குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 07, 2013

எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி


இந்த இணைப்பில் எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி முழுமையான நூலினை தரவிறக்கி கொள்ளவும் 


நாம் சித்த வித்யா விஞ்ஞான வலைத்தளம் எதற்காக ஆரம்பித்தோம் என்று சரியாக தெரியவில்லை! சிறிதுகாலம் எமது குருதேவரிடம் பெற்றவற்றை பகிரும் தளமாக மட்டும் இருந்து வந்தது! அந்த வகையில் தகவல்களை பகிரும் தளமாகவே இயங்கியது! வாசித்த பலரும் எமக்கு தனிப்பட மின்னஞ்சல் மூலமும், நேரில், தொலைபேசியில் தாம் இறைசாதனையில் ஏற்படும் தடைகளையும் அவற்றை தெளிவாக்கி கொள்ள தகுந்த வழிகாட்டல் இல்லாமல் இருப்பதாகவும் எமது தளம் தமக்கு உதவியாகவும் இருப்பதாக கூறினார்கள்! அந்த வகையில் செயல்முறை ரீதியாக இந்த விடயம் தொடர்பாக வகுப்புக்கள் வைக்கும் படி பலர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் எமக்கு எதுவித உடன்பாடும் இல்லை! ஏனெனில் நாம் பயின்ற முறை குருவுடன் கூடவே இருந்து அவரிற்கு தேவையான சிறு சிறு உதவிகளை (குரு சேவை) செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போது அவர் தரும் உபதேசங்களை பெரும் பொக்கிஷமாக எண்ணி மனதில் பதிப்பித்துக்கொண்டு அவற்றை ஆராய்ந்து விளங்கி கொண்டு கூறப்பட்ட சாதனையினை பயிற்சிப்பது! ஆக நாம் கூற விரும்புவது “சாதனையில் முன்னேற விரும்பின் பொறுமையுடனும், சிரத்தையுடனும் குருவிடம் ஞானத்தினை பெற்று உங்கள் முயற்சியால் முன்னேறுங்கள்” என்பது! அதை விடுத்து புகழ் பாடுவதோ! போற்றி துதிப்பதோ எதுவித ஆன்ம முன்னேற்றத்தினையும் தரமாட்டாது! அந்த வகையில் எமது தளத்தினை வாசித்து உண்மையில் ஆன்ம முன்னேற்றம் பெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு என்ன உதவி எம்மால் செய்யமுடியும் என்ற எண்ணம் பலகாலமாகவே எம்மில் இருந்து வந்தது! அந்த வகையில் கடந்த 2013 நவராத்திரி இறுதியில் ஸ்ரீ பௌர்ணமி நாளில் குருதேவரின் பரிபூரண ஆசியுடன் எம்மை அண்டி வரும் சாதகர்களுக்கு தெய்வ சக்தியினை பெறும் ஸ்ரீ ஜோதி எனும் எளிய ஸ்ரீ வித்யா சாதனையினை பகிர்ந்து கொள்ள அனுமது கிடைத்தது.

இந்த சாதனை ஸ்ரீ போக நாத குருதேவர் பழனியில் புவனேஸ்வரி தாய் சக்தி கொண்டு தெய்வ சக்தியினை அருளுகின்ராறோ அந்த சாதனை அன்றி வேறல்ல!

இதனை வாசிக்க தொடங்கும் போது ஏற்படும் சாதனை தொடர்பான சந்தேகங்களை எமக்கு எழுதுங்கள்! கட்டாயம் விடை கிடைக்கும்!

உங்கள் வாழ்வில் ஸ்ரீ ஜோதி ஒளிரட்டும்! அனைத்து நன்மைகளும் தேடி வரட்டும்! தேவைப்படும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

-     - சுமனன் -

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...