குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 05, 2014

மனதின் செயல்முறை விஞ்ஞானம்: வாழ்க்கையில் ஏன் வேற்றுமைகள்?


சென்ற பதிவில் ஒவ்வொரு உயிரினதும் மனிதனதும் வாழ்க்கை நோக்கம் இன்பத்தினை நோக்கியதாகவே இருக்கிறது என்பது பற்றி பார்த்தோம். ஆனால் இன்பத்தினை நோக்கி செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இன்பத்தினை தருவதில்லை. இலாபம் தரும் என்று தொடங்கிய வியாபாரம் நஷ்டத்தினை தருகிறது. சுவைக்கு என அருந்தும் உணவு நோயினைதருகிறது. இன்பம் என்று எண்ணிய உறவுகள் துன்பத்தினை தருகிறது. இப்படி எண்ணுவது ஒன்றாக இருக்க விளைவு வேறாக இருக்கிறது.

இவை எல்லாம் ஏன் என்று தேடவிரும்பும் ஒருத்தன் கடவுள் மீது பழி போடுகிறான், கிரகதோஷம் என்கிறான், ஜாதகத்தில் கோளாறு என்கிறான், கர்மம் காரணம் என்கிறான், பில்லி சூனியம், செய்வினை காரணம் என்கிறான், செய்த பாவங்கள் காரணம் என்கிறான், இப்படி காரணங்கள் பலவாக இருந்தபோதும் எல்லோருக்கும் பொதுவான விடை எப்போதும் கிடைப்பதில்லை. ஏனெனினில் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும் இதே துன்பங்களை அடைகின்றனர்.

இதனை தெளிவாக ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் இப்படிக்கூறுவார். “பிறப்பதற்கு முன் ஏற்பட்டதோ, பிறந்த பின் ஏற்பட்டதோ, கடவுள் கொடுத்ததோ, கர்மவினை அளித்ததோ, கிரகங்கள் விளைவித்ததோ, வேறேதேனால்லுண்டானதோ மனித வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், நன்மை, தீமைகள் அவனில் செயற்பட “மனிதன்” என்ற சொல்லில் கலந்திருக்கும் பலகருவிகளில் ஒரு கருவிதான் காரணம், அந்தக்கருவி “மனம்”, கடவுள் நன்மையோ தீமையோ செயற்படுத்த விரும்பினார், கிரகங்கள் தனது செயலை செயல்புரிய வேண்டுமாயின், எமது பூர்வ கர்மம் செயற்பட வேண்டுமானால் அவை மனதினூடாகத்தான் செயற்படவேண்டும்.

மனிதனின் முயற்சி, எண்ணம், செயல் எதுவானாலும் முதலில் மனதில் எண்ணமாக பரிணமிக்க வேண்டும், அதன் பின்னரே செயல் நிலைக்கு வரும். செல்வம் பெறவேண்டும் என்று எண்ணுபவன் தனது மனதில் முதலில் செல்வம் பெறவேண்டும் என்ற எண்ணத்தினை உருவாக்கி, அதன் படி மனதினை செயற்படுத்தியே செல்வத்தினை பெறவேண்டும்.

இதைப்போல் மனிதருக்கு நடைபெறும் தீமைகளும் மனதில் எண்ணமாக பரிணமித்தே எமக்கு நடைபெறுகிறது. இதுபற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம். இந்த பதிவில் கூறவரும் உண்மை யாதெனில் “ எமக்கு நடைபெறும் நன்மைகள், தீமைகள் எதுவாக இருப்பினும் அது மனதினூடாகவே நடைபெறுகிறது” என்பதே!

ஆகவே மனதினூடாக இவை எப்படி செயற்படுகிறது என்பதனை நாம் அறிந்தால், கட்டுப்படுத்தும் முறைகள் தெரிந்தால், எமக்கு நடைபெறும் நன்மை, தீமைகளையும் நாம் மாற்றி அமைக்கலாம்.


மனதின் செயல்முறை விஞ்ஞானம் மேலும் தொடரும்.. 

2 comments:

  1. நன்றி
    மேலும் தொடர வாழ்துக்கள்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...