குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 26, 2015

தற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்

பேராசிரியர் தண்டங்கோரை நடேச கணபதி அவர்கள் தமிழ் நாட்டின் மிகுந்த புலமையுடைய தத்துவ பேராசிரியர். பலரும் பொருள் காண அஞ்சும், குழம்பும் சித்தர் பாடல்களிற்குள் மூழ்கி தைரியமாக மூடநம்பிக்கை இன்றி சித்தர்களின் பரிபாஷை எனப்படும் குறியீட்டு மொழியினை விளங்க, விளக்க  முயற்சித்தவர். சித்தர் பாடல்களை ஆங்கில வாசகர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, சாதகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் முன்னோடியானவர்.  

அத்தகைய சித்தர் தத்துவத்தில் பெரும் புலமை வாய்ந்த பேராசிரியர், முனைவர் டி. என் கணபதி ஐயா அவர்களுடன் நேற்று தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

எண்பத்து மூன்று வயதிலும் இளமையான குரலும், தெளிவான அன்பான பேச்சும் உடைய ஐயா வெறுமனே ஒரு சித்தர் தத்துவத்தை ஒரு ஆய்வுப்பொருளாக பார்க்காமல் பொருளுணர்ந்து அனுபவிக்கும் சித்தர் பரம்பரையினை சேர்ந்த ஒருவருடன் உரையாடிய திருப்தி கிடைத்தது.

சித்தர்கள் கூறிய ஞானத்தை விட்டுவிட்டு வெறுமனே அவர்களை ஒரு மாயாவிகள் மாதிரி திகில் கதை எழுதி குவிப்பவர்களை பற்றி கவலைப்பட்டார்.
அகத்தியரைப்பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டு இருப்பதாகவும், வெகு விரைவில் வெளிவரும் எனவும் கூறினார். இந்த வரலாறு தற்போதைய மக்களின் நம்பிக்கையுடன் முரண்படும் என்று ஒரு புதிரையும் வைத்திருக்கிறார். சித்தர்களுக்கு வரலாறு எழுதுகிறார்கள். சித்தர்கள் ஒளிநிலை அடைந்தவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை உள்ளவர்கள், எந்த கூட்டின் வரலாற்றை எழுதுகிறார்கள் என்று கூறி சிரித்தார். பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இலங்கையிற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் அதற்குரிய காலம் கனிந்து வருவதற்கு குருநாதர் வழிவகை செய்ய பிரார்த்திப்போம்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் அகத்தியர் ஞானம் கற்பதை கூறினேன். பாட்டினை பாராயணமாக செய்யாமல் பொருளுணர்ந்து படிக்கும்படி அறிவுரை கூறினார். தனது சித்தர்களின் குறியீட்டு மொழியும் சூனிய சம்பாஷனையும் பார்க்கும்படி கூறியுள்ளார்.

தான் கணணி, தட்டச்சு பாவிப்பதில்லை என்றும் பேப்பர் பேனாவில்தான் தனது எழுத்துப்பணி முழுவதும் நடப்பதாக கூறினார்.

தமிழகத்தின் முன்னணி ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் அவர்களை பற்றி கூறும்போது அவர் எனது வகுப்பு மாணவர் அல்ல, நான் வகுத்த மாணவர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


ஐயாவின் பணி தொடர குருநாதரும் தேவியும் துணையிருக்க பிரார்த்திக்கிறோம். 

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...