குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, September 27, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 03)


சென்ற பதிவில் குருவணக்கம் பற்றிப் பார்த்தோம், இந்தப்பதிவில் பிரணாயமத்தின் அவசியமும் செய்முறையினைப் பற்றியும் பார்ப்போம்.

காயத்ரி உபாசனையில் பிரணாயாமத்தின் முக்கியத்துவம்

காயத்ரி என்பதே பிராணனை காப்பாற்றும் உபாசனைதான். இந்த விளக்கமே பிரணாயாமத்தின் அவசியத்தினை விளக்கும். எந்த உபாசனையாக இருந்தாலும் மனதிலும், பிராணனிலும் செயற்பட வேண்டும். பிராண ஓட்டம் சரியாக இருந்தால் மட்டுமே மந்திர அலைகளால் உருவாகும் தெய்வ சக்தி சூஷ்ம உடலில் சேமித்து வைக்கப்படும். இதனால் பிராணனை ஒழுங்கு படுத்துதல் மிகமுக்கியமான ஒரு அங்கமாகும். பிரணாயாமம் என்றவுடன் பலவாறான மூச்சுப்பயிற்சி என்று அவசரப்பட்டு முயற்சிக்க ஆரம்பித்து விடாதீர்கள். உபாசனையில் பிரணாயமத்தின் அடிப்படை நோக்கத்தினை புரிந்து கொண்டால் பயிற்சி இலகுவாகிவிடும்.

பிரணாயாமத்தினை இருவகையான சாதகர்களை மனதில் கொண்டு கீழ்வரும் பயிற்சிகளை கூறுகிறோம்.

முதலாவது பிரணாயாம பயிற்சியில் நன்கு தேர்ச்சிபெற்ற, கும்பகப்பிரணாயம் கைவந்த சாதகர்கள். இவர்கள் மூன்று தடவைகள் கும்பகப்பிரணாயாமம் செய்து இந்தப்பயிற்சியினை பூர்த்தி செய்யலாம்.

மற்றையவர்கள் பிரணாயாம பயிற்சியில் அதிகம் பரிட்சயமில்லாதவர்கள், இவர்கள் முதுகெலும்பினை நேராக வளையாமல்  நுரையீரல் முழுமையாக நிரம்பும் வண்ணம் மெதுவாக மூச்சினை இழுத்து சில நொடிகள் மாத்திரம் மூச்சினை நிறுத்தி (02-03 செக்கன்) மெதுவாக விடவும். இப்படி 05 - 10 தடவைகள் மெதுவாக செய்து மூச்சு சீராக செல்லத்தொடங்கிய பின்னர் அதே நிலையில் இருந்து உபாசனையின் அடுத்த பகுதியினை செய்யவும்.

இங்கு சாதகர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயம் பிராணனின் ஓட்டமே மனதின் ஓட்டம் , அது ஒருங்கிணைக்கப் பட்டால் மாத்திரமே ஜெபசக்தி மனதில் ஆகர்ஷிக்கப்படும். ஆகவே ஜெப சாதனைக்கு முன்னர் பிராணனை ஒழுங்குபடுத்த இந்த எளிய சாதனையினை செய்து வாருங்கள். 

அடுத்த பதிவில் உபாசனையின் அடுத்த அங்கமான காயத்ரி நியாசம் பற்றி பார்ப்போம். 

ஸத்குருபாதம் போற்றி

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...