குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 11, 2014

காயத்ரி மந்திர அட்சர தெய்வ சக்தி விழிப்பு சாதனை

காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமும் பிரபஞ்ச பிராணனிலும், மனித சூக்ஷ்ம ஸ்தூல உடலிலும் குறித்த தெய்வ சக்தியை விழிப்பித்து மனிதனுக்கு பல போக பாக்கியங்களை அளிக்க வல்லது என்பதை எமது முன்னைய கட்டுரையில் விளக்கியுள்ளோம்.

இந்தபதிவில் எமது பதிவுகளை வாசித்து, குருமண்டலத்துடன் தொடர்பு கொண்டு சாதனை புரியும் அன்பர்கள் தமது சாதனையின் பலனை துரிதமாக பெறவைக்கும் ஒரு அரிய சித்த சாதனையினை வெளியிடுகிறோம்.

இதனை பயிற்சித்து பலன் பெற  தினசரி 108 காயத்ரி ஜெபம் செய்பவராக இருக்கவேண்டும்.

இந்த சாதனை படிப்படியாக காயத்ரி மந்திர சக்திகளை உங்கள் மனதிலும், உடலிலும் விழிப்படைந்து உங்கள் உலகவாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகி ஆன்ம பாதையில் இட்டுச்செல்லும்.

இதனை பயிற்சிக்கும் முறை:
முதலில் சித்தவித்யா மண்டல பத்து குருநாமம், பின்னர் 108 காயத்ரி மந்திர ஜெபம், அதன் பின்னர் காலை மாலை  மூன்றுதடவை ஆறுதலாக கீழ்வரும் சித்த சாதனையினை வாசித்து மனதில் பாவித்து வரவேண்டும்,
  1. ஓம் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள சஹாஸ்ரார  சக்கர சக்தியை விழிப்படைய செய்து பரப்பிரம்ம நிலையினை உண்டாக்கி தெய்வ சக்திய உடையவன் ஆக்குகிறது. நான் பரிபூரண தெய்வ சக்தி உடையவன்//ள்
  2. பூர் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் பிராணனை நிறைவிக்கின்றது. நான் பிராண சக்தி நிறைந்தவன்/ள்
  3. புவஹ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தீமைகள், நோய்களை அழிக்கிறது. நான் எந்த தீமைகளும் அண்டாதவன்/ள்.
  4. ஸ்வஹ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் இன்பத்தினை தரும் சக்திகளை ஈர்க்கிறது. நான் எப்போதும் இன்பம் உடையவன்
  5. தத் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தாபினி சக்கர சக்தியை விழிப்படைய செய்து  எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் ஆற்றல் என்னில் உருவாக்குகிறது. நான் எடுத்த காரியத்தில் வெற்றி அடைபவன்/ள்
  6. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள சப்ஹல்த சக்கர சக்தியை விழிப்படைய செய்து எனது மனதிலும் உடலிலும் துணிவு  ஆற்றல் என்னில் உருவாக்குகிறது. நான் எப்போதும் துணிவு உடையவன்/ள்
  7. வி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள விஸ்வ சக்கர சக்தியை விழிப்படைய செய்து  எனது மனதிலும் உடலிலும் எடுத்த காரியங்களை சரியாக பரிபாலிக்கும் ஆற்றலை  உருவாகிறது. நான் எக்காரியத்தையும் சிறப்பாக முடிப்பவன்.
  8. துர் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள துஷ்டி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்லவற்றை பெறும் கல்யாண குணத்தினை உருவாக்கிறது. நான் எப்போதும் நல்லவற்றை எண்ணும் கல்யாண குணம் உடையவன்/ள்.
  9. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள வரத சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் யோக சக்தியை பெறும் தன்மையினை உருவாக்கிறது. நான் யோக சக்தி உடையவன்/ள்.
  10. ரே அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ரேவதி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எல்லாவற்றையும் அன்பு செலுத்தும் பண்பினை உருவாக்குகிறது. நான் அன்பு நிறைந்தவன்/ள்.
  11. ணி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள சூக்ஷ்ம சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும்  பணத்தினை பெறுவதற்குரிய பண்பினை உருவாக்கிறது. நான் எனக்கும் என்னை உதவி நாடிவருபவர்களுக்கும் உதவக்கூடிய பண வசதி உள்ளவன்/ள்.
  12. யம் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஞான சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தேஜஸ் எனும் ஒளிமயமான அறிவினை பெறுவதற்குரிய பண்பினை உருவாக்குகிறது. நான் ஒளிமயமான அறிவு உடையவன்/ள்.
  13. பர் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள பார்க சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்லவற்றை பாதுகாக்கும் சக்தியினை உருவாகுகிறது. எனது நல்லவற்றை எப்போதும் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளவன்/ள்.
  14. கோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள கோமதி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்லறிவினை உருவாக்குகிறது. நான் நல்லறிவு உள்ளவன்/ள்,
  15. தே அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள கோமதி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தீமையை அடக்கும் சக்தியினை உருவாக்குகிறது.  நான் எல்லாவித தீமைகளையும் அடக்க கூடியவன்/ள்,
  16. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள வராகி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எந்த செய்கையிலும் முழுமையாக ஈடுபடும் தன்மையினை உருவாக்குகிறது. நான் எடுத்த காரியத்தில் முழுமையாக ஈடுபடுபவன்/ள்.
  17. ஸ்ய அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஸின்ஹநி  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தாரணை – ஏகாக்கிர சக்தியினை உருவாக்குகிறது. நான் தாரணா சக்தி உடையவன்/ள்.
  18. தீ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தியான  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் பிராணனை நிறைவிக்கின்றது. நான் பிராணன் நிறைந்தவன்//ள்
  19. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள மர்யாதா சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் சுயகட்டுப்பாட்டு சக்தியினை தருகிறது. நான் சுய கட்டுப்பாடு உடையவன்//ள்
  20. ஹி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஸ்வதா சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தபஸ்  சக்தியினை தருகிறது. நான் தபஸ் சகதி உடையவன்/ள்.
  21. தி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள மேதா சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தூரநோக்குடன் செயற்படும்  சக்தியினை தருகிறது. நான் தூரநோக்கு சிந்தனை உடையவன்/ள்.
  22. யோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள யோகமாயா  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதும் உடலும் விழிப்புணர்வுடன் இருக்கும் சக்தியினை தருகிறது. நான் எப்போதும் விழிப்புணர்வு உடையவன்/ள்.
  23. யோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள யோகினி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்ல பலனைத்தரும் செயல்களை, பொருட்களை  உற்பத்தி செய்யும்   சக்தியினை தருகிறது. நான் நல்லவற்றை உருவாக்குபவன்/ள்
  24. நஹ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தாரிணி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எல்லோரிடமும் இனிமையாக பழகும் பண்பினை தருகிறது. நான் இனிமையான பண்பு உடையவன்/ள்.
  25. ப்ர அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ப்ரபாவ சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் இலட்சியத்தில் உறுதியாக இருக்கும் சக்தியினை தருகிறது. நான் எனது இலட்சியத்தில் உறுதியானவன்/ள்.
  26. சோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஊஷ்மா  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எந்த செய்கையையும் தைரியத்துடன் அணுகும் தன்மையினை தருகிறது. நான் தைரியம் உடையவன்/ள்.
  27. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தர்ஷய சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தெய்வ ஞானத்தினை பெறும்  தன்மையினை தருகிறது. நான் தெய்வ ஞானம் உடையவன்/.ள்
  28. யாத் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள நிரஞ்சன சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் மக்களிற்கு தன்னலம் அற்ற சேவையினை   செய்யும் ஆற்றலை தருகிறது. நான் தன்னலமற்ற சேவை புரிபவன்/ள்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...