குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, September 23, 2012

காயத்ரி சாதனை மூலம் சாதகன் அடையும் நவ சித்திகள் (ஒன்பது அரிய ஆற்றல்கள்)

பெரும்பாலானோர் சித்திகள் என்றவுடன் வானில் பறத்தல், நீரில் மிதத்தல், உருவை மறைத்தல் என்பன மட்டுமே சித்தி என எண்ணிக்கொண்டுருக்கின்றனர். அதை விட மனித வாழ்க்கை இன்பமாக அமைய மனதினை பயன்படுத்தி மனிதன் அடைய வேண்டிய சித்திகள் பலது உள்ளது. அத்தகைய ஒன்பது ஆற்றல்களை காயத்ரி சாதனை சாதகனுக்கு கொடுக்கும்.
  1. வாழும் கலையும் வாழ்வின் நோக்கம் அறிதலும்: காயத்ரி மந்திர பாவனையால் மனம் அடையும் ஞானத்தின் பயனாக சாதகன் தனது வாழ்வினை தனக்கும் மற்றவற்களுக்கும் பயனுடையதாக்கி கொள்கிறான். தான் ஆன்மா என்பதனை அறிவதன் மூலம் மரணபயத்திலிருந்து விடுபடுகிறான். இதனால் இன்ப துன்பங்கள் அவனை பாவிக்காத நிலையினை அடைகிறான். இந்த நிலையால் மனம் ஒருமை அடைகிறது. இதனால் வாழ்வில் அவன் தனது முயற்சிகளை முழுமனதுடன் ஈடுபட்டு வெற்றி அடைகிறான்.
  2. பிராணசக்தியிற்கான கவசம்: பிராணசக்தியே ஒரு மனிதனின் உயிராற்றல். காயத்ரி என்பதன் பொருளே பிராணனை ரட்சிப்பது என்பதே. காயத்ரி சாதகனது பிராணன் காயத்ரி சாதனையினால் காப்பாற்றப்படுகிறது. பிராணனின் இழப்பிற்கு மனதின் தவறான நடவடிக்கைகளே காரணம். பிராணன் அதிகமாக சேமிக்கப்பட உடல் நோய்களில் இருந்து விடுபட ஆரம்பிக்கிறது.
  3. வாழ்வில் மேன்மை அடைதல்: காயத்ரி மந்திர ஜெபத்தினால் புத்திமயகோசம் மனதுடன் தொடர்புகொள்ள ஆரம்பிப்பதால் வாழ்வு அனைத்து விடயங்களிலும் மேன்மையினை அடைய ஆரம்பிக்கிறது. அதாவது எண்ணும் எண்ணம், செய்யும் செயல் சரியான வழியில் செல்வதால் மேன்மை அடைய ஆரம்பிக்கிறது.
  4. தூய்மை: அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் ஏற்படுவதால் சாதகனை சூழ காந்த சக்தி தூய்மை அடைந்து அவனை அனைவரும் விரும்ப ஆரம்பிப்பர்.
  5. தெய்வீக பார்வை: இன்று உலகில் யாரைப்பார்த்தாலும் தீயதைப் பேசி, தீயதை நினைத்து, தீய செயலாகவே நடப்பதை கவனித்து வெருகிறோம். உலகம் என்பது ஒவ்வொருவருடைய மனமும் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தின் பிரதிபலிப்பே, தீய எண்ணங்களை உணர்ந்தவர்களுக்கு தீயதாகவும், நல்ல எண்ணங்களுடையவர்களுக்கு நல்லதாகவும் உலகம் தோன்றும்.உண்மையில் உலகம் என்பது எமது ஆழ்மனதில் சேர்ந்த பதிவுகளில் பிரதிபலிப்பே, காயத்ரி சாதகனது மனம் தெய்வ சக்தியினால் நிரப்பப்படுவதால் உலகினை தெய்வ சக்தி நிறைந்த உலகாகவே காண்பான். இந்த ஆற்றலை காயத்ரி சாதனை தரும்.
  6. உயர்ந்த குணங்களும் பண்புகளும்: ஒரு மனிதனின் ஆளுமை என்பது அவனது பண்புகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. காயத்ரி சாதகன் கீழ்வரும் பண்புகளை தனது காயத்ரி சாதனையினால் அடைகிறான். மனிதபிமானம், ஈகை, இனிய பேச்சு, நட்புடன் பழகல், நேர்மை, பொறுமை, பாராட்டும் குணம், கடின உழைப்பு போன்ற குணங்கள்.
  7. பகுத்தறியும் தன்மை: அதாவது எது நல்லது? எது கெட்டது? இதனைச் செய்தால் நனமை வருமா? இல்லையா? இது தேவையா? இல்லையா? இப்படியான ஆற்றல் இல்லாமையினாலேயே மனிதன் மனம் போன போக்கில் சென்று துன்பத்தில் விழுந்து கொள்கிறான், காயத்ரி சாதனை செய்பவனுக்கு பகுத்தறியும் தன்மை அதிகரிக்கும். இதுவே உண்மையான பகுத்தறிவு! காயத்ரி சதகனே உண்மையான பகுத்தறிவாளன்.
  8. சுயகட்டுப்பாடு: மனித உடமும், மனமும் பேராற்றலின் இருப்பிடம்,அதனை சரியான வழியில் பயன்படுத்த ஒரு ஒழுங்குமுறை தேவை. அந்த ஒழுங்குமுறையினை தருவது சுயகட்டுப்பாடு. காயத்ரி சாதகன் சுயகட்டுப்பட்டினை அடைவான்.
  9. சேவை புரியும் மனம்: இன்று பலரும் சேவை என்று மனிதனை கையேந்தும் பிச்சைக்கார்களாக, பச்சாதாபத்துடன் செய்து வருகிறார்கள். உண்மையான சேவை என்பது உதவி தேவைப்படும் நபரிற்கு நாம் செய்யும் உதவியால் அவர் தனது சொந்த முயற்சியில் உந்துதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைய வைக்கும் உதவி. இத்தகைய உதவும் ஆற்றம் காயத்ரி சாதகனுக்கு ஏற்படும்.
இந்த ஒன்பது வகையான ஆற்றல் தனிமனிதனையும் சமூகத்தினையும் அமைதியான, ஆனந்தமான, ஆக்கப்பாதையில் இட்டுச் செல்லும்.

ஆக‌வே இந்த அரிய‌ சாத‌னையினை நீங்க‌ளும் ப‌ய‌ன்படுத்தி உங்க‌ள் வாழ்வினையும் சூழ‌ உள்ளோர் வாழ்வினையும் இன்ப‌பாதையில் இட்டுச் செல்ல‌ குருதேவ‌ரை பிரார்த்திக்கிறோம்.
ஸத்குரு பாத‌ம் போற்றி!

2 comments:

  1. Dear sir,
    Very good information,

    Thank you,

    ReplyDelete
  2. Thanks for the information. Will definitely do.. - CSRK

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...