குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 11, 2012

யோகத்தில் ஏன் ஒழுக்கம் அவசியம் (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் 04)



யோக சூத்திரத்தின் முதலாவது சூத்திரம் யோகம் என்பது ஒழுக்கம் என்று குறிப்பிட்டது. ஒழுக்கம் என்பது ஒழுங்கு முறைக்கு உட்பட்டு செயற்படும் செயற்பாடாகும். ஏன் இந்தப்பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டே செயற்படுகிறது, இந்த செயன் முறையிலிருந்து மாறுபட்டதாலேயே மனிதன் தனது உண்மையான நிலையைனை மறந்துபோனான். அதனைத் திரும்பிப் பெற ஒழுகவேண்டிய செயன்முறையே யோகம்.

எந்த ஒரு காரியத்தினை செய்யவேண்டுமானாலும் அதனை ஒரு ஒழுங்குமுறைப்படியே செய்யவேண்டும் என்பது அனைவரும் அறிவர். சோறு சமைக்கவேண்டுமானால் அரிசியை கழுவவேண்டும், அடுப்பில் நீரை ஏற்றி கொதிக்க விடவேண்டும், கொதித்து வரும் போது அரிசியை இடவேண்டும், பின்னர் சரியான பதத்தில் நெருப்பை நிறுத்தி எடுக்க வேண்டும், இதை ஒழுங்கான முறைப்படி செய்தால்தான் ருசியான் சோறு கிடைக்கும்.

அதுபோல் மனதினை, உடலினை, பிராணனை சரியான முறையில் பக்குவப்படுத்தி அவற்றை வலுப்படுத்தி பின்னர் அவற்றிலிருந்து ஆன்மாவினைப் பிரித்து, விழிப்புணர்வினை அடைந்து அதன் மூலம் இறைவனை அடையும் ஒழுங்கு முறையான செய்கையே யோகம். இந்த ஒழுக்க முறைகளின் தொகுப்பே யோக சூத்திரம். இவ‌ற்றின் விரிவு ப‌ற்றி ம‌ற்றைய‌ சூத்திர‌ங்க‌ளில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌த‌ஞ்ச‌லியார் த‌ன‌து அடுத்த‌ சூத்திர‌த்தில் யோக‌த்தில் செய்ய‌வேண்டிய செயற்பாட்டினை முத‌லாவ‌து சூத்திர‌த்தில் கூறுகிறார்;

"சித்த‌ விருத்தி நிரோத" ‍ "சித்த‌த்தின் விருத்தியினை நிரோதித்த‌லே யோக‌ம்" (02)

இந்த‌ சூத்திர‌ம் பொருள் கொள்ள‌ப்ப‌டும் வித‌ம் ச‌ற்று சிக்க‌லான‌து, சுவாமி விவேகானந்தல் உட்பட பெரும்பாலான‌ உரையாள‌ர்க‌ள் சித்த‌ம் என்ப‌த‌னை ம‌ன‌ம் என‌வே பொருள் கொள்கின்ற‌னர். இது ச‌ரிய‌ல்ல‌ என்ப‌து எம‌து குருப‌ர‌ம்ப‌ரையின‌ரின் க‌ருத்து, ஏனெனில் ம‌ன‌ம் வேறு சித்த‌ம் வேறு என்ப‌த‌னை குருநாத‌ர் அக‌ஸ்திய‌ரே த‌னது பாட‌லில் கூறியுள்ளார்;

"மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம், மதியிரவி யண்டபிண்ட மானவாறும்"
அக‌த்திய‌ர் ஞான‌ம் 30 ‍ பாட‌ல் 07,

பொதுவாக ம‌ன‌ம் என்ப‌து புத்தி, அக‌ங்கார‌ம், சித்த‌ம் என்ற‌ நான்கினையும் குறிப்பிட்டுச் சொல்லும் பொதுச் சொல். இந்த‌ நான்கு பிரிவுக‌ளும் அந்த‌க்க‌ர‌ண‌ங்க‌ள் என‌ப்ப‌டும்.

இவ‌ற்றில் ம‌ன‌ம் என்ப‌து மேல்ம‌ன‌ம், அதாவ‌து ம‌னித‌னில் ச‌தா செய‌ற்ப‌ட்டுக்கொண்டு, இது என்ன? அது என்ன? என‌ ஆராய்ந்துகொண்டிருக்கும் இய‌க்க‌ கூறு.

புத்தி என்ப‌து எது ச‌ரி, எது பிழை என‌ ஆராயும் கூறு.

சித்த‌ம் என்ப‌து புலன்களால் பெறும் பதிவுகளை சேமித்து வைக்கும் ஆழ்ம‌ன‌த்தினை குறிக்கும்.

அஹ‌ங்கார‌ம் என்ப‌து மேற்கூறிய‌ மூன்றும் செய‌ற்ப‌ட‌த்தேவையான‌ மைய‌மாகும். இந்த மைய‌த்தினை எப்ப‌டி வ‌டிவ‌மைக்கின்றீர்க‌ளோ அத‌ன் ப‌டிதான் ம‌ற்றைய‌ மூன்றும் உருப்பெறும். அதாவ‌து நான் ந‌ல்ல‌வ‌ன் என்ற‌ அக‌ங்கார‌ மைய‌த்தில் இருந்தீர்க‌ளானால் அத‌ன்ப‌டியே உங்க‌ள் சித்த‌ம், புத்தி, மெல்ம‌ன‌ம் என்ற‌ மூன்றும் செய‌ற்ப‌டும். அதேபோல் ம‌றுத‌லையாக‌ இந்த‌ மூன்றினூடாக‌வே அக‌க்கார‌ மைய‌ம் உருப்பெறுகிற‌து. அதாவ‌து மேல்ம‌ன‌ம் பெறும் அனுப‌வ‌ங்க‌ள் புத்தி மூல‌ம் ஆராய‌ப்ப‌ட்டு சித்த‌த்தில் ப‌திய‌ப்ப‌ட்டே "நான் நல்ல‌வ‌ன்" என்ற‌ அக‌ங்கார‌ம் உருவாகிற‌து.

இப்ப‌டி ப‌ல‌ அக‌ங்கார‌ங்க‌ளை உருவாக்கி, உருவாக்கி இறுதியாக‌ எம‌து உண்மையான நான் ஆன்மா எனும் மைய‌த்திலிருந்து வில‌கி இப்ப‌டியான போலியான‌ நானிற்கு வ‌ந்து விட்டோம். இதுப‌ற்றி நாம் இந்த‌ப் ப‌திவில் குறிப்பிட்டுள்ளோம், ப‌டித்துப் பார்க்க‌வும்.

இப்போது இந்த‌ போலியான‌ மைய‌த்திலிருந்து உண்மையான‌ மைய‌த்திற்கு ப‌ய‌ணிக்க‌ப்போகும் ப‌ய‌ண‌மே யோக‌ம். இந்த‌ப்ப‌ய‌ண‌த்தில் எம‌க்கு போலியான‌ மைய‌த்தினை உருவாக்கிய‌ இந்த‌ நான்கு ப‌குதிக‌ளையும் தூய்மைப்ப‌டுத்தி ச‌ரியான‌ மைய‌த்தினை அடையும் வ‌ழியாக ஆக்க‌ வேண்டிய‌ செய‌ல்முறையே யோக‌மாக‌ இருக்க‌ ப‌த‌ஞ்ச‌லியாம் முத‌லாவ‌தாக‌ கூறுவ‌து சித்த‌மாகிய‌ ஆழ்ம‌ன‌தின் விருத்திக‌ளை நிறுத்து என்று!

ப‌த‌ஞ்ச‌லி மன‌தினை ப‌ற்றி முழுமையாக‌ கூறியுள்ளார், ஆனால் சூத்திர‌ங்க‌ளாக‌வே கூறியுள்ளார். சூத்திர‌ங்க‌ள் சுருக்க‌மாக‌ ஆனால் முழுமையாக‌ உரைக்கும் வ‌ல்ல‌மை உடைய‌ குறிச் சொற்க‌ள். அதிலுள்ள‌ ஒவ்வொரு வார்த்தையும் அது கூற‌வ‌ரும் பொருளைப்ப‌ற்றி ஆழ‌மாக‌ உரைக்கும்.

யோக‌த்தின் முத‌ல் ப‌டி ம‌ன‌தின் விருத்தியினை த‌டை செய்ய‌வேண்டும் என‌க் கூற‌வில்லை. ஏனெனில் ம‌ன‌ம் என்பது நான்கு உட்பிரிவுக‌ளுடைய‌து என்பத‌னை ப‌த‌ஞ்ச‌லியார் ந‌ன்கே அறிந்த‌வ‌ர், அவ‌ற்றில் சித்தம் தவிர்ந்த ம‌ற்றைய மூன்றினது விருத்தியினை த‌டை செய்ய‌ இய‌லாது, ஏனெனில் அவை மூன்றும் இருப்பிற்கு அவ‌சிய‌மான‌து. சித்த‌ம் ஒன்றே ப‌திவுக‌ளை சேக‌ரிக்கும் ப‌குதி அத‌னை ஒழுங்கு ப‌டுத்துவ‌தே முத‌ன்மையான‌ செய‌ல் என்ப‌தாலேயே சித்த‌ விருத்தி நிரோத‌ என்றார்.

இத‌னைப் பற்றி மேலும் விப‌ர‌மாக‌ அடுத்த ப‌திவில் பார்ப்போம்!

2 comments:

  1. அருமையான விளக்கம். குறிப்பாய் மனம்,சித்தம்,புத்தி,அகங்காரம் பற்றி விளக்கம் நச்சென்று இருக்கிறது.

    விவேகானந்தர் முதலியவர்களுக்கு மேல்மனம்,ஆழ்மனம் என்பது இரண்டுமே ஒன்றான நிலை இருந்திருக்கலாம்.அதாவது அதிக மனப்பதிவுகள் கொண்ட ஆழ்மனம் என்பது இல்லாமலிருக்கலாம். அடக்கிவைக்கப்பட்டவை (பலபிறவிகளில்) ஆழ்மனமாக உருக்கொண்டிருக்கிறது. இதைத்தான் சித்தம் என்று சொல்வது சரியான பதம். நீங்கள் சொன்னமாதிரி...

    J.கிருட்டிணமூர்த்தி மேல்மனம் என்னவோ அதே குப்பைதான் ஆழ்மனமும்.அதனால் இந்த பிரிவே உன்மனதில் உள்ள ஒரு எண்ணம்தான்.அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. மேல்மனமும் கடந்தகாலம்.ஆழ்மனமும் இறந்தகாலம்.பிறகெதுக்கு பிரிவு என்பார்.இந்த பொருளில் விவேகானந்தரும் குறிப்பிட்டிருக்கலாம்.

    ஆனால் சித்தர்கள் ஆழ்மனதையே சித்தம் என்றார்கள். நாம் இப்போது பழைய சித்தர் நூல்களை வாசிக்கையில் இப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்.எனக்கும் முதலில் இந்த குழப்பம் இருந்தது. நல்ல பதிவு. நன்றிகள்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...