குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 03, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 01 - தன்னறிவுச் சாதனை)

 பெண்கள் பலகாலம் காயத்ரி சாதனை செய்யக்கூடாது என சமய சுயநலவாதிகளால் மறுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய பார்வையில் எதுவித உண்மையும் இல்லை என்பதும், பெண்களே தெய்வசக்தியின் வடிவானவர்கள் என்பதுமே உண்மையாகும். ஆண் பெண் சேர்க்கையே இந்த உலகாகும், இந்த பிரபஞ்சத்தினை எடுத்து நோக்கினால் அதில் எப்போதும் இருமை காணப்படும். இந்த இருமைகளின் சேர்க்கையே பூரணம், ஆகவே ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண்ணிலாமல் ஆணோ பூரணமடைய முடியாது. இந்த இரண்டு சக்திகளும் சேருவதிலேயே உலகம் வளர்கிறது, இன்பமடைகிறது. ஆகவே இறை சாதனையில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் பார்ப்பது அறியாமையின் வெளிப்பாடே என எமது குருநாதர் கூறுவார். அதுவும் இறைசக்தியின் பிரம்மமான ஞான ஒளியினை உபாசிப்பதில் பேதம் காண்பது ஏற்க முடியாது என்பதனை பல மஹான்களும்  வலியுறுத்தியே உள்ளனர். இந்த‌ வ‌கையில் இந்த‌ப் ப‌திவுத்தொட‌ரில் பெண்க‌ள் ப‌ய‌னுறும் வ‌கையில் சில‌ சாத‌னா முறைக‌ளை கூற‌ உள்ளோம்.

ம‌னித‌னை உருவாக்குப‌வ‌ள் பெண்ணே! ஆக‌வே பெண்க‌ள் ஞான‌ம் பெற்றால்தான் இந்த‌ பூவுல‌கில் ம‌னித‌ர்க‌ள் அனைவ‌ரும் ஞான‌ம் பெற‌முடியும். அந்த‌வ‌கையில் பெண்க‌ள் அனைவ‌ரும் காய‌த்ரி சாத‌னையால் பெறும் ச‌க்தி அவ‌ர்க‌ளூடாக‌ அவ‌ர்க‌ள‌து ச‌ந்த‌திக்கும் க‌ட‌த்த‌ப்ப‌டும். அதாவ‌து காய‌த்ரி சாத‌னை செய்யும் பெண்ணிற்கு பிற‌க்கும் குழ‌ந்தை பிற‌ப்பிலேயே அந்த‌ ஞான‌த்தினையும் ச‌க்தியினையும் பெறும்.

இந்த‌ சாத‌னைக‌ள் எதுவித‌ க‌ட்டுப்பாடுக‌ளோ, நிய‌ம‌ங்க‌ளோ அற்ற‌வை, உங்க‌ள‌து நாளாந்த‌ க‌ட‌மைக‌ள் போல‌ செய்துவ‌ர‌லாம், தீட்டு, பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌ம் என்ப‌வை அவ‌சிய‌ம‌ற்ற‌வை. இவை மான‌சீக‌ சாத‌னைக‌ள், அத‌னால் எதுவித‌ புற‌ நிய‌ம‌ங்க‌ளையும் வ‌லிந்து க‌டைப்பிடிக்க‌த்தேவையில்லை. அவை அனுஷ்டான‌த்தின் போது க‌டைப்பிடிக்க‌வேண்டிய‌வை. ந‌வ‌ராத்ரி காய‌த்ரி சாத‌னையின் பின்ன‌ரோ, ம‌ஹா அனுஷ்டான‌த்தின் பின்ன‌ரோ இவ‌ற்றை செய்தீர்க‌ளானால் உட‌ன‌டிப் ப‌ல‌ன் கிட்டும்.

இவை இலகுவான மானச சாதனைகள் அதிக நேரமோ அல்லது கட்டுப்பாடுகளோ அற்றவை. ஆனால் பலன்கள் அளவிடமுடியாதவை. செய்து பார்த்து உங்கள் அனுபவத்தினை கூறவும்.

முதலாவது


மன ஒருமைப்பாட்டிற்கும் ஆன்மாவினை அறியும் தன்னறிவுச் சாதனை

இந்த சாதனைக்கு முன்னர் குளித்து தோய்த்துலர்ந்த ஆடை  அணிந்து தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தீர்த்தப்பாத்திரத்தில் நீர் வைத்துக்கொள்ள வேண்டும், உங்கள் ஜெபமாலையினை எடுத்துக்கொண்டு ஆசமனம், நியாசம், ஆவாஹனம், ஸ்தாபனம் செய்து தியான சுலோகத்தினை கூறிய பின்னர் தேவியை கீழ் வருமாறு தியானிக்கவும். நடுத்தர வயதுள்ள அழகிய பெண், புன்சிரிப்புடன், வெள்ளை ஆடையுடுத்தி எருதின் மீது அமர்ந்தவளாகவும், நான் கு கரங்களும் அவற்றில் ஜெபமாலை, கமண்டலம், புத்தகம், தாமரை இலை ஏந்தியவளாக தியானிக்கவும். இந்த தியான பாவத்தில் இருந்த வண்ணம் உங்கள் வழமையான ஜெப எண்ணிக்கையினை பூர்த்தி செய்யவும். ஜெபம் மனதிற்குள்ளேயோ, அல்லது உதடு மட்டும் அசைவதாகவே செய்யலாம். 

இந்த தியானம் மனதினை கட்டுப்படுத்தி சத்வ குணத்தினை அதிகரிக்கும். பொதுவாக இந்த தியானம் தமது வாழ்க்கையில் கடமைகளை முடித்தவர்கள், விதவைகள், கணவனை இழந்த பெண்கள் தம்மை ஆன்மீக வாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டியது. இந்த சாதனையால் சாதகி சுயகட்டுப்பாடு, ஞானம், அமைதி, மனவலிமை ஆகியன வளரத்தொடங்கி சாதகி ஒரு முழுமையான யோகினி நிலைக்கு உயர்வார். அவருடைய உணர்வுகள், செயல்கள், வாழ்க்கை முறை தூய சத்வ குணத்திற்கு வந்து ஒரு தபஸ்வினியாக வாழத்தொடங்குவார்.




No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...