குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 01, 2013

ஸ்ரீ ஜோதி சாதனை தொடர்பான சந்தேகங்களும் பதில்களும் - 01

எமக்கு அனுப்பபட்டிருந்த ஒருசில சந்தேகங்ககளும் அதற்கான விடைகளும். 


இந்த சாதனையினை ஞாயிறுகளில் காலை  08.00 - 08.40 மணியிலும் மேலும் தினசரியும் செய்யச் சொல்லி அறிவுறுத்தி இருந்தீர்கள், சற்று விளங்கவில்லை, விபரமாக கூற முடியுமா? 

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டு தியானம், இது மின்கலத்தினை சக்தியேற்றும் செயல்முறை போன்றது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆகாய மனத்தினூடாக (Cosmic mind) அனைவருக்கும் குருமண்டலத்திலிருந்து சக்தி பரவும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதற்கு சொல்வதே ஞாயிற்றுக்கிழமை, ஏற்றுக்கொண்ட சக்தியினை சமநிலையில் வளர்த்துக்கொள்வதற்கு தினசரி பயிற்சி, தினசரி பயிற்சியினை காலை, மாலை உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றை வகுத்துக்கொண்டு செய்யலாம். 

ஸ்ரீ வித்யா ஸ்ரீ ஜோதி மார்க்கத்தில் முதல் படிமுறையில்  உள்மூச்சின் போது ஓம் என்று உச்சரிப்பதுபற்றியும் "ம்" என்ற சப்தத்தை மூன்று முறை அழுத்தி கூறுவது பற்றியும் விளக்க முடியுமா?

உள்முச்சின் போது "ஓம்" என உச்சரிப்பு மனதில் நிகழவேண்டும், அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மூச்சினை அவதானிக்கவேண்டும், அப்படி அவதானிக்கையில் மனதில் உச்சரிக்கும் "ஓம்" மூச்சில் மோதி மூச்சுடன் கலக்கும். மற்றும்படி ஒலி வெளியே கேட்கும்படி 'ஓம்" இணை உச்சரித்து உள்முச்சினை எடுப்பது இயலாத காரியம். மனதில் உச்சரித்து மூச்சினை அவதானித்து கலப்பதே சரியான செய்முறை. மனதில் உச்சரிக்கும் பொது "ம்" இணை சற்று நீட்டி மூன்று தடவை வரும் நேர அளவிற்கு உச்சரிக்கவும். 

தியான நிலையில் ஓம் ஹ்ரீம் என்பதனை மனதில் உச்சரிக்கவே முடிகிறது. இது சரிதானா?
ஆம் இது சரியானது, உண்மையான சாதனை மனதினாலேயே நடைபெறுகிறது, 

சில நேரங்களில் மனம் அலைபாய்கையில் மந்திரத்தை சொல்லவதை விடுத்து சாட்சி பாவமாக இருக்க எத்தனிக்கிறேன். நான் இதே முறையை தொடரலாமா? அல்லது மீண்டும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டுமா?

நீங்கள் சொல்லும் நிலை சாட்சி பாவம் என்று கொள்ள முடியாது, சாட்சி பாவம் என்பது மனதின் எண்ணங்களால் எதுவித சலனமும் ஏற்படாமல் மனதினை எம்மால் கட்டுப்படுத்த கூடிய நிலை. 
மனம் அலைபாய்கையில் மீண்டும் மந்திரத்தினை ஜெபித்து மனதை சரியான நோக்கத்தில் இயங்க வைக்க வேண்டும். மனம் இயற்கையில் பலவித சக்திகளை எண்ணங்கள் மூலம் ஈர்த்து செயல் புரிகிறது. மந்திரம் என்பது குறித்த ஒரு சக்தியில் அலை அதிர்வு (frequency), அதனை திரும்ப திரும்ப சொல்லுவதால் அது மனதுடன் பரிவுற்று மனதினை தெய்வ சக்தியினை ஈர்க்கும் தன்மையினை  உண்டு பண்ணுகிறது. ஆகவே வேறு எண்ணங்கள் வருகின்றது என்றால் சலித்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து சாதனையினை தொடரவும். 

மனதினை சரியான வழியில் இயங்க வைக்கும் சித்த சாதனை இந்த இணைப்பில் தந்துள்ளோம். இதனை கூறிய படி பயிற்சிக்கவும். 

இந்த சாதனையின் முடிவில் உங்களால் தரப்பட்ட பிரார்த்தனை தவிர்ந்து வேறு பிரார்த்தனை எதனையும் செய்யலாமா?

ஆம், நிச்சயமாக, ஆனால் உங்கள் குறைகளை புலம்பும் மறை நிலை வார்த்தைகள் இல்லாமல், அந்த குறைகள் தீரவேண்டிய நேர் நிலை வாசகங்களாக பிரார்த்திக்கவேண்டும். கல்வி, செல்வம், மகிழ்ச்சி, நல்லுறவு, சந்தோஷமான இல்லற வாழ்க்கை, ஆரோக்கயம் என்பவற்றை பிரார்த்திக்க வேண்டும், 




No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...