குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 13, 2014

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦1


இந்த பதிவுகள் எனது  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக வாசிப்புகளின் அடிப்படையானது. இயலுமான வரை சொற்பிரயோகங்களை அரவிந்தரின் சொற்களையும் அதற்கு தகுந்த தமிழ் சொற்களையே உபயோகித்துள்ளேன். இந்த புரிதல்கள் மேலும் பட்டை தீட்டப்படவேண்டியவை.  

அரவிந்தரின் பூரண யோகத்தில் சாதகன் அடியவேண்டிய ஏழு நிலைகளை பகுத்து கூறியவை சப்த சதுஷ்டயம் எனப்படும்.

அரவிந்தரின் யோகத்தில் சாதகனின் இலக்கு நான்கு, அவையாவன;
  1. சுத்தி – தூய்மைப்படுத்தல்
  2. முக்தி – விடுதலை அடைதல்
  3. சித்தி – உணர்ந்து செம்மையடைதல்
  4. புக்தி – ஆனந்த அனுபவம்

இவற்றை அடைவதற்கான இலக்குகள் ஏழு நிலை, அந்த ஏழு நிலைகள் ஒவ்வொன்றும் நான்காக விரியும். அந்த சதுஷ்டயம் – ஏழும் வருமாறு;
  1. சாந்தி சதுஷ்டயம்
  2. சக்தி சதுஷ்டயம்
  3. விஞ்ஞான சதுஷ்டயம்
  4. சரீர சதுஷ்டயம்
  5. கர்ம சதுஷ்டயம்
  6. பிரம்ம சதுஷ்டயம்
  7. சித்தி சதுஷ்டயம்

இவற்றின் விபரங்களை ஒவ்வொன்றையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்,

சாந்தி சதுஷ்டயம்
ஒருவன் பூரண சாந்தியினை (அமைதியினை) அடைவதற்கு நான்கு பண்புகள் இருக்க வேண்டும். இந்த நான்கும் அவனது உறுதியான சாதனா பயிற்சியில் இருக்க வேண்டும். 

அந்த நான்லில் முதலாவதான சமந்தா எனப்படும் சமபாவம் பற்றி சுருக்கமாக இந்த பதிவு கூறும்;

சமந்தா – சமபாவம் – மன, பிராண, உடல் இச்சைகளில் இருந்து விடுபடல், அதாவது இந்த இச்சைகள் எம்மை தொல்லைப்படுத்தாமல் இருக்கும் படி உறுதியாதல். இறைசக்தி எம்முள்ளும் வெளியிலும் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளல். மனம், பிராண, உடலில் எதுவித இச்சை எழுந்தாலும் அவற்றை சமநிலையில் இருந்து கவனிக்கும் பண்பு. வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமனாக ஏற்றுக்கொள்ளும் மன, உடல் ஆற்றலுக்கு சமந்தா அல்லது சமபாவம் எனப்படும். இதனை பெறுவதற்கு இரண்டு வகையினை கூறுகிறார். முதலாவது நேர் சமநிலை இரண்டாவது மறை சமநிலை.

மறை சமநிலை என்பது எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளில் (எம்மை பரிணாமத்தில் உயர்ந்து செல்லவிடாத புலன் உணர்ச்சிகள்) இருந்து விடுபடும் முறை. இதனை பயிற்சிப்பதற்கு மூன்று வழிமுறைகள் காணப்படுகின்றன.முதலாவது திதிக்ஷா எனப்படும் இச்சாசக்தியால் கட்டுப்படுத்தல். இது சாதகன் தனது புலன்களை தாழ்ந்த உணர்ச்சிகள் ஆட்படுத்தி விடாமலும், இன்ப உணர்ச்சிகள் மயக்கிவிடாமலும் தனது இச்சா சக்தி மூலம் கட்டுப்படுத்துவதாகும். இரண்டாவது உதாசீனதா – இது அறிவால் தெளியும் முறையாகும். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நிலையானது அல்ல என்பதனை அறிவால் உணர்ந்து அதனை விலக்கும் செயல்முறை. மூன்றாவது நதி எனப்படுவது, இது பக்தி எனப்படும் எல்லாச்செய்கைகளையும் இறைவனின் இச்சா சக்திக்கு சமர்ப்பித்து காரியம் ஆற்றும் நிலையாகும். இந்த மூன்று பயிற்சிக்களாலும் ஆன்மா வெளி உலகங்களின் பற்றுகளில் இருந்து விடுபட்டு  தாழ் உணர்ச்சிகள் வலுவிழந்து உயர்சக்தியினை பெறுவதற்குரிய பண்பினை பெறும்.

நேர் சமநிலை என்பது உயர் இறை சக்தியை எம்மில் செயற்பட செய்யும் முறை. மறை சமநிலையினால் பற்றற்ற நிலையடைந்த ஆன்மா தனது சுய ரூபத்தில் இருந்து அமைதியை ஆனந்தத்தினை அனுபவிக்க தொடங்கும். ஒருதடவை முழுமையான விழிப்புணர்வினை அனுபவித்த சுயம் – ஆன்மா இன்பம், ஆனந்தம், அமைதி, அறிவு, சுயத்தின் இச்சா சக்தியை உணர்தல் என்பவற்றை பெறும். இதுவும் மறை சமநிலை போல் மூன்று வழிகளில் அடையப்படுவது. முதலாவது ரச எனப்படும் மனம் பற்றற நிலையினை அடைவதினால் உண்டாகும் இன்பம், இரண்டாவது எல்லாவித ரச நிலைகளிலும் மனதிற்கு உண்டாகும் இன்பம். மூன்றாவதும் ஆனந்தம் – இது மனதினால் அனுபவிக்கும் இன்பத்தினை விட உயர்ந்தது.

அதாவது மறை சமநிலையினை பயிற்சிப்பதன் மூலம் எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளை வெல்லும் அதேவேளை நேர் சமநிலையினை பயிற்சித்து தெய்வ சக்தியை எம்மில் செயற்பட வைக்க முடியும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...