குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 16, 2014

நவக்கிரக காயத்ரி சாதனை – சந்திர காயத்ரி மந்திர சாதனை




ஏற்கனவே எமது பதிவில் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் அதன் சாதனையின் மூலம் பல்வேறு தேவதா சக்திகளை பெறலாம் என்று கூறியுள்ளோம். இந்த வரிசையில் இன்று எல்லோருக்கும் இருக்கும் பயம் நவக்கிரகங்கள், ஆகவே இந்த தொடரில் ஒன்பது கிரகங்களது காயத்ரி மந்திரத்தினையும் அதன் மூலம் குறித்த கிரகசக்தியினை எம்மில் ஈர்த்து எமது குறைகளை போக்கி கொள்ளும் முறையினையும் விளக்குகிறோம். தேவையானவர்கள் பயிற்சித்து பலன் காண்க.

இதற்கான நிபந்தனை, முதலில் தினசரி நூற்றி எட்டு தடவை மகா காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ.......) கூறி, சித்த சாதனை செய்து முடித்திருக்க வேண்டும்.

அதன்பின்னர் ஒரு திங்கட்கிழமை) சூரியோதயத்தில், சந்திர ஹோரை நேரத்தில் கீழ்வரும் ஒழுங்கில் செய்ய வேண்டும்.
  1. தாய் தந்தை குரு வணக்கம் -
  2. மஹா காயத்ரிமந்திர ஜெபம்108 தடவை
  3. காயத்ரி சித்தசாதனை
  4. சந்திர காயத்ரிமந்திரம் - 108 தடவை

இறுதியாக சந்திரனை மனதில் தியானித்தது சந்திர சக்தி எமது உடல், மனம், பிராணன் என்பவற்றில் சேர்வதாக பாவிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வசதியான்  சந்திர  ஓரையில் இதனை நாற்பது நாட்கள் செய்து வரவேண்டும்.

அதுபோல் சந்திரன் உச்சம் ஆட்சியாகும், பௌர்ணமி  நாட்களில் செய்தால் பலன் மிக அதிகம்.

இதனால் நீங்கள் பிறந்த போது உங்கள் சூக்ஷ்ம உடலில் குறைவாக காணப்படும் சந்திரனுடைய சக்தி பிராணனுடன் கலந்து அதிகரித்து அதன் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்கும். 

ஜாதகத்தில் சந்திரனால் பிரச்சனை என்று கூறப்படும் பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

கீழே சக்தி வாய்ந்த தாந்திரீக சந்திர காயத்ரி மந்திரம் தரப்பட்டுள்ளது.

ஓம் க்ஷீர் புத்ராய வித்மஹே அமிர்த தத்வாய தீமஹி தன்னோ சோம ப்ரசோதயாத்

இதன் பலன்கள்:

சந்திரம் மனம், மூளை, உணர்ச்சிகளை, உணர்திறன், மேன்மை, கற்பனை, அரசி, தாய் என்பவற்றின் காரகத்துவம் உடையது. இந்த சாதனை மூலம் இந்த விடயங்களில் உள்ள பிரச்சனை தீருவதற்குரிய சக்தியை சாதகன் பெறுவான். மேலும் மனச்சக்தியும் அமைதியும் பெறுவான். மன அழுத்தம், மனநோய், உணர்ச்சிக் கோளாறுகள் என்பவற்றை இல்லாதாக்கும். மேலும் உடலையும் அகத்திணையும் அழகாக்கும். 


Monday, December 15, 2014

காயத்ரி அனுஷ்டானம்



காயத்ரி அனுஷ்டானத்தில் மூன்று வகை உள்ளன. லகு (சிறிய) அனுஷ்டானம், மத்திம (நடுத்தர) அனுஷ்டானம், உச்ச அனுஷ்டானம் என்பவை அவை. இவை தினசரி காயத்ரி ஜெபத்தில் இருந்து ஒருவருக்கு அதிகமாக ஆன்ம, மனோ, பிராண, தெய்வ சக்திகள் தமது காரிய சித்திக்காக தேவைப்படும் போது செய்து தம்மை வலுப்படுத்திக்கொள்ளமுடியும். 

1) லகு அனுஷ்டானம் என்பது 24000 ஜெபத்தினை  9 நாட்களில் முடிப்பது. தினசரி 27 மாலைகள் வீதம் செய்ய வேண்டி வரும், சராசரி மூன்று மணித்தியாலங்கள் தேவைப்படும். 

2) மத்திம அனுஷ்டானம்: 125,000 ஜெபத்தினை நாற்பது நாட்களில் தினசர் 33 மாலைகள் வீதம் செய்ய வேண்டும். 

3) உச்ச அனுஷ்டானம்: 24,00,000 ஜெபத்தினை ஒருவருடத்தில் தினசரி 66 மாலைகள் வீதம் செய்வது. 

இதன் மூலம் ஒருவன் அதிக தபஸ் சக்தியினை பெறலாம். இந்த விபரத்தினை கண்டவுடன் உடனடியாக இதனை செய்து பலன் பெறவேண்டும் என்று எண்ணி முயற்சிக்க வேண்டாம். முதலில் ஒருவருடம் குருமந்திரம், காயத்ரி சித்த சாதனை, தினசரி 108 தடவை காயத்ரி ஜெபம் செய்து மனம், உடல் உயர்ந்த சக்தியினை பெறுவதற்குரிய பக்குவத்தை சரியாக பெற்று அதன் பின் லகு, மத்திய, உச்ச அனுஷ்டானங்களை குருவின் வழிகாட்டலுடன் செய்ய வேண்டும். 

Tuesday, December 09, 2014

ஜாதக பிரச்சனைகளுக்கு நவக்கிரக காயத்ரி சாதனை – சூரிய மந்திர சாதனை


ஏற்கனவே எமது பதிவில் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் அதன் சாதனையின் மூலம் பல்வேறு தேவதா சக்திகளை பெறலாம் என்று கூறியுள்ளோம். இந்த வரிசையில் இன்று எல்லோருக்கும் இருக்கும் பயம் நவக்கிரகங்கள், ஆகவே இந்த தொடரில் ஒன்பது கிரகங்களது காயத்ரி மந்திரத்தினையும் அதன் மூலம் குறித்த கிரகசக்தியினை எம்மில் ஈர்த்து எமது குறைகளை போக்கி கொள்ளும் முறையினையும் விளக்குகிறோம். தேவையானவர்கள் பயிற்சித்து பலன் காண்க.

இதற்கான நிபந்தனை, முதலில் தினசரி நூற்றி எட்டு தடவை மகா காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ.......) கூறி, சித்த சாதனை செய்து முடித்திருக்க வேண்டும்.

அதன்பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை (இது சூரிய சாதனைக்கு, சனியிற்கு சனிக்கிழமை) சூரியோதயத்தில் கீழ்வரும் ஒழுங்கில் செய்ய வேண்டும்.
  1. தாய் தந்தை குருவணக்கம்
  2. மஹா காயத்ரிமந்திர ஜெபம்108 தடவை
  3. காயத்ரி சித்தசாதனை
  4. சூரிய காயத்ரி மந்திரம் - 108 தடவை

இறுதியாக சூரியனை மனதில் தியானித்தது சூரியனுடைய சக்தி எமது உடல், மனம், பிராணன் என்பவற்றில் சேர்வதாக பாவிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வசதியான்  சூரிய ஓரையில் இதனை நாற்பது நாட்கள் செய்து வரவேண்டும்.

அதுபோல் சூரியன் உச்சம் ஆட்சியாகும் மாதங்களிலும் செய்தால் பலன் மிக அதிகம்.

இதனால் நீங்கள் பிறந்த போது உங்கள் சூக்ஷ்ம உடலில் குறைவாக காணப்படும் சூரியனுடைய சக்தி பிராணனுடன் கலந்து அதிகரித்து அதன் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் சூரியனால் பிரச்சனை என்று கூறப்படும் பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

கீழே சக்தி வாய்ந்த தாந்திரீக சூரிய காயத்ரி மந்திரம் தரப்பட்டுள்ளது.


ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் 



Monday, December 08, 2014

அகத்திய மகரிஷி அருளிச்செய்த‌ மனோன்மணி பூசை அகவல்

இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்துவிட்டு நானும் ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் அவர் செய்வதாக இருக்க கூடாது என்ற வீம்புடன் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது தினசரி பாராயணம்தான் இந்த மனோன்மணி அகவல்.

அப்போது இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டதன் காரணம் "அகத்திய மாமுனிவர் அருளியது" என்று அதன் தலைப்பில் இருந்த அறிமுகம் மட்டுமே. அர்த்தம் புரியாமல் சிறுவயதில் விளையாட்டாக வீம்பிற்கு படித்ததன் பலனோ என்னவோ, அதன் இறுதி வரிகளில் கூறப்பட்டதுபோல் "குருவடிவாயு பதேசங் கொடுத்துன் திருவடி தந்தருள் சிவசிவா சரணம்" என்ற பலன் எனது வாழ்வில் மெய்ப்பட்டது.

ஆம் குருவடிவாய் காயத்ரி மஹாமந்திர உபதேசமும், ஸ்ரீ வித்யா உபதேசமும் தேடாமலே கிடைக்கப்பெற்றது! 

ஆக தேவியை உபாசிக்க வேண்டும் என பேராவல் கொண்ட அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ இதனை படிக்க பலன் உண்டு என்பது எமது அனுபவ உண்மை!
ஹ்ரீம் ஓம் மனோமணி அற்புதப் பொருளே
ஆதியே பரையே சோதியே சுடரே
ஹ்ரீம் ஓமென்னு மக்ஷரத் தாதி
ஸ்ரீ ஓமென்னும் சிற்பரத் தாளே
உருவடி வான வுத்தமக் கொழுந்தே
அருவடி வான ஆதிய நாதி
ஓங்கி றோமான ஓங்கார றீங்கிலியே
ஆங்கிறோ மான ஆதி யனாதி
புவனப் பதியே போற்றி சிவய நம
சிவய நம வென்று சிந்திப்போர்க்கு
அபாய மறுக்கும் மறு கோணத்தி
சற் கோணத்தி சற பாணத்தி
சொற் பவனத்தி சூக்ஷ்ம ரூபி
திரிபுர பவா திகழொளி பவா
பரிபுர பவா பவனொளி பவா
சயளொளி பவா சரஹன பவா
ஆயிளொளி யான அகார றீங் கிலியே
பராபரப் பொருளே பளிங்கொளி யாளே
நிராதார மான நிஷ்கள ரூபி
சவ்வுங் கிலியும் யவ்வுமா னவளே
யவ்வும் உவ்வும் சவ்வுமா னவளே
வாசி என்னும் வளரொளிக் கொழுந்தே
பூசனை புரியும் புவனப் பதியே
கிறிபுங் கிலியுஞ் சங் வங் யங்குச
ஆற்பனத் துஞ்சி யமுத வர்ஷினி
இறியும் இறீயும் றியுமானவளே
றீங்காரத்திலிருக்கும் வடுக்கா வங் யங்
வடுகா யங் வங் ஆபத் தாரணா
பஞ்சாட்சரத்தின் பழம்பொருளாதி
நெஞ்சாட்ச் சரத்தி னிறைந்திருப் பவளே
பிரிவரை யில்லாப் பெண்ணுக் கரசே
சிவாய வென்னும் தெரிசனப் பொருளே
பூவார் குழலே புவனா பதியே
சாற்றும் பொருளே சவுந்தரி யாளே
யேற்று மடியார்க்கு கிருதயத்தி லேழுதாப் பொருளே
அவ்வுயி ராளே யவயசாட்சி யமுதவர்ஷினி
செய்வினை தீர்க்கும் திரிகோணத்தி
ஐயுங் கிலியு முன்பத்தோ ரட்சரமுந்
துய்யுஞ் சவ்வுமாய்த் தோன்றி நின்றவளே
பேயனாகிலும் பெற்றருள் பிள்ளையைத்
தாயே காக்கத் தானுனக்கே பாரம்
யாநின் னுடையான அருவுரு வாளே
சரணஞ் சரணம் நமஸ்தே சரணம்
வன சௌந்தரி போற்றி நமஸ்தே
குருவடிவாயு பதேசங் கொடுத்துன்
திருவடி தந்தருள் சிவசிவா சரணம்



அகவல் முற்றிறு

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...