குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 24, 2012

சூஷ்ம பார்வையில் இச்சா சக்தியின் பயன்பாடு (பகுதி 06)


இந்த பதிவினை வாசிக்கும் முன் புரிதலுக்கு கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் வாசித்தபின் வாசிக்கவும்.


சென்ற பதிவுகளில் சூஷ்ம பார்வை சஹஸ்ரார கோளத்தில் உள்ள ஒளியாலும் ஆக்ஞா சக்கரத்தின் மீது செலுத்துவதால் சூஷ்ம பார்வை உண்டாகிறது என்பது பற்றிப் பார்த்தோம். இந்தப்பதிவில் இதனை எப்படி சாதிப்பது என்று பார்ப்போம். 

சகஸ்ரார ஒளியின் அலைவேகங்களின் வேற்றுமைதான் வெவ்வேறு உலகங்கள், மன உலகங்கள் என்பது சகஸ்ரார ஒளியலையின் அதிக வேகமுடைய உலகம், பிராண உலகம் என்றால் அலைவேகம் குறைந்த உலகம். ஆக இந்த ஒளியின் அலை வேகத்தினை கட்டுப்படுத்த வெவ்வேறு உலகங்களுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஏற்படும். இதை எப்படி சாதிப்பது. அதற்கு மனிதனிடம் காணப்படும் சாதனம் தன் இச்சாசக்தி (WILL POWER). 

இறைவன் இந்த உலகை தனது இச்சா சக்தியால் படைத்தான் என கேள்விப்படுகிறோம், இச்சித்தால் நினைப்பது கிடைக்கும் எனக் கூறுவார்கள். இதை பலர் தவறாக ஏக்கத்துடன் ஆசைப்படுவது எனப் பொருள் கொண்டு அதிகம் அதிகம் ஆக ஆசைப்பட்டி இறுதியில் ஒன்றுமே கிடைக்காமல் போகின்றனர். இச்சாசக்தி என்பது மனதில் எழும் எண்ண அலைகளை படிப்படியாக கட்டுப்படுத்தி, பதஞ்சலியார் கூறுவது போல் சித்த விருத்தி நிரோத நிலை அடைந்த பின்னர் மனதினை ஏகாக்ரப்படுத்தி ஒரு எண்ணத்தில் மாத்திரம் மனதினை இயங்கவைக்கும் நிலை. இது வார்த்தைகளில் இலகுவாக கூறப்பட்டாலும் கடுமையான பயிற்சியின் மூலம் அடையும் நிலை, ஆனால் சிரத்தையுடன் பயிற்சித்தால் யாரும் அடையக்கூடிய நிலை. இந்த நிலையில் எமது இச்சா சக்தியினை ஆக்ஞா கோளத்தில் நிறுத்தி பிராண உலகில் செலுத்தினால் பிராண உலகு காட்சிகள் மனத்திரையில் தெரியும், மன உலகில் செலுத்தினால் மன உலகு காட்சிகள் தெரியும். இந்த முறையின் மூலம் நீங்கள் அறிய வேண்டிய விடயங்களில் உங்கள் இச்சா சக்தியினை செலுத்தி அறிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் சூஷ்ம திருஷ்டியின் வகைகள் பயன்பாடு பற்றி சிறிது பார்ப்போம்,

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...