குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, September 25, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை -‍ (பகுதி 01)


காயத்ரி மந்திரத்தினை அனைவரும் மானசீகமாக எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்க முடியும், அதற்கு எந்த வித கட்டுப்பாடோ நிபந்தனைகளோ, புறச்சுத்த நிபந்தனையோ தேவையில்லை. ஆனால் குறித்த நேரத்தில் ஒழுங்குமுறையாக அனுதினமும் செய்துவருவதால் பெறும் நன்மைகள் ஏராளம். இது மனதினை ஒழுங்குபடுத்தி எமது அந்தக்கரணங்களை படிப்படியாக் சுத்தி செய்து கர்மாவினை வெல்லும் வழியில் செலுத்தும். பலரும் பூஜை புனஸ்காரம்  என ஒரு கடமைக்காக இயந்திரத்தனமாக வழிபாடுகளை நடாத்தி வருவர் இதனால் எந்தவித பயனும் கிடைப்பதில்லை.

தெய்வ உபாசனை என்பது எமது உணர்வு மனத்தினை சுத்திசெய்து அந்த தெய்வத்தின் குணங்களை எம்மில் உருவாக்கும் ஒரு சாதனை ஆகும். அதாவது ஒவ்வொரு அங்கத்தினையும் ஆழ்மாக புரிந்து அந்த செயல்முறை எமது சூஷ்ம உடலில் எந்தவித மாற்றத்தினை செய்கிறது என்பதனை அறிந்து செய்யவேண்டும். இப்படிச் செய்யும் போதே உண்மையான மாற்றத்தினை, பலனினை அறிய முடியும்.

முதலில் காயத்ரி உபாசனை செய்யவிரும்பும் சாதகன் தனது மன அமைப்புக்கு உகந்த உபாசனை முறை எது என்பதினை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும். உபாசனை முறை இரு வகைப்படும். ரூப உபாசனை, அருவுருவ உபாசனை,

ரூப உபாசனை செய்யவிரும்புபவர்கள் பிராணபிரதிஷ்டை செய்த காயத்ரி தேவியின் படம் ஒன்றினை தமது சாதனா இடத்தில் பிரதிஷ்டை செய்துகொள்ளவேண்டும். அதற்கு மலர்கள் சாற்றி, ஊதுபத்தி, விளக்கேற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அருவுருவ உபாசனை செய்ய விரும்புவபர்கள் விளக்கு ஒன்றினை ஏற்றிக்கொண்டு அந்த சுடரில் ஆவாஹனம் செய்யலாம். அல்லது மனதில்சூரியன், மற்றைய சூட்சும ஒளியில் தேவியின் சக்தியினை ஆவஹிக்கலாம். சிலருக்கு உருவங்களை மனதில் காண்பதற்கு கடினமாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த வித உபாசனையினை செய்யலாம்.

அதிகாலையே உபாசனைக்கு சிறந்த நேரம், வசதிப்படாவிட்டால் சூரிய அஸ்தமன நேரத்திலும் செய்யலாம், முன்னர் சாதனா ஒழுக்க பகுதியில் கூறப்பட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இந்த எளிய உபாசனை கீழ்வரும் பகுதிகளை உடையது;
  • குரு வணக்கம்
  • பிரணாயாமம்
  • காயத்ரி நியாசம்
  • தேவி ஆவாஹனம்
  • தியானம்
  • ஜெபம்
  • ஜெபசமர்ப்பணமும் பிரார்த்தனையும்
இப்பொழுது இதனை வாசிக்கும் அன்பர்கள் எப்படி இவற்றையெல்லாம் செய்வது எமக்கு சமஸ்கிருதம் தெரியாதே! என்று உங்கள் மனம் கூறுவது தெரிகின்றது.

இதே கேள்வி எமக்கும் எமது குருதேவரை அண்டி காயத்ரி சாதனை பற்றி முதலில் கேட்டபொழுது ஏற்பட்டது, அதற்கு அவர் (காயத்ரி சித்தர்) அளித்த பதில் "காயத்ரி தேவி எல்லா அறிவுகளினதும் தாய், அவளை வழிபட மொழி ஒரு தடையில்லை, எந்த மொழியிலும் வழிபடலாம், உபாசனையில் தெய்வத்துடன் அன்பை வெளிப்படுத்தும் பகுதிகளை தமிழிலும், மந்திரசக்தி மூலம் தெய்வ சக்தியை கவரவேண்டிய இடத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களையும் பயன்படுத்தலாம், இதனால் எந்த குறையும் வராது, மந்திரங்களை சமஸ்கிருதத்திலேயே பயன்படுத்த வேண்டியதன் காரணம் அவற்றின் ஒலியமைப்பும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை தொடர்ச்சியாக ஜெபிக்கப்பட்டு வருவதால் அதனை பயன்படுத்துபவர்களது ஆத்மசக்தியும் அதில் பதிப்பிக்கப்பட்டு வரும், அதனை நாமும் ஜெபிக்கும் போது அதன் சக்தி பன்மடங்காகும்" என விளக்கம் அளித்தார்.

இதன் படி இந்த உபாசனை முறையின் அங்கங்களும் தமிழிலேயே காணப்படும், மந்திரங்கள் மட்டும் சமஸ்கிருத ஒலியமைப்பில் காணப்படும். இந்த முறை அகஸ்திய மகரிஷியிடம் நேரில் வித்தை பயின்ற மஹாயோகி கண்ணைய யோகீஸ்வரரால் உருவாக்கப்பட்ட சித்தர் முறை பத்ததி. ஆகவே சமஸ்கிருதம் பற்றி நன்கு அறியாதவர்களும் காயத்ரி உபாசனையின் முழுமையான பலனைப் பெறலாம்.

அடுத்த பதிவில் உபாசனையின் அங்கங்கள் பற்றி பார்ப்போம்.

1 comment:

  1. அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
    நன்றி
    வணக்கம்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...