குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, March 25, 2013

குண்டலினி சக்தி 03: ஆறாதாரங்களும் குண்டலினி சக்தியும்


************************************************************************************
எனது உரை

இதிலிருந்து மூல நூலின் மொழிபெயர்ப்பு தொடங்குகிறது, இந்த மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பல்ல, மூல நூலில் உள்ள கருத்தினை மாற்றாமல், எல்லோரும் விளங்க கூடிய அளவிற்கு எளிமைப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்தத்தொடரிற்கு வாசிக்கும் வாசகர்களிடமிருந்து இயலுமான அளவு பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.  மற்றும் பேசப்படும் விடயத்தின் புரிதல் விட்டுப்போகாமலும், விளங்கிக்கொள்வதற்காகவும் உபதலைப்புகளை இட்டுள்ளேன். இவை மூல நூலில் இல்லாதவை. 

சிவப்பு நிறத்தில் இலக்கமிடப்பட்டவை மூல நூல் ஆசிரியரின் அடிக்குறிப்புகள், அவை இலக்கத்திற்கேற்றவாறு பதிவுன் முடிவில்  கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவுத்தொடர் குண்டலினி யோகம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என எண்ணுகிறோம்

ஸத்குரு பாதம் போற்றி!

அன்புடன்

சுமனன் 
************************************************************************************

அறிமுகம்
ஆறாதாரங்களும் குண்டலினி சக்தியும்

ஷட்சக்ர நிருபணம் (ஆறு ஆதாரங்களின் விவரணம்), பாதுகா பஞ்சகம் (பாதுகையின் ஐந்து தன்மைகள்) என்ற இரு பதங்களும் தாந்திரீக யோகத்தின் ஒருபிரிவான குண்டலினியோகம் அல்லது சிலர்கூறும் பூதசுத்தி என்பவற்றின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப்பதங்கள் மனித உடலில் உள்ள மகாசக்தியான குண்டலினியினை குறிப்பதாகவும் அது விழிப்படைந்து உடலின் பூதகாரணிகளை சுத்தி செய்வதன் மூலம் யோகம் எனும் நிலைவாய்க்கிறது. இந்த யோகம் சாதனை அடிப்படையில் சக்ரபேதனம் அல்லது சக்ரவிழிப்பு என அழைக்கப்படும். இந்த செய்முறை உடலில் உறங்கும் குண்டலினி சக்தி விழிப்படைந்து ஆறு ஆதாரங்கள் தாமரைகளினூடாக பாய்வதன் மூலம் இது நடைபெறுகிறது. இதற்குரிய சரியான ஆங்கிலப்பதமாக நான் "ஸேர்பண்ட்(1) பவர்" என தேர்ந்தெடுத்தேன். குண்டல என்றால் சுருண்டு உள்ளது எனப்பொருள். தேவியின் சக்தி அதாவது சுருண்டுள்ள சக்தி குண்டலினி எனப்படும். பிரபஞ்ச மஹாசக்தி உடலின் கீழ்பகுதியில் சுருண்ட பாம்பு வடிவில் முதுகெலும்பு முடிவுறும் இடத்தில் உறைந்துள்ளாள். அவள் யோகத்தின் மூலம் தட்டி எழுப்பபடும் போது குண்டலினி எனப்படுகிறாள். குண்டலினி என்பது மனித உடலில் உறைந்துள்ள தெய்வீக பிரபஞ்ச ஆற்றலாகும். சப்த பூமி(2) எனப்படும் ஏழு உலகங்கள் பற்றிய வர்ணணையின் உள்ளார்ந்த தாந்திரீக அர்த்தம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையே(3) குறிக்கிறது. 

தாந்திரீகம் இரண்டு காரணங்களுக்காக  யோகம் எனக்கூறப்படுகிறது. தாந்திரிகத்தில் காணப்படும் சக்கரங்கள் பற்றிய விளக்கங்கள் யோக உப நிஷதங்களிலும் சில புராணங்களிலும் காணப்படுகிறது. அத்துடன் ஹதயோக கோட்பாடுகளும் இவற்றுடன் பொருந்தி வருகின்றன. ஆகவே தாந்திரீக யோகம் என அழைக்கப்படுகிறது. 

வேற்று கலாச்சாரங்களில் குண்டலினி யோகம்
இந்தியா தவிர்ந்த மற்றைய நாட்டு முறைகளிலிலும் இத்தகைய குறியீடுகளை காணக்கிடைக்கிறது. இவை இங்கிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவைதான் என்பதனை அனுமானித்துக்கொள்ளலாம். பாரசீகத்தின் இளவரசன் முகம்மது டாரா சிக்கோ என்பவர் எழுதிய ரிசாலா-ஈ-ஹக்-நுமா எனும் சூஃபி நூலில் உடலில் உள்ள மூன்று ஆதாரங்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றது. அவையாவன "தாய் மூளை" அல்லது உருளை இதயம் (டில்-ஐ-முத்தாவர்); தேவதாரு இதயம் (டில்-ஐ-சனோவாரி) மற்றும் லில்லி இதயம் (டில்-ஐ-நிலோவாரி) என்பனவே அதில் குறிப்பிடப்பட்ட ஆதார ஸ்தானகளாகும். மேலதிக ஆதாரங்கள் இஸ்லாமிய சூஃபி இலக்கியங்களில் காணலாம். சில சூஃபி(4) இலக்கியங்களில்  இந்திய யோகிகளிடம் பெற்றுக்கொண்ட அறிவின் படி குண்டலின் என்பது ஆன்ம விழிப்பிற்குரிய ஒரு வழியாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி அமெரிக்க மாயன் கலாச்சாரத்தில் காணப்படு சினூஸ் எனப்படும் பொபுல் வூ(5) இலக்கியத்திற்கும் இந்திய சாஸ்திரங்களுக்கும் தொடர்பு உண்டு என அறியப்பட்டுள்ளது. 

குண்டலினி யோகமும் வைதீக ஹத யோக கோட்பாடுகளும்
எனது தகவலாளர்களின் படி சுழுமுனையின் நடுவே ஒரு வெற்றுக்குழாயும், இடகலை பிங்கலை "இரு மடிப்புள்ள வெற்றுக்குழாயும்" காணப்படுகிறது. இதில் பாயும் மின்னல் போன்ற ஒளியே - ஹுராகன் - குண்டலினி ஆகும். இவற்றின் நடுவே மையங்கள் விலங்குகளால் சங்கேதக்குறிகளில் காட்டப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவல்களின் படி மற்றைய சமூகங்களில் உள்ள இரகசிய வித்தைகளிலும் இத்தகைய குறியீடுகள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் உண்மை இருப்பதாக கருதின் இந்த சாதனையும் தத்துவமும் பரவலாக காணப்பட்டதான ஒன்றாக நாம் எதிர்பார்க்கலாம், இந்த வகையான யோகம் குறிப்பாக தாந்திரீகத்துடன் அல்லது ஆகமத்துடன் முதன்மையாக தொடர்பு பட்ட ஒன்றாக காணப்படுகிறது. இவற்றுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட முழுமையான சாதனை விபரங்கள் ஹத யோக நூற்களிலும் தாந்திரீக அறிவுறுத்தல் புத்தகங்களிலும் காணப்படுகின்றது. இது இந்து வழிபாட்டு முறைக்கு மட்டுமல்லாது முழுமையான மறையியலுக்கும் பொதுவாக காணப்படுகிறது. அடுத்து கீழ் ஆதாரங்களில் செய்யப்படும் யோககிரியைகள் தாந்திரீக பண்பினை உடையனவாய் இருக்கிறது, புத்தகங்களில் காணப்படும் பொதுவான வழிகாட்டல்கள் பரிசோதனை ரீதியாக பிரயோகித்து செய்முறை அறிவுடன் செய்ய வேண்டியவையாக உள்ளது. தாந்திரீக முறைகளின் முக்கியமான பண்பு குறித்த முதன்மையான உணர்வு மையத்தின் மீதான செயன்முறை. பல புராதன காலாச்சாரங்கள் மனித உடலில் பல்வேறு பாகங்களில் ஆன்மாவின் இருப்பு பற்றி கூறுகின்றன. இரத்தத்தில்(6), மூச்சில், இதயத்தில் ஆன்மா உறைவதாக கூறப்படுகிறது. பொதுவாக மூளை ஆன்மா உறையும் இடமாக குறிப்பிடப்படவில்லை. வைதீகத்தில் இதயமே உணர்வின் இருப்பிடமாக கருதப்படுகிறது, இதனை "இதயத்தில் இருத்திக்கொள்" ""இதயத்தினால் கற்றுக்கொள்" போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் விளக்குகின்றன. ஐந்து வகைப்பித்தங்களின் ஒன்று இதயத்தில் உறைந்து மறைமுகமாக ஒருவனுடைய புரிதலையும் அறியும் செயன்முறியினையும், இதயம் துடிக்கும் அளவினையும் கட்டுப்படுத்துகிறது. இந்திய உடற்கூற்றியலின்(7) படி உடலின் ஒவ்வொரு பாகத்தினை உருவாக்குவதிலும் உணர்வுசக்தி செயற்படுகிறது எனக்கூறப்படுகிறது.  தாந்திரீக தத்துவத்தின் படி உணர்வின் முதன்மை இருப்பிடங்களாக மூளை-முண்ணாண் நரம்புத்தொகுதியினை அண்டிய ஆறு ஆதாரங்களும் மூளையின் மேல் காணப்படும் சகஸ்ராரமும் குறிப்பிடப்படுகின்றன. தந்திர சாஸ்திரம்  ஜீவாத்மா - உடலில் உள்ள உயிரான்மா உறையும் இடமாகவும், பிராணன் எனும் உயிர்சக்தி உறையும் இடமாகவும் இதயம்(8) இருப்பதாக குறிப்பிடுகிறது. இத்தகைய காரணத்தினாலேயே ஷட்சக்ர நிருபணத்தின் முதல் ஸ்லோகம் இந்த யோகத்தினைப்பற்றி "தந்திரானுஸரேன" எனக்குறிப்பிடுகிறது. அப்படியென்றால் "தாந்திரீகத்தில் கூறிய படி" என்று பொருள், காளிசரணின் உரையின் படி "தாந்திரீகத்தின் அதிகார வரைமுறைக்கு அமைவான படி" எனப்பொருள் கொள்கிறார். 

தொடரும் ...........


 அடிக்குறிப்புகள்
(1) தேவியின் நாமங்களில் புஜங்கினி அல்லது நாகம் என்பதும் ஒன்று
(2) பூர், புவ, ஸ்வஹ, மஹ, ஜன, தப, ஸத்தியம் என்ற ஏழு வ்யாக்ருதிகளே சப்த உலகம் என அழைக்கப்படும். 
(3) ஏழாவது சக்கரம் தலையில் அமைந்துள்ள சகஸ்ராரம் ஆகும்.
(4) அல்ப்ரூணி என்ற சூஃபி ஞானி பதினோராம் நூற்றாண்டில் பதஞ்சலி யோக சூத்திரத்தினையும் சாங்கிய தத்துவத்தினையும் அரபிய மொழிபெயர்த்தார்.
(5) லுஸிபெரை சேர்ந்த ஜேம்ஸ் ப்ரைஸி எனப்படும் தாந்திரீகம் மொழிபெயர்த்து தியோசபிக்கல் ஜேர்னலில் வெளியிட்டதன் படி, நான் இதனை நேராக படிக்கவில்லை, 
(6) பைபிள் "இரத்தத்தில் உயிர் உறைவதாக கூறுகிறது"
(7) கவிராஜ குஞ்சலாலா பிஸகராத்மா பதிப்பித்த சுசுருத ஸம்கிதையின் படி, 
(8) இந்திய தத்துவ மரபின் படி மூளை மனதினதும் புலன் களினதும் மையம், இதயம் உயிரின் மையம், சரகரின் கருத்துப்படி இதயம் உடல் அங்கங்களினது மையமும், அவை தொழில் புரிவதற்குரிய சக்தியினை வழ்ங்கும் ஒரு உறுப்பு, சுசுருதரின் கருத்துப்படி இதயம் உணர்ச்சிகளின் மையம். 

13 comments:

  1. ரொம்ப நன்றி சுமணன் ஐயா,
    இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் இந்த நூல்-இ பார்த்து இருக்கிறேன்.. ஆனால் என் ஆங்கில புலமையினால் படிக்க இயலவில்லை. உங்கள் மூலம் நான் தமிழ்-ல் படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
  2. நல்லதோர் முயற்சி... வாழ்த்துக்கள்..
    பாதுகா பஞ்சகம் என்பதை அவர் ஆங்கிலத்தில் Five Fold Foot Stool என்று எழுதியுள்ளார். நீங்கள் பாதுகையின் ஐந்து தன்மைகள் என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். சரியா?

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி அன்பு,

    முதற்கண் இத்தகைய கேள்விகளை மிக்க ஆவலுடன் வரவேற்கிறேன்,

    எமது புரிதலின் படி சரியெனவே படுகிறது, இந்த மொழிபெயர்ப்பில் நாம் ஏற்கனவே எனது உரையில் கூறியுள்ளபடி வார்த்தைக்கு வார்த்தை (word to word) மொழிபெயர்ப்பு அல்ல, ஆகவே footstool என்பதினை செருப்பு அல்லது காலணி என மொழிபெயர்க்க இயலாது footstool என்பது பாதுகையினை குறிக்கும் fivefold என்பது பஞ்ச அல்லது ஐந்து, பாதுகா பஞ்சகம் குருவினுடைய பாதுகையை சஹஸ்ரார சக்கரத்தில் தியானிக்கும் சாதகனுக்கு சிவனுடைய ஐந்து முகங்களிலும் இருந்து வரும் ஐந்து தன்மைகளையும் பெறுகிறான், இது பாதுகா பஞ்சகம் பகுதிக்கு வரும்போது விளக்குவோம்.

    ReplyDelete
  4. தங்கள் பதில் கண்டேன். நன்றி
    மேலும் ஒரு கேள்வி...
    அடிக்குறிப்பு வ எண் 2ல் பூர், புவ, ஸ்வஹ ...என்ற ஏழு வியாக்ருதிகள் சப்த உலகம் என உள்ளது.
    காயத்ரி மந்திரத்திலும் பூர், புவ, ஸ்வஹ என்றே தொடங்குகிறது.
    இதில் தங்களது விளக்கம் அறிய விரும்புகிறேன்

    ReplyDelete
  5. ஆம் அன்பு, காயத்ரி குண்டலினி விழிப்பிற்கும் பயன்படுத்தக்கூடிய மந்திரம், ஆனால் தீட்சை இருக்கவேண்டும், இந்த சப்த வ்யாக்ருதிகளும் மூலாதாரம் தொடக்கம் சஹஸ்ராரம் வரை உள்ள ஆதாரங்களை குறிப்பவை, இவற்றை சேர்த்து ஜெபிக்கும் போது காயத்ரி மந்திரம் அந்தந்த சக்கரங்களில் செயற்படும். இதனை செயற்படுத்த குரு மற்றும் தீட்சை அவசியம்,

    பொதுவாக ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தில் ஓம் பூர், புவ, ஸ்வஹ மட்டுமே இருக்கும், இது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணீப்பூரகம் ஆகிய மூன்று சக்கரங்களையும் சமப்படுத்தி படிப்படியாக விழிப்பிக்கும், இதனால் பௌதீக வாழ்க்கைக்கு உரிய விடயங்களில் தேர்ச்சி, முழுமை உண்டாகும், காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு என எமது குரு நாதர் ஒரு பாடம் எழுதியிருக்கிறார், உத்தரவு கிடைத்தால் பதிவிடுகிறேன், உங்களுக்கு விருப்பம் இருப்பின் இந்த மூன்று வ்யாக்ருதிகள் உள்ள காயத்ரியினை சாதகம் செய்து பார்க்கலாம், இதற்கான சாதக முறைகள் ஏற்கனவே எமது பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. You are taking a good approach by not trying to translate everything from the original. This is concise and accurate. I am waiting for other chapters.
    Thank You.

    ReplyDelete
  7. வணக்கம் செல்லத்துரையாரின் மொழிபெயர்ப்புப் பிரதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் நன்றி

    ReplyDelete
  8. அவளை அறியா அமரரும் இல்லை
    அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
    அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
    அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே

    ReplyDelete
  9. செல்லத்துரை சுவாமியின் மொழிபெயர்ப்பு மீள்பதிப்பிக்கப்படவில்லை, என்னிடம் அவர் தந்த பிரதியொன்று இருக்கின்றது, ஆனால் நிழற்பிரதி எடுக்கும் நிலையில் அது இல்லை, சிவதொண்டன் நிலையத்தினை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் என்னிடமிருந்து பெற்று இதனை வெளியிடுவதற்கான‌ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வெளியீடு நடந்தால் நிச்சயம் எமது பதிவுகளில் அதனைப்பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவோம்.

    ReplyDelete
  10. பதிலுக்கு நன்றி தங்களின் மொழிபெயர்ப்புப் பணி தடை தாமதங்களின்றித் தொடர குருவருள் துணை நிற்பதாக

    ReplyDelete
  11. //Chithra\\
    இந்த பதிவுகளிலும் சரி, இந்த மொழிபெயர்ப்பு பணியிலும் சரி என்னுடையது என்று எதுவும் இல்லை, நான் வெறும் கருவி மாத்திரமே! சிறப்பேதும் இருந்தால் அது குருநாதருடையது! இனை முழுமையாக மொழிபெயர்த்து யோகர் சுவாமிகளுக்கும் செல்லத்துரை சுவாமிகளுக்கும் சமர்ப்பணமாய் நூலாக வெளியிடுவதாய் தற்போதைய எண்ணம்! திருவருள் கிட்டும் என்று எண்ணுகிறோம்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...