குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 29, 2015

ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01

ஸ்ரீ கண்ணைய யோகியார் 1882ம் ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்து, ஆறு வயதில் அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பதினாறு வருடங்கள் பொதிகை, நீலகிரி போன்ற மலைகளில் அமைந்துள்ள சூக்ஷ்ம ஆசிரமத்தில் ஆன்ம, யோக, ஞான சாதனைகள் பயின்று ஆன்ம பரிணாமத்தினை பூர்த்தி செய்து பின்னர் தனது உலக பரிணாமத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும், ரிஷி பரம்பரை மாணவர்களுக்கு தற்காலத்திற்கு ஏற்றவகையில் யோக வித்தையினை பயிற்றுவிப்பதற்காகவும் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் ஆணையின் பேரில் பூவுலகில் எண்பது வருடங்கள் வாழ்ந்து, யோகமாணவர்களுக்கு பல்வேறு கலைகளை கற்பித்த உன்னத யோகி, தான் பல்லாண்டு காலம் வழி, நூறாண்டு வாழும் சாதனை என்பதனை கற்பித்ததற்கு சான்றாக நூற்று எட்டு ஆண்டுகள் வாழ்ந்து   1990ம் ஆண்டு கார்த்திகை பௌர்ணமியில் உடலை விட்டு இன்றும் சூக்ஷ்மமாக வேண்டியவர்களுக்கு யோக ஆன்மீக வித்தைகளை கற்பித்து வழிகாட்டி வருகிறார். 

யோகியாரின் மாணவர்களில் நீண்டகால மாணவர் இலங்கை, நுவரெலியா  ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள். சுவாமிகள், 1957 அளவில் வேலை நிமித்தமாக திருச்சி சென்றபோது ஸ்ரீ ரங்கம் கோயிலில் வைத்து ஒரு முதியவரால் நீலகிரி மலைச்சாரலில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அந்த முதியவரால் சென்னையில் அம்பத்தூரில் கண்ணைய யோகி என்பவர் இருக்கிறார், அவரே உனது குரு என்று அனுப்பி வைக்க அவரை சரண் புகுந்து அவர் உடல் நீக்கும் 33 வருடங்கள் வரை சீடனாக இருந்து, அவர் இட்ட ஆணைப்படி காயத்ரி மந்திரத்தை உன்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உபதேசி என்ற வாக்கின் படி  அவர்காலம் வரை உபதேசித்து வந்தார். இன்றும் அவரது பணி ஸ்ரீ காயத்ரி பீடத்தினால் செவ்வனே நடத்தப்படுகிறது. 

ஸ்ரீ கண்ணைய யோகியாரின் சிறப்பியல்பே அவர் தான் கற்பித்த பாடங்களை தனது கையெழுத்த்தில் பாடங்களாக எழுதி கொடுப்பார். அந்த பாடங்கள் அவரின் மாணாக்கரான எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடமிருந்து கற்கும் பாக்கியத்தை எமக்கு தந்தார்.  

இதேபோல் கண்ணைய யோகியாரின் பாடங்களை ஆன்மீக படைப்புகளாக சென்னையில் வெளியிடும் பணியினை அவரது இன்னுமொரு நேரடி மாணவரான அருட்திரு. இராஜமோகன் ஐயா அவர்கள் ஆத்ம ஞான யோக சபை மூலம் செய்துவருகிறார். 

எமது வாசகர்களுக்கு நாம் எமது குருநாதரிடமிருந்து கற்ற இந்த உன்னத யோகியாரின் உபதேசங்களை, யோக விளக்கங்களை சுருக்கமாக ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தமாக தரலாம் இன்று வசந்த நவராத்திரியிலிருந்து பதிவிடலாம் என்று எண்ணியுள்ளோம். 

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...