குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 29, 2014

காயத்ரி மந்திரமும் தமிழரும்

தமிழர்கள் பலர் காயத்ரி மந்திரத்தினை தமக்கு அந்நியமானதாக பார்க்கும் மனோபாவம் மிக்கவே இருக்கிறது. இதற்கு நாத்திகவாதமும், எதையும் எதிர்க்கும் மூர்க்கத்தனமான தூற்றல் அரசியலும் காரணமாக இருக்க முடியும்.  இன்று வேற்று இனத்தவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல், எங்கோ யாரோ விஞ்ஞானி உறுதி அளித்ததாக் தரப்படும் சான்றிதழை வைத்துக்கொண்டு, தமது சுய அறிவால் கானாதனை கண்மூடித்தனமாக நம்புவபர்கள் தானே பரீட்சித்து, தனது மனதினை அறிவினை தெளிவு படுத்தும் தொழில்நுட்பத்தினை கண்மூடித்தனமாக மறுதலிப்பது பெரும் அறியாமையாகும்

Friday, November 28, 2014

ஆத்ம யோக ஞானம்

ஆன்ம தேடலுடன் தன்னை அறிந்து தனக்கு மேலே உள்ள மஹா சக்தியை அடைய வேண்டும்  என விரும்புபவன் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் எனது குருநாதர் உபதேசித்த படி
  1.  நீ யார்?,
  2. மனிதனின் அமைப்பு,
  3. ஆன்ம சுதந்திரம்,
  4. சூக்ஷ்மம்தான் உண்மை மனிதன்,
  5. சூக்ஷ்ம உடல்,
  6. சூக்ஷ்மமும் ஸ்தூலமும்,
  7. சூக்ஷ்ம சாதனையின் தொடக்கம்,
  8. மனக்கண் செயல் பயிற்சி,
  9. கர்மாவும் வாழ்க்கையும்,
  10. கர்மாவை வெல்லும் வழி,
  11. நல்ல அறிவும் கேட்ட அறிவும்,
  12. அறிவின் துணை பெறல்,
  13. முக்காலமறிதல்,
  14. கால ஞானமும் சூக்ஷ்ம திருஷ்டியும்,
  15. சூக்ஷ்ம திருஷ்டி பயிற்சிகள்,
  16. வாழ்வின் குறிக்கோள்,
  17. விலங்குகளின் பரிணாமம்,
  18.  வாழ்க்கைப் பட்டியல்,
  19. பாவனா சக்தி,

தியானத்தின் மூலம் பேரறிவு பெறல்


தியானம் என்பது மனத்தைக் கடந்து உணர்வை ஒடுக்கல் என்று பார்த்தோம், அந்த உணர்வு எதில் ஒடுங்குகிறதோ அதன் தன்மைகளை உணர்வும் உணர்வினூடாக மனமும், மனத்தினூடாக புத்தியும், உடலும் பெறும். ஆகவே உணர்வை பிரபஞ்ச பேரறிவில் ஒடுக்கினால் மனிதன் பிரபஞ்ச சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளமுடியும். இதற்குரிய ஓர் எளிய வழி காயத்ரி ஜெபமும், தியானமும், காயத்ரி மந்திர ஜெபம் தாரணையாகி பின்னர் உணர்வே காயத்ரி மந்திர மயமாகும் போது ஒளி வடிவான பரம்பொருள் எமது புத்தியில், மனதில் பிரகாசிக்க தொடங்கும்.

மனமும் தியானமும்

தியானம் என்பது மனச்சாதனை அல்ல, அது ஒரு உணர்வு சாதனை, உணர்வு எப்போதும் மனதுடன் இருந்து செயற்படுவது, மனதைக் கடந்து உணர்வை பிரித்தால் தியானம் சித்திக்கும். உணர்வு அது எதனுடன் ஒன்றுகிறதோ அதன் தன்மையினை பெற்று அதுவாகும். அதாவது ஒருவன் பிரபஞ்ச மகா சக்தியை தியானப்பொருளாக கொண்டு உணர்வை ஒடுக்குவானேயானால் அவனே அந்த பிரபஞ்ச சக்தியே ஆவான். தியானத்தின் உணர்வு மனதை தாண்டி வந்துவிடுகிறது, அப்படி தாண்டி வருவதற்கு எண்ணங்களை ஒழுங்கு [படுத்தும் செய்கையே தாரணை அல்லது எகாக்கிரம் எனப்படுகிறது. எந்தவொரு தியானத்தினை செய்வதற்கு முன்னரும் தாரணை செய்யப்படவேண்டும். தாரணை என்பது உணர்வு எனும் வாகனம் தியானப்பொருளை நோக்கி வேகமாக பயணித்து ஒன்றுவதற்கு ஏற்படுத்தப்படும் போக்குவரத்து கட்டுப்பாடு போன்றது, சலனமுற்றுக் கொண்டு இருக்கும் மனம் traffic Jam ஆன பாதை போன்றது, இந்த பாதையினூடாக உணர்வு பயணித்து இலக்கை (தியானப்போருளை) அடைந்து ஒன்றுவது கடினம், ஆகவே traffic control ஆகிய தாரணை இன்றி தியானம் செய்ய முடியாது.

மனம் - தாரணை - தியானம்


பலரும் மனதை கட்டுப்படுத்தவேண்டும், அடக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். தியானம் யோகம் என்பவற்றை செய்பவர்களை கேட்டாலும் இதே பதிலைத்தான் தருகிறார்கள். உண்மை இதுவல்ல பாராசக்தியின் மாயா சக்தி சொருபமான மனதை அடக்கவோ, ஒடுக்கவோ ஆரம்ப நிலையில் எவராலும் செய்ய முடியாது. சிவமானவனுக்கே மனம் அடங்கும். அப்படி செய்ய முனைபவகள்தான் யோகம், தியானம் என்று போய் வாழ்க்கையை குழப்பி கொள்பவர்கள். பலதிசைகளில் எண்ணமாக விரிந்து உணர்வை குழப்பும் மனதை பிராண சக்தி செலவினை குறைந்து ,ஒழுங்குபடுத்தி ஒரு திசையில் ஓடச்செய்யும் செய்கையே தாரணை அல்லது எகாக்கிரம், இதனை சாதிக்க இதன் முடிவில் மனம் அகன்று உணர்வு தியானிக்கும் பொருளுடன் ஒன்றாவதே தியானம்.

Wednesday, November 26, 2014

பஞ்ச ப்ரணாலீ

சரீரம், பிரபஞ்சம், மனம், ஆத்மா, தேவதை ஆகிய ஐந்தும் குருதத்துவத்தின் பஞ்ச ப்ரணாலீ எனப்படும். சாதகன் சரீரத்தின் மூலம் பிரபஞ்சத்தினை உணர்கிறான், சரீரத்தையும் பிரபஞ்சத்தினையும் உணர்ந்த பின்னர் மனசின் குணங்களை, சக்திகளை உணர்கிறான், மனதின் சக்தியால் ஆத்மாவை உணர்கிறான். அதன் மூலம் தேவதையினை உணர்கிறன், இவற்றை எல்லாம் தொட்டு காட்டுவது குருவின் கருணையான உபதேசமே! ஆகவே ஸ்தூல சரீரத்தின் உதவியால் சூக்ஷ்ம சரீரத்தின் தன்மைகளை உணர்ந்து அதன் மூலம் தேவதையின் ச்வரூபத்தினை உணர்கிறான், இவையெல்லாம் குருவின் அன்பிலிருந்தே சுரக்கும்.

காலீகானந்த நாதர் - காலீ உபாசகர்

Monday, November 24, 2014

அகஸ்தியர் ஞானம் முப்பது - பழைய பிரதி


எனது பாட்டனார் வைத்திய கலாநிதி அ. வேலுப்பிள்ளை அவர்களின் சேமிப்பில் இருந்த புத்தகத்தில் இருந்து.......





Wednesday, November 05, 2014

கனடாவில் காயத்ரி தீட்சை, மானச யோக பயிற்சி வகுப்புகள் (5-12-2014 & 6-12-2014)

அன்பின் நண்பர்களே,

குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் சீடர் இராஜ யோகி இராஜமோகன் ஐயா அவர்கள் கனடா விஜயம் செய்ய உள்ளார்கள்.

இதன் போது காயத்ரி தீட்சை, ஆன்ம, யோக, மானச வித்தைகளின் விளக்கங்களும் பயிற்சிகளும் ஆர்வம், பக்குவம் உள்ளவர்களுக்கு தருவார்கள்.

இந்த விடயத்தில் ஆர்வம் உள்ள கனடாவில் வசிப்பவர்கள், உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அறியத்தரவும்.

இது தொடர்பாக கனடாவில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி;

contact: Arul K.Jayandran, Canada
phone: 001-6476383412
e-mail: kand2000@hotmail.com

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...