மங்கள வடிவினதுமானதும், அஷரப்பொருளே உருக்கொண்டு கண்ணெதிரியில் வந்தாற்போன்றதாயும், எங்கும் நிறைந்ததாயும், என்றும் உளதாயும் விளங்க்கும் குருபதத்தை தியானிக்கிறேன்.

எங்கும் வியாபித்தவரும், மாசற்றவரும், என்றுமுள்ளவரும், சிறந்தவரும், பாகுபாடற்றவரும், என்றும் ஆனந்தமே வடிவானவரும், இன்பத்திற்கு ஒரே உறைவிடமானவரும், என்றும் மங்கள ஸ்வரூபியும்,ஆவயம் பிரகாசரும், பரமஹம்ஸரும், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவரும், தங்கு தடையற்ற சகல சாஸ்திர வடிவினரும் ஆகிய ஆதிதேவரை, என்றும் மலர்ந்த சகஸ்ராரக் கமலத்தில் மறைந்துள்ள அஷர மண்டபத்தில் தியானிக்கிறேன். 

ஓம் ஸத்குருபாதம் போற்றி!

ஓம் நவகோடி சித்தர்பாதம் போற்றி!



Monday, July 02, 2012

சூட்சுமப் பார்வையின் செயல்முறை அடிப்படை என்ன? - பகுதி 02

எந்த ஒரு விடயத்திற்கும், செயலுக்கும், காரியத்திற்கும் காரண காரியத் தொடர்பு இருக்கும் என்பது பற்றி பொதுவாக அடிப்படை அறிவியல் பயின்றவர்கள் அறிந்திருப்பார்கள். பௌதீக விஞ்ஞானத்தில் பொதுவாக ஒரு காரியத்தின் மூலமாக பௌதீக காரணத்தினையே கண்டறிவார்கள். உதாரணமாக உடலில் நோய் வந்தது என்றால் அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவு, பற்றீரியாத்தாக்கம், நோய்க்கிருமி என பௌதீக காரணங்க்களேயே கண்டறிவார்கள். ஆனால் எமது முன்னோர்கள் சித்தர்கள் ஒரு காரியத்திற்கான காரணம் பௌதீகத்திற்கு வருவதற்கு முன் அது சூஷ்மத்தில் உருவாகி வலுப்பெற்ற பின்னரே பௌதீகத்திற்கு வருகிறது என்று கண்டறிந்தார்கள். 

அதுபோல் இந்தப்பௌதீக உலகில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தும் ஓர் அறிவு சக்தி நிறைந்துள்ளது என்பதனையும் கண்டறிந்தார்கள். எப்படியென்றால் ஓர் விதை எப்படி மரமாகிறது என்பதற்கு கேள்வி பௌதீக விஞ்ஞானத்தில் விதையில் உள்ள டி.என்.ஏ அதன் பெற்றோரிலிருந்து சேகரித்த தகவலுக்கும் அதன் சுற்றுப்புற சூழலின் தன்மைக்கும் ஏற்ப வளர்ச்சி அடைகிறது எனப்பதில் கிடைக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்தறியும் உணர்வு ஒன்று எல்லாவற்றிலும் உள்ளது என்பதனையும் சித்தர்கள் கண்டறிந்தார்கள். 

ஆக ஒரு பொருள், செயலிற்கான சூஷ்ம செயல் முறையும் அதனை ஒழுங்கு படுத்தும் அறிவு சக்தியுமே உலகின் அனைத்து செயல், காரியங்களுக்கான அடிப்படை என்பதே சித்த வித்தை, யோக வித்தை கற்க விரும்புபவர்கள் அடிப்படையில் புரித்து கொள்ளவேண்டிய விடயமாகும். இந்த அடிப்படையிலேயே அனைத்து சாதனைகள், தியானம், அற்புதங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. 

சூஷ்ம காரணங்கள் திடுமென ஸ்தூலத்தில் வெளிப்படுவதில்லை. உதாரணமாக புற்றுநோய் ஒருவருக்கு வருகிறது என்றால் வெளிப்படையாக தெரிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கான குறிகள் சூஷ்ம உடலில் தோன்றி செயல் கொள்ளத்தொடங்கி இருக்கும். இப்படி அனைத்து செயல்களும் சூஷ்மத்தில் செயல்கொள்ளத்தொடங்கியே ஸ்தூலத்திற்கு வெளிப்படும்.

இந்த அடிப்படையில் சூஷ்மப் பார்வை எப்படி செயல் புரிகின்றது என்பதனை விளக்குவோம். 

ஸ்தூலத்தை தாண்டி சூஷ்மத்தினை பார்க்கும் சக்தியினை விழிப்படையச் செய்து, பின்னர் அதனை உணர்வுமயமான அறிவு சக்தியுடன் சேர்க்கத்தெரிந்தவனுக்கும் ஒரு பொருளின் பரிணாமம் விளங்கும் என்று ஒரு வார்த்தையில் குருதேவர் கூறுவார். இந்த வார்த்தை சற்று செறிவாக உள்ளதால் இதனை தற்கால உதாரணம் ஒன்றுடன் ஒப்பு நோக்கி விளங்கிக்கொள்வோம். 

உதாரணமாக கணிதக் கோட்பாடுகள் அடங்கிய மாதிரியுரு மென்பொருள் (Mathematical modeling software) ஒன்றினை எடுத்துக்கொள்வோம். இவற்றில் நீங்கள் உள்ளீட்டைக் (Input) கொடுத்தால் அது வரைபடமாக (Graph) ஒரு தொகுதியின் செயன்முறையினை (Functionality of the System) வெளிப்படுத்தும். இந்த செயன்முறைக்கு பின்னால் உள்ள அடிப்படையினை எடுத்து நோக்குவோமானால் குறித்த உள்ளீட்டினைக் கொடுக்கும் போது அவற்றை பெற்று, எமது தெரிவிற்கு ஏற்ற கணிதக் கோட்பாடுகளை தானாக தெரிவு செய்து, உள்ளே ப்றோகிறாம் மொழியில் எழுதப்பட்டுள்ள சமன்பாடுகள் மூலம் தீர்த்து எமக்கு விடையினை தருகிறது. இதே போன்ற செயன்முறைதான் சூஷ்மப் பார்வையிலும் நடைபெறுகிறது. உள்ளீடு என்பது எமது மனம் ஒருமைப்படும் விடயம் (நாம் சூஷ்ம பார்வையில் தெரிந்து கொள்ள எடுக்கும் பொருள்) அவற்றை சரியான இடத்தில் (இது எப்படி என்பது பின்வரும் பதிவுகளில் கூறப்படும்) ஒன்ற அவை இந்த பிரபஞ்ச விதிக்கேற்ப (பிரபஞ்ச விதியே கணிக்கும் சமன்பாடுகள்) எப்படி பரிணாமம் அடையும் என்பதனை தெய்வ அறிவு கணித்து நேருக்கு நேர் படத்தினைப் பார்ப்பது போல் காட்டும். மேற்கூறிய விளக்கத்தின் மூலம் சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுகிறது என விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். 

இந்த அடிப்படையில் எந்தவொரு பொருளினதும் நிகழ்கால, எதிர்கால, கடந்த கால அமைப்பு, பரிணாமங்களை அறிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் மேலும் சில விடயங்களை விளங்கிக்கொள்ளலாம், காத்திருங்கள்,

சத்குருபாதம் போற்றி

Sunday, July 01, 2012

சித்த வித்யா பாடங்கள்: 18 (அ) சூஷ்ம திருஷ்டி - சூட்சும பார்வை



உலகில் பலகாலமாக எதிர்காலத்தினை கணித்து அறிந்தவர்கள் (ஜோதிடத்தின் மூலம் அல்ல!), நடந்த சம்பவங்களை தமது மானச சக்தி மூலம் அறிந்தவர்கள் பலர் இருந்துள்ளார்கள், இருந்தும் வருகிறார்கள். இவர்கள் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார்கள் என்பதனையே இந்த கட்டுரைத்தொடர் ஆராயப்போகிறது. அது மட்டுமன்றி சூஷ்ம திருஷ்டியினைப் பெறுவதற்கு உரிய சாதனைகள் எவை என்பது பற்றியும் பின்வரும் பதிவுகளில் விளக்கப்பட உள்ளது. அதனால வாசகர்களே ஆர்வமுடன் இந்த பதிவுத்தொடரினை எதிபார்த்து இருங்கள்.

இன்றையகாலகட்டத்தில் ஈ.எஸ்.பி, சைக்கோமெட்டரி என அதிதீத புலனாற்றல்கள் பற்றி பலர் படித்தறிந்திருப்பீர்கள். இந்த சூஷ்ம திருஷ்டி என்பதும் அத்தகைய ஆற்றலில் ஒன்றுதான். சூஷ்ம திருஷ்டி என்றால் சூஷ்மத்தினை பார்த்தறிதல் என்று பொருள். பொதுவாக பார்வை எனப்படுவது ஸ்தூலப் பொருட்களை பார்ப்பதையே கருதுவோம். சூஷ்ம திருஷ்டியில் ஒரு பொருளின் சூஷ்ம அமைப்பினை பார்த்தறியலாம். 

எது சூஷ்மம்? மனிதனை எடுத்துக்கொள்வோம், மனிதனது உடல், அங்கங்கள், ஸ்தூலம்! மனம், உணர்வு, ஆறு ஆதாரங்கள், பிராண ஓட்டம் என்பன சூட்சுமம். சூஷ்ம திருஷ்டி என்பது பௌதீக கண்களால் பார்ப்பதிலிருந்து மாறுபட்டது. எதிர்காலம், கடந்த காலம் என்பனவற்றின் பதிவுகள் மிக சூஷ்மமாக இந்த பிரபஞ்சத்தில் பதியப்பட்டுள்ளது, ஆக சூஷ்ம திருஷ்டி உள்ள ஒருவர் அவற்றை கண்டறியும் ஆற்றலைப்பெறுகிறார் என்பதே இந்த ஆற்றலின் மூலம் கடந்த கால, எதிர்கால சம்பவங்களை அறிகிறார் என்று பொருள். அதுபோல் ஒருவருடைய எண்ணங்களும் சூஷ்மமாக இந்த பிரபஞ்சத்தில் பரவியிருக்கும். அவற்றையும் சூஷ்ம திருஷ்டி உடைய ஒருவர் கண்டறியலாம். 

சூஷ்ம திருஷ்டி என்றால் சூட்சும பார்வை என்று பொருள் எனச் சொன்னோம், அப்படியானால் கண்களால்தான் இவற்றைப் பார்ப்போமா? என்ற கேள்வி எழுகிறதல்லவா! சூட்சும பார்வை என்பது வெறும் கண்களால் பார்பது என்ற பொருள் அல்ல, எமது கண்களை எவ்வளவு விருத்தி செய்தாலும் அவற்றால் சூட்சும பொருட்களையோ, எதிர்காலத்தினையோ, இறந்தகாலத்தினையோ பார்க்க முடியாது. இது வேறொரு சாதனை மூலம் சாதிக்கப்படுவது, அவை பின்வரும் பதிவுகளில் பதியப்படும். 

அதுபோல் ஒருவர் மனம் ஒன்றி ஏகாக்கிர நிலையில் இருக்கும் போது மனதில் திடுமென சில எண்ணங்கள் உதித்து பிரச்சனைக்கு வழிகாட்டும், இந்தகைய நிலையினைத்தான் சூஷ்ம திருஷ்டி என்பதா? எனக் கேட்பர். இந்தக் கேள்வியும் நியாயமானதே, மன ஏகாக்கிரம் மூலம் உணர்வு ஒன்றி பெறுவதல்ல சூட்சும பார்வை. 

சூட்சும பார்வை என்பது என்ன என்பதனை எமது குருநாதர் கண்ணைய யோகீஸ்வரர் விளக்கிய வார்த்தைகளில் அப்படியே தருகிறோம். 

" சூஷ்ம திருஷ்டி படைத்தவன் ஒரு சாதாரண மனிதன் நிகழ்கால சம்பவத்தை எப்படித் தன் கண்களூடாக நேருக்கு நேர் பார்ப்பானோ அப்படி கடந்த கால நிகழ்கால சம்பவங்களை அறிகிறான், ஒரு சாதாரண மனிதனிற்கு கடந்தகால சம்பவங்களும் நிகழ்கால சம்பவங்களும் தற்போது இல்லாத ஒன்றாக இருந்தாலும் சூஷ்ம திருஷ்டி உள்ளவனுக்கு அச்சம்பவங்கள் நிகழ்காலத்தில் நடப்பதுபோலவே அனுபவிப்பான். ஒருவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இடம் எப்படி இருந்தது என்று அறியவேண்டி சூஷ்ம திருஷ்டி சாதனையினை உபயோகித்தால் அவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தின் அமைப்பு, வீதிகளின் அமைப்பு, வீடுகள், வாழ்ந்த மக்கள் என்பவற்றை நேருக்கு நேர் காண்பது போல் காண்பான்"

அதாவது அவன் அந்த இடத்தில்,சம்பவத்தில் இருந்த உணர்விலேயே விடயங்களை நேருக்கு நேர் பார்த்து அறிந்து கொள்வான். 

ஆகவே சூஷ்ம திருஷ்டி என்பது மன ஊகத்தினால் தெரிந்து கொள்ளும் முறை அல்ல, நேருக்கு நேராக பார்த்தறிவது என்று பொருள். 

அடுத்த பதிவில் சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். 

சத்குரு பாதம் போற்றி! 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...