குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 20, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:லலிதாம்பிகையின் தியான ஸ்லோகத்திற்கான அறிமுகம்



லலிதா சஹஸ்ர நாமத்தில் தேவியை மனதில் உருவகப்படுத்த நான்கு தியான ஸ்லோகங்கள் கூறப்படுகின்றன. தியான ஸ்லோகம் என்றால் தேவியின் தோற்றத்தினை மனதில் உருவகப்படுத்த உதவும் வார்த்தைகளின் தொகுப்பு. முதலாவது "சிந்தூராருண விக்ரஹாம்" என்று தொடங்குவது, இது வாக்தேவிகளால் உருவாக்கப்பட்டது. இரண்டாவது "அருணாம் கருணாதாரங்கிதக்ஷிதாம்" எனத்தொடங்குவது. இது தத்தாத்திரேயாரால் உருவாக்கப்பட்டது. (தத்தாத்திரேர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஸ்வருபமானவர். தத்த என்றால் அளிக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட என்று பொருள், மும்மூர்த்திகளுமே தம்மை அத்ரி மகரிஷி அனுசூயா தம்பதிகளுக்கு தந்ததால் அவரது பெயரின் பினால் ஆத்ரேய என்று வந்தது). மூன்றாவது "தியாயேத் பத்மாசனஸ்தாம்" என்ற ஸ்லோகம் பற்றி எதுவித குறிப்புகளும் இல்லை. நான்காவது "சகும்கும - விலேபனாம்" என்பது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. எல்லா ஸ்லோகங்களிலும் தேவியினுடைய சிவந்த நிறம் பற்றி கூறப்பட்டுள்ளது. அது உதிக்கின்ற சூரியனின் நிறத்தினை போன்றது என உருவகிக்கப்பட்டுள்ளது. லலிதாம்பிகை செதுக்கிய அழகுள்ளவள். அவளுடைய  அழகிற்கும் மேலான குணமுள்ளவள். அவளுடைய பண்புகளும் குணங்களும் மிக உயர்ந்தவை, பிரபஞ்ச தாயிற்கு உரித்தானவை. அதனால் தான் இந்த சஹஸ்ர நாமம் அவளை "ஸ்ரீ மாதா"  என்று விளித்து தொடங்குகிறது. அவள் சிம்ஹாசனத்தில் அமர்ந்திருக்க லக்ஷ்மியும் சரஸ்வதியும் இருபுறமும் சாமரை வீசுகின்றனர். அவள்  பரா பட்டாரிகா எனவும் அழைக்கப்படுகிறாள், இதன் அர்த்தம் அரசிக்கெல்லாம் அரசி என்பதாகும். அவள் பராசக்தி, ராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். இவள் பரமசிவனின் பத்தினி, பரமசிவன் ருத்திரனில் இருந்து வேறானவர். அவள் ஸ்ரீ வித்தையாலும் தசமஹா வித்தையாலும் வணங்கப்படுபவள். இவை இரண்டும் மிக இரகசிய வித்தைகள், தகுந்த குருவின் மூலம் கற்க வேண்டியவை. இவை தாந்திரிக முறை சார்ந்தவை, சாதனையின் மூலம் அதீத ஆற்றலினை உருவாக்க கூடியவை.
சிவனுடையதும் சக்தியினுடையதும் மிக உயர்ந்த வடிவம் மகா காமேஸ்வரன் மகா காமேஸ்வரி எனப்படும். அவர்கள் எல்லையற்றதும் நித்தியமானவர்களும் ஆவர்.  நித்திய நிலையில் அவள் "ப்ரகாச விமர்ச மஹா மாய ஸ்வரூபினி" என அழைக்கப்படுகிறாள். இருவரும் நித்திய வடிவில் நான்கு கைகளுடன் ஒரே ஆயுதங்களை ஏந்திய வண்ணம் உள்ளார்கள். அவர்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் - பாசம், அங்குசம், கரும்பு வில், மலர் அம்புகள் என்பவையாகும். இருவரது கிரீடத்திலும் சந்திரன் உள்ளது. மகா காமேஸ்வரர் துய, பளிங்கு போன்ற, நிறமற்ற வடிவானவர். சிம்ஹாசனத்தில் அமர்ந்து இடது காலை மடித்து வலது காலை நிலத்தில் ஊன்றியவண்ணம் இருக்கிறார், தேவி சிவப்பு நிறமுடைய அதீத அழகுடையவள், புன்னைகையினை வீசியவண்ணம் விளையாட்டுத்தனமும், அருளும், பக்தர்களின் பிரார்த்தனையினை எப்போதும் கேட்கும் நிலையில், காமேஸ்வரரை நோக்கி வெட்கத்துடன் நடக்கின்றாள். அவளது ஒவ்வொரு அடியும் காமேஸ்வரரை நோக்கி நகர அவரது தூய வெண்மை நிறம் சிவப்பாகிறது. அந்த நடையின் அழகில் அன்னப்பறவைகள் வெட்கிவிடக் கூடிய அழகுடன் கூடியவை. காமேஸ்வரர் தனது அன்பும் காதலும்  கலந்த [பார்வையினை தேவியின் மீது வீசுகிறார். அவள் அவரது மடித்த இடது துடையின் மேல் தனது வலது துடையினை மடித்து இடது காலை நிலத்தில் உள்ள மாணிக்கங்கள் நிரம்பிய தங்க காலடியில் பதித்து  அமர்கிறாள். அவள் அவரது மடியில் அமர்ந்த கணத்தில் அவர் உடல் முழுவதும் சிவப்பு நிறமாகிறது. இருவரது உடலும் பிரகாசமாக ஒளிரத்தொடங்குகிறது. இதனைக்கண்ட தேவர்கள் அது சூரியனது ஒளியாக இருக்கும் என மயங்குகின்றனர். இந்த தெய்வீக தம்பதியினர் எப்போதும் ஐக்கிய நிலையிலேயே  காணப்படுகின்றனர், அதனாலேயே சஹஸ்ர நாமத்தின் இறுதியில் வரும் நாமங்களில் ஒன்று "சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி" என்று  குறிப்பிடுகிறது. இந்த நாமத்தில் விளக்கமே மேலே கூறப்பட்டது. இந்த வடிவம் நித்தியமானது. சிவ ஸக்தி ஐக்கியத்திற்கு மேற்பட்ட நித்திய நிலை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகா என்ற நாமத்துடன் முடிவுறுகின்றது. அப்படியானால் லலிதாம்பிகை ரூபம் சிவ சக்தி ஐக்கிய ரூபத்தினை விட உயர்ந்ததா? என்றால் அதற்கான பதில் "ஆம்" என்பதே, அப்படி இல்லாமல் அந்த நாமத்தினை வாக் தேவிகள் இறுதியாக சேர்த்திருக்க மாட்டார்கள். அவர்கள்   "சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி" என்ற நாமத்தினை இறுதியாக சேர்த்து லலிதாம்பிகை யினை அதற்கு முதலாக சேர்த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இந்த சஹஸ்ர நாமத்தின் இடையில் "பஞ்ச பிரேத சனசினா" என்றும் "பஞ்ச பிரம்ம ஸ்வரூபினி"  என்றும் வருகிறது. முதலாவது நாமத்தின் பொருள் பிரம்மா, விஷ்ணு, சிவன், மகாதேவன், சதாசிவன் ஆகிய ஐவர் மேலும் அமர்ந்திருப்பவள் என்பதாகும். இதன் ஆழ்ந்த பொருள் பற்றி பின்னர் விபரிக்கப்படும். பிரம்மா - படைத்தல், விஷ்ணு - காத்தல், சிவன் - அழித்தல், மஹாதேவன்- அறியாமையினை, மாயையினை அகற்றுபபர், சதாசிவன் - ன் ஞானத்தினை வழங்குபவர். இந்த ஐவர் மேலும் லலிதை அமரும் போது அவளது ஆற்றல் மனிதனால் விளங்கமுடியாத அளவிற்கு அதிகரிக்கிறது. அவளெ எல்லையற்றவள், எல்லாமும் ஆனவள், நான் ஆக இருப்பவள், நீயாக  இருப்பவள், கேட்பதையெல்லாம் தரக்கூடியவள். ஒவ்வொருவருடைய சொந்த தாய் போல் அணுகக்கூடியவள், அவளது எல்லையற்ற ஆற்றலின் முன் பணியும் போது மிகுதியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவளே மிக உயர்ந்த கல்வி, சிவம் சார்ந்ததாகவும் சக்தி இயக்கமாகவும் இருக்கிறாள். சிவம் அமைதியானதும் அசைவற்றதும், சக்தி இயக்குபவளும், பிரகிருதி அல்லது மாயை எனப்படுகிறாள். சிவம் ஆத்மா என்றால் சக்தி எமது கர்மத்திற்கும் செயலுக்கும் ஆதாரமான மனமும் உடலும் போன்றது. லலிதா சஹஸ்ர நாம தியான ஸ்லோகம் இத்தகைய தேவியின் முழுமையான ரூபத்தினை தியானிப்பதற்கான உருவத்தை விளக்குகிறது. அவளை தியானிப்பதால் நாமும் அவளாவோம்.


*****************************************************************************************************************************************

{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...