குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 17, 2015

கோரக்க நாதரின் நாத விந்து இரகசியம்




கோரக்க சித்தர் சமஸ்கிருதத்தில் பல தாந்திரீக நூற்களை இயற்றியுள்ளார். அவற்றுள் முக்கியமானது கோரக்க உபநிடதமாகும். இது முக்கியமான ஒரு தாந்திரீக உபநிடதமாகும். இதிலுள்ள ஒரு ஸ்லோகத்தையும் அதன் விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

ஈஸ்வர சந்தான் சந்தான்தோப்ரகார்கோ
நாத ரூப பிந்து பிந்து ரூப நாத
சிஷ்யா பிந்துரூப புத்ரா நாத ரூப
நாத சக்தி ரூப பிந்து நாத ரூப கரி பஹயே

பொருள்:
“பிரம்மத்திற்கு நாதமும் விந்துவும் இருபிள்ளைகள், (மனித உடலில்) நாதத்தில் விந்து உண்டு, விந்துவில் நாதம் உண்டு, (மனித உடலில்) சிஷ்யன் விந்து ரூபமான புத்திரன், நாதம் சக்தி ரூபமாக உள்ளது”.

இந்த ஸ்லோகம் நாத சம்பிரதாய யோகிகள் கோரக்க நாதரிடம் தாம் நாத விந்துவை உயர்த்தி ஊர்த்துவ ரேதஸ் யோகிகளாக மாறவேண்டும் என பிரார்த்திக்கும் ஸ்லோகமாகும். இது கோரக்கரால் அவரது மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிராத்தனையாகும். இந்த பிரார்த்தனையில் ஒருவன் தனது விந்தினை ஊர்த்துவமுகமாக்குவதற்குரிய இரகசியமும் கூறப்பட்டுள்ளது.
.

முதலாவது வரியில் பிரம்மத்திற்கு இரண்டு பிள்ளைகளான விந்துவும் நாதமும் உடலில் உள்ளது என்பது கூறப்பட்டுள்ளது. பிந்துவில் நாதம் உண்டு என்பது விந்து உடலில் எங்கு சக்தியாக சேர்க்கவேண்டும் என்பதன் குறியீடு, இது அனாகத சக்கரத்தை குறிக்கும். அனாகத சக்கரம் சூக்ஷ்முமான சப்தவடிவாக விந்து சக்தி மாறி சேர்க்க கூடிய இடமாகும். நாதத்தில் விந்து உண்டு என்பது ஆணின் உடலில் இருக்கு விந்து சக்தியாகும். இந்த விந்து எப்போதும் உயிர்ப்புடன் அலையும் நாதத்தின் தன்மையும் கொண்டிருக்கும். இத்தகைய சிஷ்யனதும் அனைத்து மனிதரின் விந்துவிலும் சிவமாகிய ஆதிநாதர் உறைகின்றார். இந்த ஆதிநாதரை நாதம் எனும் சப்தத்தால் எழுப்பி அனாகதத்திற்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ளது. 

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...