குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 26, 2012

சித்தமும் முற்பிறப்பு சம்ஸ்காரங்களும் (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் 06)

எமது முன்னைய தொடர்களை  வாசித்து விட்டு வரவும்.



சித்தம் எனும் ஆழ்மனம் எமது புறக்கரணங்களாலும் அகக்கரணங்க்களாலும் பெறப்படும் தூண்டல்களை சேமித்து வைக்கும் ஒரு பதிவுக்கருவி என்று முன்னைய பதிவில் பார்த்தோம்.  

இந்தப்பதிவுகளில் இந்தப்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல இதுவரை எடுத்த அனைத்துப்பிறவிகளது பதிவுகளும் உள்ளது, ஆக சித்தம் என்பது எமது முற்பிறப்புகளது தொடபுகளை அறிய உதவும் ஒரு HARD DISK கும் தான். 

சிலருக்கு சிலவிடயங்களில் இனம்புரியாத பயம் இருக்கும். அதாவது அந்த பயத்திற்கு வலுவான காரணம் எதுவும் அவர்கள் அறிந்தவகையில் இருக்காது,  ஆனால் பயம் மட்டும் வலுவானதாக இருக்கும். 

அழகான ஒரு ஆண் அழகே இல்லாத பெண்ணை விரும்புவான். 

ஒரு சில வீட்டில் தகப்பனும் மகனும் ஜென்ம விரோதிகள்  போல் இருப்பார். 

அண்மையில் ஒரு புத்தகம் வாசிக்க நேர்ந்தது, அதன் பெயர் "ஆறுமுகக் கடவுள் உரைத்த பூர்வ ஜென்மங்கள்", வழக்கறிஞர் என். ஞானவேல் அவர்கள் எழுதியது, ஆசிரியர் ஆரம்பகாலத்தில் ஆவியுலக தொடர்பாளராகவும் பின்னர் முருகக்கடவுள் அவரூடாக தகவல் தெரிவிப்பதாகவும், அப்படி அவரை நாடி வந்த அன்பர்களில் விசித்திரமான பிரச்சனைகளுக்கு ஆறுமுககடவுள் அதன் காரணம் என்ன என்பதை தெரிவிப்பதற்கு பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை தெரிவிக்கிறார். மிகவும் சுவாரசியமான புத்தகம் இது, இதனை படிப்பதன் மூலம் எமது விடைகாணமுடியாத பல பிரச்சனைகளிற்கு விடை பூர்வ ஜென்ம கர்மங்களில் இருக்கிறது என்பதனையும், நாம் உத்வேகத்துடன் செய்யும் செயல்களுக்கான பதில் விளைவுகளை கடவுளும் நாம் அறியாதபடி எதோ ஒரு பிறவியில், எமக்கு தெரியாதபடி அனுபவிக்க வைக்கிறார் என்பதனையும் உணர்ந்துகொள்ளலாம். 

கடவுள் மனிதனது விடயம் எதிலும் தலையிடாத ஒரு அதியுச்ச பேரறிவு, மனிதன் தன் செய்வதற்குரிய பலனை தானே அனுபவிக்கவேண்டும். இந்த விளையாட்டில் கடவுள் தனக்காக நாம் செய்யும் செயல்களை பதிவு செய்ய ஒதுக்கி வைத்துள்ள பகுதிதான் சித்தம். 

இதன் பதிவுகளுக்கு ஏற்பவே எமது மனதில் விருத்திகள் ஏற்படுகிறது, இந்த விருத்திக்கேற்பவே மேல்மனத்தில் எண்ணங்கள் ஏற்படுகிறது, இதனை இவ்வாறு விளங்கிகொள்ளலாம், எல்லோரும் ஒரு விடயத்தினை ஒரே மாதிரி பார்ப்பதில்லை, பல கருத்து வேற்றுமைகள் காணப்படும், உதாரணமாக ஒரே வகையான மாம்பழம் ஒருவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும், மற்றொருவருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கும். 

இதைப்போல் பல விடயங்களை நீங்கள் யோசித்தறிந்து கொள்ளலாம், 

இதைப்போல் சித்தத்தில் உள்ள பதிவுகளை சரியான நேரத்தில் தூண்டி விடும் இயக்குனர்கள் தான் கிரகங்கள், குறித்த செயல் நடைபெற வேண்டிய எண்ணத்தினை சித்தத்திலிருந்து வெளிப்படுத்தி செயற்படுத்தும் வேலையினை செய்வது மட்டும்தான் கிரகங்களுடைய வேலையன்றி எந்த கிரகமும் நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல! நல்ல கர்ம பிரபாவம் உள்ளவனுக்கு ஏழரை சனிகாலத்தில் அமோக முன்னேற்றம் காணப்படும், தற்போதைய அரை சோதிடர்கள் கூறும் பலங்கள போல் கெட்டவை அல்ல! ஏழரைச் சனி என்பதே கர்மகாரகன் மனக்காரனாகிய சந்திரக்கு முன் வீட்டிலும், சந்திரனுடனும், அடுத்த வீட்டிலு இருக்கும் காலத்தினை குறிப்பதாகும், இதிலிருந்தே நீங்கள் விளங்கி கொள்ளலாம், மனதினூடாக கர்மத்தினை வெளிப்படுத்தும் காலம் தான் ஏழரச் சனி என்பது. சென்ற பிறப்பில் செய்த கர்மங்களில் பலமானவற்றை (அது நல்லதோ கெட்டதோ) சித்தத்திலிருந்து தூண்டி மனதில் செயற்படுத்தும் வேலையினை சனி பகவான் செய்வார். 

இப்படி சித்தத்தில் செயற்பாடு மிக நுட்பமானது, இவற்றையெல்லாம் அறிந்த பதஞ்சலியார் மனிதன் தனது கர்மபிரபாவங்களை கட்டுப்படுத்தி சமாதியினை நோக்கி செல்லும் வழியான யோகம் என்பது சித்தத்தின் விருத்தியினை நிறுத்ததல் என்றார். 

இந்த முதலாவது சூத்திரத்திலேயே யோகத்தின் ஒட்டுமொத்த இலக்கினையும் கூறிவிட்டார், அப்படியானால் அதற்கு பிறகு ஏன் 194 சூத்திரங்களை கூறினார், இதனை இப்படி எடுத்துக்கொள்வோம், நாம் கொழும்பில் உள்ளோம், திருவண்ணாமலை செல்லவேண்டும் எனபதே எமது பயண இலக்கு! அதனை ஒரே எட்டில் தாவி சென்று விடமுடியாதல்லவா! முதலில் பயணத்திற்கு தேவையான ஆயுத்தங்களை செய்ய வேண்டுமல்லவா! அதுபோல் இந்த சூத்திரத்தில் யோகத்தின் இலக்கினை கூறிவிட்டார், இனியுள்ள சூத்திரத்தில் இந்த இலக்கினை அடைவதற்கான பொறிமுறைகள் என்ன? என்னென்ன முன் தயாரிப்புகள் அவசியம்! வழியில் வரும் தடங்கல்கள் என்ன? இதுபோன்றவற்றினை சுருக்கமாக ஆனால் விளக்கமாக கூறுகிறார். 

இத்துடன் பதஞ்சலியாரின் முதல் சூத்திரத்திற்கான எமது புரிதல் முற்றும். 

இது தொடர்பான கலந்துரையாரல்களை எமது முகப்பு நூல் குழுமத்தில் கலந்துரையாடலாம். 

ஸத்குரு பாதம் போற்றி!

1 comment:

  1. ungaludaiya pathipugal arumaiyaga irukirathu guruji.
    malum ungal puthiya pathipugalai padika aasai
    padukiran guruji
    nantri

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...