குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 18, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 08: பூர்வ பாகம்



பூர்வ பாகம் அகஸ்தியர் ஹயக்ரீவர் சம்பாஷணையுடன் தொடங்குகிறது. அகத்தியர் முற்காலத்திய முனிவர்களுள் சிறந்தவரும், குட்டையான உயரம் உடையவருமாவார். சாகக்கலை மூலம் இன்றும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அகஸ்திய என்றால் மலைகளை சமப்படுத்தியவர் என்று பொருள். கதைகளின் படி விந்திய மலை தனது வளர்ச்சியில் ஆணவம் கொண்டபோது தனது ஆற்றலால் சமப்படுத்தியமையால் அகத்தியர் எனப்பட்டார்.   அவர் குடத்தில் உதித்திவர். பன்னிரண்டு ஆதி  ஸ்ரீ வித்யா உபாசகர்களில் ஒருவர். ஹயக்ரீவர் குதிரை முகமுடைய விஷ்ணுவின் அவதாரம். உயர்ந்த சாஸ்திரங்களுக்கும் ஞானத்திற்கு அதிபதி.

 ப்ருகுதாரண்ய உபநிடதத்தில் (II. V) குதிரை முகமுடைய ஞானி ஒருவர் பற்றிய குறிப்பு வருகிறது. அதர்வண வேதத்தில் தத்யாக் என்ற முனிவர் இந்திரனுக்கு மது வித்தையினை உபதேசித்தார். அதன் பின்னர் இந்திரன் முனிவரிடம் அந்த வித்தையினை யாருக்கும் உபதேசிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டான். அப்படி கற்பித்தால் அவருடைய தலை வெட்டப்படும் எனவும்  எச்சரித்தான். அசுவினி தேவர்கள் இந்த மதுவித்தையினை கற்றுக்கொள்ள விரும்பினர். அவர்கள் தத்யாக முனிவரை அணுகி இந்த பிரச்னைக்கு தீர்வாக முதலில் முனிவர் குதிரை தலையினை இணைத்து மதுவித்தையினை தமக்கு உபதேசிக்கும் படியும் பின்னர் இந்திரன் கோபம் கொண்டு தலையினை வெட்டிய பின்னர் தமது ஆற்றலால் பழைய தலையினை மீளப்பொருத்துவதாகவதாகவும் கூறினர். (காணக ப்ருகதாரண்ய உபநிடதம் V iii - 16)  மது வித்தையினை அசுவினி  தேவர்களுக்கு உபதேசித்த பின்னர் இந்திரன் குதிரை தலையினை வெட்ட பழைய தலையினை அசுவினி தேவர்கள் தமது ஆற்றலினால் மீளப்பொருத்தினர். அவர்கள் திட்டப்படியே நடைபெற்று அசுவினி தேவர்கள் மது வித்தையினை கற்றுக்கொண்டனர். இந்த உபநிடதத்தின் (V - v - 16) முடிவில் "ப்ர யதிமுவாச" என்ற வார்த்தையுடன் முடிவுறுகிறது. இந்த வார்த்தையில் காம கலா பீஜமான "ஈம்" மறைமுகமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. காமகலா சஹஸ்ர நாமத்தின் 322வது நாமத்தில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. "ஈம்" என்பது ஸ்ரீ வித்தையின் அதிமுக்கியமான இரகசியமாகும்.  எப்படியாயினும் மதுவித்தை உபதேசித்த ரிஷியும் மகாவிஷ்ணு அவதாரமான ஹயக்ரீவரும் ஒருவர் அல்லர்.  மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவரே அகஸ்தியரிற்கு லலிதா சஹஸ்ர நாமத்தினை உபதேசித்தவர்.

ஹயக்ரீவரின் தோற்றம் பற்றி தேவி பாகவதத்தில் (I - 5) கூறப்பட்டுள்ளது. இதுபற்றி முற்பகுதியில் ஏற்கனவே விபரிக்கப்பட்டுள்ளது. ஹயக்ரீவ ரூபத்தில் மஹாவிஷ்ணு தேவியிடம் இருந்து ஸ்ரீ வித்தை தீட்சை பெற்றார். மஹாவிஷ்ணுவின் இந்த ரூபம் உயர்ந்த ஞானத்தினை பெறுவதற்கு உபாசிக்கப்படுவது. ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு ஸ்ரீ வித்யா தீட்சை அளித்து உபாசனையினை கற்பித்தார். அடுத்த பந்தி ஹயக்ரீவர் லலிதா சஹஸ்ர நாமத்தினை அகத்தியருக்கு உபதேசித்த சந்தர்ப்பத்தினை விளக்குகிறது.



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...