குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 31, 2016

கொழும்பில் ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக வகுப்புகள்

கொழும்பில் ஸ்ரீ ஸக்தி சுமனனின்  யோக வகுப்புகள்


அகத்திய மகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல்கள் 01 - 04 வரை}

இன்று அமாவாசை, அகஸ்திய மகரிஷி அருளிய சோடச கலை இரகசியம் சுருக்கமாக இங்கு பதியப்படுகிறது. விரிவான சித்த வித்யா விளக்கவுரை விரைவில் குருவருளால் வெளியாகும்

இன்று அமாவாசை, 29/12/2017
அகஸ்திய மகரிஷி அருளிய சோடச கலை இரகசியம் பாடல் 02 இற்கான‌ சுருக்க உரையுடன் இங்கு பதியப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சூரியோதயத்தில் என்ன திதி உதயமாகிறதோ அதன் படி ஒவ்வொரு பாடலாக பதிவிக்க எண்ணியுள்ளோம்.
ஸ்ரீ வித்யா பூஜை முறைகள் எவ்வளவு பெரிய யோக முறைகள் என்ற விளக்கத்தை இந்த பாடல் தொகுப்பு மூலம் அறிந்து கோள்ளலாம்.
குருவருளால் வெகுவிரைவில் அனுபவ சாதனா விளக்கங்களுடன் வெளிவரும்.
இன்று பிரதமை 30/12/16
அகஸ்திய மகரிஷி அருளிய சோடச கலை இரகசியம் பாடல் 03 இற்கான‌ சுருக்க உரையுடன் இங்கு பதியப்படுகிறது.
இதில் மனித உடலில் இடகலை, பிங்கலையில் எப்படி பிராண‌ சக்தி சலனம் ஏற்படுகிறது என்ற இரகசியம் மறைப்பாக கூறப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் விரிவான விளக்கவுரையுடன் நூலாக வெளிவர குருவருளை நாடி பிரார்திப்போம்!
இந்த ஞானம் அறியவேண்டும் என்று தாகம் உள்ளவர்களின் பிரார்த்தனையும் இதனை யதார்த்தமாக்க உதவும் என நம்புகிறோம்!
இன்று வளர்பிறை துவிதியை (31/12/2016)
இந்த பாடல் இடகலை பிங்கலையில் பிராணனின் சலனமே மனித வாழ்க்கையின் இன்பம், துன்பம் போன்ற இருமைகளுக்கு காரணம் என விளக்குகிறது.
மனித உடல் எடுக்க ஆன்மாவிற்கு வாழ்வு தருபவள் என்ற பெண்ணின் பெருமையும் இரண்டாவது வரியில் கூறப்படுகிறது.
வெகுவிரைவில் விரிவான விளக்கவுரையுடன் நூலாக வெளிவர குருவருளை நாடி பிரார்திப்போம்!
இந்த ஞானம் அறியவேண்டும் என்று தாகம் உள்ளவர்களின் பிரார்த்தனையும் இதனை யதார்த்தமாக்க உதவும் என நம்புகிறோம்!


Tuesday, December 27, 2016

Saturday, December 17, 2016

குரு உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்

முற்காலத்தில் ஒருமாணவன் தன்னை அறிய, மானச, யோக விடயங்களை கற்க ஒரு குருவை அண்டி பன்னிரெண்டு வருடங்கள் அவருடன் வாழ்ந்து தகுந்த மன, உடல் பண்புகளை உருவாக்கி உபதேசம் பெற்று இறை சாதனைகளை செய்து சித்தி பெற்றார்கள்.

இன்றைய சூழலில் இப்படி பன்னிரெண்டு வருடங்கள் குருவுடன் வாழ்வது என்பது சாத்தயமற்ற ஒன்றாகிவிட்டது. அப்படியானால் ஒருவரும் சாதனை செய்து சித்தி பெறமுடியாதா? இல்லை நிச்சயமாக முடியும்.

எப்படி சாத்தியம்?
  • அக்காலத்தில் பன்னிரெண்டு வருடம் சாதனை செய்வதற்குரிய சூழல் குருவால் உருவாக்கப்பட்டது, இன்று அது மாணவர்களது கைகளில் இருக்கிறது. அவர்கள் தாமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
  • அக்காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமையால் சாதனை நுட்பங்களை கற்பதற்கு பன்னிரெண்டு வருடங்கள் தேவைப்பட்டது.
  • அக்காலத்தில் குருவுடன் வாழ்வதால் அவருடைய தெய்வ காந்த சக்தி எம்முடன் கலந்து எமது சாதனைக்கு உதவும். குருவுடன் வாழ்ந்தாலும் தகுந்த பக்குவம் இல்லாமல் அவருடைய சக்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன் உண்மை விளக்கம் என்னவென்றால்;
  • ஒருவன் தான் பெற்ற சாதனையினை தகுந்த ஒழுக்க விதிமுறைகளுடன் பன்னிரெண்டு வருடங்கள் சாதனை செய்யவேண்டும் என்பதே முதன்மை விதி. இதற்கான விளக்கம் எமது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலில் விளக்கியுள்ளோம்.
  • இரண்டாவது ஒருவன் தனது மன, பிராண சக்திகள் வீணாக்காமல் இருக்கும் ஒழுக்க நெறிகளை தனது வாழ்வில் பின்பற்ற தொடங்குதல். இதனையே இயம, நியமம் என்று யோக சாத்திரம் கூறும்.
  • சாதனை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள இன்று ஒலி, ஒளி, எழுத்து ஊடகங்கள் இருக்கின்றன.
  • அடுத்து பல்லாயிரக்கணக்கான வருடங்கள் இந்த உண்மைகளை தமது அனுபவ அறிவின் மூலம் பிரபஞ்சத்தில் தொடர்ச்சியாக பேரொளி நிலையில் மகாகாரண சரீரத்தில் இருந்து பேணிவரும் குருபரம்பரையில் உள்ள ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தல். இந்த தொடர்பு நாம் தேடிக்கிடைப்பதில்லை. எமது பக்குவம்/ஆன்ம பரிணாமம் உயரும்போது தொடர்பு தானாக கிடைக்கும்.

ஆகவே ஒருவன் ஆன்ம சாதனையில் முன்னேறி தனது சாதனை மூலம் மன, பிராண சக்திகளை வலுப்படுத்தி நன்மைகள் பெற்று உயரவேண்டுமானால்;
  • முதலில் அதற்குரிய பண்புகளை தன்னில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த பண்புகளை வளர்ப்பதன் மூலம் குருபரம்பரையுடன் தொடர்பு ஏற்படும்.
  • அப்படி ஏற்பட்ட தொடர்பினால் சாதனகளை கற்றுக்கொண்டு பன்னிரெண்டு வருடம் இடைவிடாமல் செய்து வர எமது பரிணாமம் உயரும்.

இந்த உண்மைகளின் அடிப்படையில் எமது உபதேசங்களை ஒழுங்கு படுத்தியுள்ளோம்.
  • எம்மிடம் உபதேசம் பெற உங்களுக்கு விருப்பம் இருப்பின் தாராளமாக எம்மால் உதவ முடியும்.
  • அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:
      • கீழ்வரும் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
      • படிவம்
    • பின்னர் உபதேச குறிப்பினை கீழ்வரும் மூன்று முறைகளில் பெற்றுக்கொள்ள முடியும்;
    • தெரிவு ‍ 01: மூன்று நாள் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் வகுப்பில் பங்கு பற்றி நேரில் சந்தித்து உபதேசம் பெற்றுக்கோள்வது.
    • தெரிவு 02: எம்மால் கூறப்படும் குறித்த நேரத்தில் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்.
    • தெரிவு 03: உபதேச ஒலி நாடாவினை பெற்றுக்கொள்ளல்.
  • தெரிவு 01 & 02 ஐ தெரிவு செய்பவர்கள் ஒரு முறையாவது வகுப்பில் கலந்துகொள்வது தெளிவு பெற உதவும். 
என்ன சாதனைகளை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்? அதன் பயன் என்ன?
  • எல்லாவற்றிற்கும் அடிப்படை குரு, மகாகாரண ரூபத்தில் ஒளி நிலையாய் இருக்கும் குருமண்டலத்துடன் நாம் எப்படி எம்மை இணைத்துக்கொள்வது என்ற குரு சாதனா. இந்த சாதனையின் பயனாக எம்மை உயர்ந்த தெய்வ சக்தி பொருந்திய குருமண்டலத்துடன் இணைத்துக்கொள்ள முடியும்.
  • இரண்டாவது அகத்தியர் மூலகுரு மந்திரம், பீஜ மந்திரங்கள் மனதையும் பிராணனையும் உயர்ந்த பிரபஞ்ச சக்திகளுடன் இணைக்கும் கருவிகள், மனதில், வாக்கில் இவற்றின் மூலம் சக்தி அலைகளை உருவாக்கி எம்மில் பரிணாம உயர்வை உருவாக்கும். இப்படி ஐந்து சக்தி வாய்ந்த ஒருவனின் ஆன்ம பரிணாமத்தை தூண்டி இறை சாதனையில் முன்னேறக்கூடிய மன, பிராண வலிமையினை தரக்கூடியது அகத்தியர் மூலகுரு மந்திரம். இது பற்றிய மேலதிக விபரங்களை அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலில் அறிந்து கோள்ள முடியும்.
  • மூன்றாவது காயத்ரி மந்திரம், இது எல்லா அறிவிற்கும் மூலம், பிராணனை இரட்சிப்பது. எவ்வளவு சாதனை செய்தாலும் சக்தி பெற்றாலும் அதனை சரியாக பயன்படுத்த தெளிந்த புத்தி தேவை இதனை தருவது காயத்ரி மந்திர ஜெபம்.
  • நான்காவது காயத்ரி சித்த சாதனை; எவ்வளவு தெய்வ சாதனைகள், ஜெபம், இறைவழிபாடு செய்தாலும் சித்தம் என்ற ஆழ்மனத்தில் போட்ட விதைகளே வாழ்க்கையில் விருட்ஷமாகி பலனை தரும். ஆகவே சித்தத்தில் தகுந்த விதைகளை பதிக்காமல் எவரும் நல்ல பலனை பெற்று விட முடியாது. அதனை சாதிப்பது காயத்ரி சித்த சாதனை.
  • இந்த நான்கு பயிற்சிகளையும் நாம் கற்பிக்கும் சுவாசத்தை கவனித்தல், தீர்க்க சுவாசம் ஆகிய இரண்டு அடிப்படை பிராண சாதனைகளுடன் செய்து வர உங்கள் மனம் சுத்தியாகி, பிராணன் வலுப்பட்டு உங்கள் வாழ்வு சீராக தொடங்கும்.
  • இந்த நிலை வரை நீங்கள் உங்களை வலிமைப் படுத்திக்கொண்டாலே உலக வாழ்வு இன்பமாகத் தொடங்கும்.
  • இதற்கு மேல் உயர்ந்த சாதனை செய்ய தானாகவே குருமண்டலம் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
உங்களது கடமை;
  • நமக்கு மேல் எம்மை வழிநடாத்தும் குருமண்டலம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் உபதேசத்தினை பெற்றுக்கொள்வது. ‍‍
  • பெறும் உபதேசப்படி தினசரி சாதனையினை ஒழுங்காக செய்வது.
  • நம்பிக்கையுடன் கூடிய சாதனை சிரத்தை எனப்படும்.
  • நாம் செய்யும் சாதனையால் எமக்கு நன்மை கிடைக்கிறதா என்பதை எப்படி அறிவது?
  • உபதேசம் பெற்றும் நாற்பத்து ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக செய்து வர உங்கள் மன, உடல், சூழலில் நிச்சயமான நல்ல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.
  • இது வெறுமனே நம்பிக்கையால் ஏற்படும் அற்புதம் அல்ல, உங்களில் உறைந்திருக்கும் மன, பிராண, உடல் சக்திகளை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வந்து, எம்மை விட பலம் பொருந்திய தெய்வ சக்தியுடன் இணைப்பதால் ஏற்படும் மாற்றம். இதனை யோக அறிவியலை தெரிந்து கொள்வதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

இதனை உபதேசிக்கும் நீங்கள் எமக்கு குருவா?
  • எனது தனிப்பட்ட நிலையில் அத்தகைய நிலையை நான் குறித்த வரைவிலக்கணத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். இன்று குரு என்றவுடன் ஒருவித அடிமை நிலை மனோபாவத்தை ஏற்படுத்துவதே குரு சிஷ்ய உறவு முறையாக பார்க்கப்படுகிறது.
  • எமது நிலை "விஸ்வ மித்ரா" ; இறை சாதனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு நட்புடன் வழிகாட்டும் முறை. ஆகவே எம்மிடம் சாதனை பயில விரும்பினால் நாம் குரு பரம்பரையில் கற்றவற்றை நாம் கூறும் ஒழுங்கில் பயிற்சிக்க நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக எம்மை அணுகலாம்.
  • நீங்கள் குரு என்று கற்பிக்கும் எந்த வேடங்களும் எமக்கு பொருந்தாது என்பதும் அத்தகைய எதிர்பார்ப்புடன் எம்மை அணுகினால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாவீர்கள் என்பதனையும் உங்களுக்கு அறியத்தர விரும்புகிறேன்.
காவி உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல்
காட்டிடை அலைந்திடாமல் காணலிடை நலிந்திடாமல்
பூவுலகம் தன்னை சுத்த பொய் என்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினோரைப் புண்பட பேசிடாமல்
சேவைகள் செய்தற்போதும் தெய்வத்தை தெரிவோம் என்று
தெளிவுற காட்டினாய் உன் தினசரி வாழ்கைதன்னால்
தீவினை இருட்டை போக்கி ஜகமெல்லாம்
விளங்கும் ஆத்ம‌ யோக ஞான தீபமே

என்பதே எமது குருபரம்பரை பற்றிய வரைவிலக்கணம்.
  • இல்லறத்தில் இருந்து கொண்டு, குருநாதர் காட்டிய வழியில் சாதனை செய்துகொண்டு, வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை எனது சொந்த உழைப்பின் மூலம் சம்பாதித்து எமது குருமண்டலத்தை நம்பி வருபவர்களுக்கு வழிகாட்டி வருகிறோம்.
  • இந்தப் பணியில் எனது என்ற எந்த தன்முனைப்பும் இல்லை. நான் என்ற நிலை இன்றி நாம் என்று குருமண்டலத்தின் ஆணைக்கு இணங்க ஸக்தி சுமனன் ஆகிய "நான்" கருவியாக இருக்கிறேன்.
  • நீங்கள் உபதேசம் பெற்று சிரத்தையுடன் (நம்பிக்கையுடன் கூடிய செயல்) சாதனை செய்து வர குருமண்டலத்தின் அருட்சக்தி உங்களின் மனதின் மூலம் வழிகாட்ட தொடங்கும்.
  • எமது வழிகாட்டலில் இணைபவர்கள் எந்த விடயத்தையும் தெய்வ குணத்துடன், அறிவு சக்தியுடன் அணுகும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும். இந்த பண்புகள் எவை என்பதை சாதனா நியதிகள் என்ற உபதேச பாடத்தின் மூலம் அறிந்து கொள்வீர்கள்.

இதற்கு நாம் ஏதும் கட்டணங்கள் செலுத்த வேண்டுமா?
  • எம்முடைய எதிர்பார்ப்பு இங்கு எதுவும் இல்லை!
  • நாம் பெறும் ஒவ்வொன்றிற்கான நன்றியை திருப்பி செலுத்த வேண்டும் என்பது பிரபஞ்ச நியதி. அந்த நன்றி கீழ்வரும் ஒன்றாக இருக்கலாம். 
    • புதிய நூல்கள், பிரசுரம் வெளியிட தகுந்த பொருளதவிகளை செய்தல்.
    • ஆர்வமுள்ள அன்பர்களுடன் இந்த சாதனை முறைகளை பகிர்ந்து கொள்ளல்.
    • உங்கள் பிரதேசங்களில் வகுப்புகளை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்தல்.
    • உங்கள் வீட்டில் ஆர்வம் உள்ள சாதகர்களை அழைத்து குழுவாக சாதனை செய்தல்.
    • அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை வாங்கி நூலகங்களுக்கு, நண்பர்களுக்கு அன்பளிப்பு செய்தல்.
  • இவை எதுவும் உங்கள் விருப்பத்துடன் கூடிய மனப்பூர்வமான ஒன்றாக இருக்க வேண்டும். நாம் உங்களுடைய பங்களிப்பில் எதுவித எதிர்பார்ப்புடனும் இந்த பணியை செய்யவில்லை என்பதை தெளிவு படுத்துகிறோம்.
மேலே கூறிய விடயங்களை வாசித்து, விளங்கி உங்கள் மனம் இறைசாதனையில் ஈடுபடவேண்டும் என்று உங்கள் மனதில் தூண்டுதல் ஏற்படுமானால் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு உதவுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்

Friday, December 16, 2016

அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும்



அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் எனும் நூல் அகத்தியர் ஞானம் முப்பது என்ற அகத்திய மகரிஷியின் கிரியா ‍வாசி சிவ யோக விளக்கங்களை கூறும் அரிய பாடல் தொகுப்பு.

இந்த நூலின் சிறப்பு ஒரு மானிடனாக பிறப்பெடுத்தவன் தான் அடையக்கூடிய மிக உயர்ந்த இறை நிலையை (சித்தர்கள் கூறும் மகாகாரண சரீரம், திருச்சிற்றம்பலம், இறவா நிலை, சொருப சமாதி) அடைய விருப்பம் கொண்ட மாணவனை ஆரம்பம் நிலை முதல் இறுதி நிலை வரை அவன் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை படிப்படியாக எடுத்துரைக்கும்.

இன்று யோகம் பயில விரும்பும் பலர் அதன் முழுமையான வரை படத்தை அறிந்து கொண்டு பயிலத் தொடங்குவதில்லை. தமது வாழ்க்கையில் ஏற்படும் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு உகந்த தீர்வாக எடுத்துக்கொண்டு ஆரம்பிப்பதால் அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் அவர்களது பயணம் நின்று விடுகிறது. ஆனால் முழு வரை படத்தையும் அறிந்தவன் ஆர்வத்துடன் விரிந்த பிரபஞ்ச உண்மைகளை அறியும் ஆர்வத்துடன் முன்னேறுகிறான்.

இப்படி முன்னேறுவதன் பயனாக அவனது மன, பிராண சக்திகள் அதிகரித்து தனது உலக வாழ்க்கையிலும் அரிய சித்திகளை பேற்று இன்பத்தை அனுபவித்து அதைவிட உயர்ந்த இன்பத்தை அனுபவிக்கும் நோக்குடன் உயர்கிறான்.

இந்த பயணத்திற்குரிய முழுமையான வழிகாட்டி இந்த நூல்.

இந்த முப்பது பாடல்களும் மெய்ஞான குரு அகத்திய மகரிஷியின் ஆசியுடன் தியான சாதனை மூலம் விளக்கவுரை பெறப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

நூலைக்கற்ற பலரும் அவற்றில் சந்தேகம் தெளிய வேண்டும் என்றும், அகத்தியர் மூல குரு மந்திர உபதேசம் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து கீழ்வரும் வகுப்பு திட்டம் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் ஆரம்பிக்க பட இருக்கிறது.

இதன் பிரகாரம்:

இலங்கையில்:
  • ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் குறைந்தது இருபது மாணவர்கள் பதிவு செய்த பின்னர் வகுப்பு அறிவிக்கப்படும்.
  • வகுப்பின் தொடக்கத்தில் அகத்தியர் மூல குரு மந்திரமும், சித்த வித்யா குருமண்டல நாமாவளி, காயத்ரி மந்திர உபதேசம் வழங்கப்படும்.
  • பின்னர் இரண்டு நாட்களில் தினசரி தியானப் பயிற்சியுடன் பாடல்களுக்கான சுருக்க விளக்கவுரையும் கற்பிக்கப்படும்.
  • மூன்றாவது நாள் அடிப்படி பயிற்சி, தினசரி சாதனை வழிகாட்டல் தரப்படும்,
  • ஆசிரியரின் நேரம் தானமாக தரப்படுகிறது. மாணவர்கள் விரும்பிய நன்கொடையினை தரலாம்,பெறப்படும் நன்கொடைகள் இந்த பணி
  • கற்கும் மாணவர்களை ஏதாவது ஒருவகையில் இந்த நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு சென்றடைய செய்யும் பணியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவர்.
சென்னை/தமிழ் நாட்டில்:
  • வகுப்புக்களை ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
  • வகுப்புபிற்குரிய செலவுகளை {வகுப்பு நடாத்துவதற்குரிய இடம், ஆசிரியரின் பயண, தங்குமிட செலவுகள்} மாணவர்கள் பங்களிப்பு செய்வதோ, ஏற்பாடு செய்வதோ எதிர்பார்க்கப்படுகிறது.
  • வெளிநாடுகளில்
  • வகுப்புக்களை ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
    வகுப்புபிற்குரிய செலவுகளை {வகுப்பு நடாத்துவதற்குரிய இடம், ஆசிரியரின் பயண, தங்குமிட செலவுகள்} மாணவர்கள் பங்களிப்பு செய்வதோ, ஏற்பாடு செய்வதோ எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம் உள்ளவர்கள்:
கீழ்வரும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
https://goo.gl/forms/gV2tr3Lif25qkHKx1

Tuesday, November 29, 2016

குரு தத்துவம்


குரு என்பவரை மனிதராக கருதினால் மனம் எல்லைக்கு உட்பட்டு குறுகி விடும், எது ஆனந்தத்தை தருகிறதோ, எது ஆனந்தத்திற்கு காரணமாக இருக்கிறது, எது தெளிவை தருகிறதோ, எது ஞானத்தின் ஸ்வரூபமாக இருக்கிறதோ, எது உண்மை அறிவை தருகிறதோ! எது யோகத்தில் நிலைக்க வைக்கிறதோ, எது வாழ்க்கை பிணிக்கு வைத்தியமாக அமைகிறதோ, எது ஸ்ரீ என்ற மங்களத்தை வாழ்க்கையில் தருகிறதோ அந்த தத்துவமே குரு தத்துவம்!

Monday, November 28, 2016

குரு உபதேசமும் யோக பயிற்சியும்


பலர் தாம் தியானம் செய்ய வேண்டும், இறை சாதனை செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் வருகிறார்கள். இவர்களில் பலர் வியாதிக்கு மருந்து என்று வைத்தியரிடம் வந்தால் வைத்தியர் முத்தோஷமும் உனக்கு பிரகோபம் அடைந்திருக்கிறது, தினசரி திரிபலா சூர்ணம் எடுத்துக்கொள் என்று எழுதிக்கொடுத்து அனுப்பினால்;
  • ஒருவர் தினமும் வைத்தியர் எழுதிக்கொடுத்த திரிபலா என்ற வார்த்தையை திருப்பி திருப்பி கூறிக்கொண்டிருந்தார்,
  • மற்றோருவர் திரிபலாவில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எவ்வளவு அளவில் இருக்கிறது, அது பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று ஆராய்ந்து கொண்டு இருந்தார்.
  • மூன்றாமவர் வைத்தியர் கூறியபடி மருந்தை வாங்கி அருந்தினார்.
  • எவருக்கு வியாதி தீரும் என்பது சொல்லத் தேவையில்லை!
முதல் இரண்டு நிலைதான் இன்று யோகம் பயில்பவர்களுக்கு! குரு சொல்லித்தருவதை பயிற்சிப்பதை தவிர மற்ற இரண்டு விடயத்தையும் செவ்வனே செய்கிறார்கள்!

பயிற்சி மட்டுமே அனுபவத்தை தரும்!

Friday, November 11, 2016

எளிய யோகப்பயிற்சி பாடங்கள் - ஒலிப்பதிவு

பாடம் -01: அஜபா ஜெப சாதனை 

இந்த பாடத்தொகுப்பில் யோக சாதனையின் ஆரம்ப நிலையும், பிராணனை மனதினூடாக வசப்படுத்தும் "மூச்சினை கவனித்தல்" பயிற்சி விளக்கப் பட்டுள்ளது. பிரணாயாமம் தொடக்கம் எந்த விதமான யோக சாதனை செய்பவர்களுக்கும் உபயோகமான சாதனை குறிப்பு. 


இந்த பாடத்தொகுப்பில் ஓம் - ஹ்ரீம் ஆகிய மகா மந்திரங்களை மனதின் துணைகொண்டு பிராண சக்தியில் எப்படி கலப்பது என்ற பயிற்சி கூறப்பட்டுள்ளது.

Sunday, October 30, 2016

காயத்ரி சாதனா சித்திக்கான வழிமுறைகள்

காயத்ரி உபாசனை/சாதனை சித்தி பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றி யுக ரிஷி பண்டிட். ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் தமது வாழ்க்கை குறிப்பில் கூறிய அறிய விடயங்களை எனது வாசிப்பு குறிப்புகளாக குறித்து வைத்திருந்தேன். அவை அனைவருக்கும் பயன்படும்படி இங்கு பதியப்படுகிறது. 
 
இந்த குறிப்புகள் உண்மையாக சாதனா வாழ்வை பயிற்சித்து ரிஷி பரம்பரையில் வாழ விரும்புபவர்களுக்கு ஒரு அறிய வழிகாட்டி.


1.       ஆன்மீக வளர்ச்சி அடைய வாழ்க்கை மூன்றுவித சாதனைகளை கொண்டிருத்தல் வேண்டும்; ஒளி
a.       உண்மையான தெய்வ உபாசனை
b.       சாதனை அல்லது ஆன்ம சாதனை – அறத்தில் இருந்து வழுவாமல் ஒழுக்கத்திற்கு உட்பட்டு வாழ்க்கையினை வாழுதல்.
c.       ஆராதனை – தான் உதித்த மனித குலம் மேம்பட தகுந்த உதவிகளை செய்தல்.
2.       மனிதன் தான் உயிர் வாழ உணவு, உடை, உறையுள் எப்படி அவசியமோ, தாவரத்திற்கு மண், நீர், சூரிய ஒளி எப்படி ஒன்றில்லாமல் வளர்ச்சி பூரனமாகாதோ அப்படி ஆன்மீக வளர்ச்சிக்கு மேற்கூறிய மூன்றும் அவசியம்.
3.       தெய்வ உபாசனை : உபாசனை என்பது அருகில் இருத்தல் என்று பொருள் படும். ஒருவன் பிரபஞ்சத்தை ஆளும் மகா சக்தியின் அருகில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்த தகுதி இருக்க வேண்டும் என்பது அவசியம்.
4.       அருகில் இருத்தல் என்றால் வெறுமனே இரயில், பஸில் ஒருவர் அருகில் இன்னொருவர் இருந்து பயணிக்கும் பயணம் போன்றதல்ல உபாசனை. இது ஈருடல் ஓர் உயிர் என்ற சரணாகதியின் மூலம் மட்டுமே அடையக் கூடியது. ஒருவன் தனது வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு கடவுளின் விருப்பபடி தனது வாழ்வினை நடாத்துவதே உண்மையான சரணாகதி தத்துவம்.
5.       நீ விரும்பும் படியெல்லாம் கடவுள் ஆடமாட்டார், கடவுள் விரும்பியபடி எம்மை மாற்றிக்கொள்வதே கடவுளை அடையும் வழி என்பதை உணர்ந்திருத்தல் வேண்டும்.
6.       விறகு பயனற்றது, தீயை தழுவும்போது அதுவும் தீயாக மாறுகிறது. எப்போதும் தீ விறகாக மாறுவதில்லை. சிற்றாறு பெரிய ஆற்றுடன் சேர்ந்து தானும் பெரிய ஆறாக மாறும், ஒருபோதும் பெரிய ஆறு சிற்றாறுடன் சேர்ந்து சேறும் சகதியுமாக மாறுவதில்லை.
7.       சாதகன் தான் கடவுளின் கைப்பாவையாக இருந்து செயல்களை செய்ய வேண்டுமே அன்றி, கடவுள் சாதகனின் அடிமையாக இருந்து செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது உபாசனை அல்ல!
8.       சாதகன் தான் வேறு கடவுள் வேறு அல்ல என்று அன்பால், பக்தியால் சரணாகதி அடைய வேண்டும். கடவுளின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.
9.       ஒருவன் தெய்வ உபாசனை செய்ய வேண்டும். அதற்கு அவன் கடவுளின் அருகில் உட்கார வேண்டும். அவர் கூறும் ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும். அவருடைய ஆணைகளை சிரமேல் ஏற்று செய்து முடிக்க வேண்டும். அவரை வழிகாட்டியாக கொண்டு அவர் காட்டும் வழியிலேயே செல்ல வேண்டும்.
10.   உபாசனையில் பூஜை ஒரு அங்கம்; அந்த பூஜையினை மேற்குறித்த மனப்பண்புடன் செய்வதே உண்மையான ஆன்ம வளர்ச்சியை ஏற்படுத்தும். தெய்வத்திற்கு அலங்காரம் செய்தல், உபசாரங்கள் செய்தல், நைவேத்தியம் படைத்தல் என்பனவும் ஆண்டவனை மேலானாவனாக மதித்து புகழ் பாடுதல் என்பன மட்டுமே பூஜை என்ற எண்ணத்துடன் செயற்படுகின்றனர்.
11.   இவற்றால் கடவுள் திருப்தி அடைவதாக எண்ணிக்கொள்கின்றனர். அரசர்களை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு மகிழ்ந்து பரிசளிப்பது போன்று கடவுளும் தமது புகழாரத்திற்கு மகிழ்ந்து தாம் வேண்டுவதை தருவார் என்று நம்புகிறார்கள்.
12.   இவர்கள் எல்லாம் கடவுளின் உண்மை நிலை உணராதவர்கள். சிறு குழந்தைக்கு வாழைப்பழத்தை, இனிப்பை கொடுத்து ஏமாற்றி விடுவதுபோல் கடவுளையும் இப்படி சிறு பரிசுகளை கொடுத்து சமாளித்து விடலாம் என்று மனப்பால் குடித்து அறியாமையில் செயலாற்றுகிறார்கள்.
13.   இறைவனிடம் தாம் கேட்பவை சரியானவையா, நேர்மையானவையா என்பது பற்றி அவர்கள் சரியாக சிந்திப்பதில்லை. இத்தகைய மாயைகளுக்கு சாதாரண மனிதனே பலியாகிறான்.
14.   தாங்கள் உண்மையான பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கடவுளிடம், பொருட்செல்வம், வெற்றி, தெய்வ பதவி, வீடுபேறு, அஷ்டமா சித்திகள் என்பவற்றை பிச்சையாக வேண்டுகிறார்கள். சிலர் கடவுளை பார்க்க வேண்டும் என்று வெறிப்பிடித்து அழைக்கிறார்கள். மந்திரங்களை கூறிக்கொண்டு, மணிமாலைககளை உருட்டிக்கொண்டு, ஆடம்பர பூஜை செய்யும் பலர் இந்த இனத்தை சேர்ந்தவர்கள்.
15.   இன்னும் சிலர் இதை விட இலகுவான வழியினை வைத்திருக்கிறார்கள்; முற்றும் துறந்த துறவியை, சித்தரை, சித்தரின் சமாதியை, கோயிலில் சென்று வலிபட்டுவிட்டால்  போதும் தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று என்று எண்ணுகிறார்கள்.
16.   அறியாமையினால இத்தகைய கருத்துக்கள் மக்கள் மனதில் பரவி தெய்வீக சாதனை பற்றியா தவறான நம்பிக்கைகளை வேரூன்ற வைத்திருக்கிறார்கள். இவை உண்மை இல்லை என்றாலும் மக்கள் மனதில் நம்பிக்கை மூலம் ஊன்றி பதிந்து மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
17.   அன்னை காயத்ரியை எமது ஆன்மாவினை இறைசக்தியால் பாலூட்டும் தாயாகவும், சவிதா எனும் சூரியனின் தேஜசை தந்தையாகவும் எண்ணி தியான சாதனையினை செய்ய வேண்டும்.
18.   எமது மனதிற்கு இதமாக இருப்பதற்கு தாயாகவும், தந்தையாகவும் மதித்து தியானித்தாலும் அனுபவத்தில் உருவமற்றவர்கள், எங்கும் நிறைந்தவர்கள், இதை உணர்ந்தால் மட்டுமே உடலில் கலந்துள்ள ஆன்மாவில் அந்த பேரொளி சக்தியை கலந்து எம்மை முன்னேற்ற முடியும். காயத்ரி மாதாவை தனிப்பட்ட மனிதராக கருதினால் ஏற்படும் இடைவெளியில் நானும் இறைவனும் வேறு அல்ல என்பதை உணரும் பக்குவம் ஏற்படாமல் போகும்.
19.   ஒருவன்  ஆரம்பத்தில் தன்னை கொடியாகவும், கடவுளை மரமாகவும் பாவித்துக்கொள்ள வேண்டும். கொடி மரத்தில் படர்ந்து அதன் உச்சிக்கே சென்று விடும். அதுபோல் இறைசக்தி மேல் படர்ந்து நாமும் இறை நிலையில் உச்சிக்கு சென்று விடலாம்.
20.   அடுத்து தன்னை புல்லாங்குழலாகவும் கடவுளை அதை வாசிப்பவனாகவும் கருதி உபாசனையினை மேற்கொள்ள வேண்டும். அதனால் நமது வாழ்க்கையினை கடவுளின் விருப்பத்திற்குட்பட்ட ஒழுக்க நெறியில் எம்மை ஆட்படுத்திக்கொள்ள முடியும்.
21.   உபாசனையில் சடங்குகளை விட சிரத்தி, பக்தி, நம்பிக்கை ஆகிய மூன்றுமே அத்தியாவசியமானவை.
22.   உபாசனை செய்யும்போது எப்போதும் நாம் கடவுளுடன் ஒன்றுகின்றோம் என்ற பாவமும், தியாக உணர்வும் அவசியமானவை.
23.   காயத்ரியின் பேராற்றல் காரண சரீரத்தில் சிரத்தையாகவும், சூக்ஷ்ம சரீரத்தில் பிரக்ஞையாகவும், ஸ்தூல உடலில் நிஷ்டையாகவும் வெளிப்படும். இதனை ஒருவன் தன்னை ஆராய்ந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நெருக்கடியான சந்தர்பங்களில் சாதனா வாழ்வின் லட்சியங்களில் இருந்து விலகுகிறோமா? மனித குலத்திற்கு சேவை செய்வதில் நாம் ஆர்வத்துடன் இருக்கிறோமா? ஆசைகளில் தூண்டலுக்கு மனம் எப்படி செயற்படுகிறது என்பவற்றை கொண்டு இந்த வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம்.
24.   பிரபஞ்ச மூல சக்தி தன்னை ஒரு பெண் உருவில் வெளிப்படுத்திக்கொள்கிறது. அவள் மனதை பிரக்ஞையாக ஆட்சி செய்கிறாள். பிரக்ஞையில் அறிவு, பொறுப்புணர்ச்சி, தைரியம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொண்டு உள்மனதுடன் முரண்படாமல் செயலாற்ற வேண்டும். இந்த முரண்பாடு அற்ற ஒழுக்கம் காயத்ரியின் ஆற்றல் மனதில் ஊடுருவுவதன் மூலம் சித்திக்கும். இதன் பயனாக எமது எண்ணங்கள், சிந்தனைகள், தியான சாதனை என்பவை பயனுள்ளவையாக மாறும்.
25.   இப்படி எமது செயல்களும், பண்புகளும் (குணங்களும்) இயல்புகளும் தெய்வீக தன்மையுடையவையாக மாற்றம் பெற்றிருக்கிறதா என்பதை பரிசோதித்து அறிவதே உபாசனையின் இலக்கு.
26.   காயத்ரியின் ஒரு அங்கம் – நிஷ்டை. நிஷ்டை என்பது மனவுறுதி, பொறுமை, தைரியம், துணிச்சல், கடுந்துறவு (தபஸ்), சகிப்புத்தன்மை ஆகியவற்றின் கூட்டமைப்பே நிஷ்டை. இதை அடைந்திருக்கிறோமா என்பதே சாதனையின் முன்னேற்ற அறிகுறி.
27.   சவிதாவின் பேரொளி “பிரம்மவர்ச்சாஸ்” எனப்படும். அது தேஜஸ், ஓஜஸ், வர்ச்சஸ் என அழைக்கப்படுகிறது. அது நேரடியாக பக்தி, ஒழுக்கம், அறிவுக்கூர்மை, தெளிந்த ஞானம் என்பவையாக ஒருவனில் பிரதிபலிக்கும்.
28.   காயத்ரி ஜெபத்தின் பலனாக சவிதாவின் பேரொளி ஸ்தூல, சூக்ஷ்ம, காரண உடல்களில் புகுவதால் உடலை வலிமை மிக்கதாகவும், மூளையை அறிவு மிக்கதாகவும், இதயத்தை தைரியமும், நல்ல உணர்சிகள் நிறைந்ததாகவும் மாற்றுகிறது. இந்த நிலை அதிகரிக்கும்போது நாமே ஒரு ஒளிப்பிழம்பாக இருப்பதாகவும், அக்னியும், அம்ருதமும் கலந்த நிலையை அனுபவிப்பர். இதன் பயனாக ஒருவித திருப்தியும், மனநிறைவு, மகிழ்ச்சி, அமைதி அனைத்தும் நிறைந்த ஒருவித பேரின்ப நிலையை சாதகன் அனுபவிப்பான்.
29.   இத்தகைய மனநிலையில் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இயல்பாகவும், மிகவும் சாதரணமாகவும் தோன்ற ஆரம்பிக்கும். வாழ்க்கை இன்ப துன்பமற்ற நீரோடை போன்ற அனுபவமாகும். எங்கு பார்த்தாலும் பேரின்ப பெருங்கடல் அலைபாய்வதாக தோன்றும்.
30.   இந்த நிலையை அடையும்போது எங்கு சென்றாலும், எந்த செயல் புரிந்தாலும் எம்முடன் இறை சக்தி இருப்பதையும், நாமே இறை சக்தியாக இருப்பதையும் உணர்வோம். வாழ்க்கை அச்சமற்றதாக மாற ஆரம்பிக்கும்.
31.   தெய்வ சக்தியை அடைவது என்பது மனித வாழ்க்கையின் வளர்ச்சி நல்ல உதாரணம். சிறு குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் எப்போதும் அதிக விலையுயர்ந்த பொருட்களை கைகளில் கொடுப்பதோ, பணத்தை கொடுப்பதோ இல்லை. ஏனெனில் விளையாட்டுத்தனமும், அனுபவமும் அற்ற குழந்தை அவற்றை வீணாக்கி தீய வழியில் சென்றுவிடும் என்பதால். இதுபோல் பக்குவம் அற்ற ஆத்மாக்களுக்கு இறைவனும், ரிஷிகளும் உயர்ந்த தெய்வ ஆற்றலை கொடுத்து வீணாக்குவதில்லை. அதேவேளை வளர்ந்து தன் தகுதியை கல்வி, அனுபவம் மூலம் வளர்த்துக்கொண்ட ஒருவன் பெற்றோரிடம் தனது பணத்திற்கோ, தொழிலுக்கோ கெஞ்சுவதில்லை. அதுபோல தெய்வ சக்தியின் ஆற்றலினை பெறுவதற்கு தனது தகுதியை வளர்த்துக்கொண்ட ஆத்மாக்களுக்கு கேட்காமலே தெய்வ ஆற்றல்கள் வந்து சேர்க்கிறது.
32.   ஒருவர் உயர்பதவிக்கு தகுதி பெறுவது அவர் முன்னர் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை எப்படி சரியாக கையாண்டார் என்பதில் தங்கியிருப்பது போன்று தெய்வ ஆற்றல்கள் ஒருவர் தனது முற்பிறவிகளில் பெற்ற ஆற்றலை எப்படி கையாண்டார் என்பதை அடிப்படையாக கொண்டே ரிஷிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
33.   கடவுள் எவருக்கும் தனியான நண்பரோ, எதிரியோ அல்ல. அவர் பிரபஞ்ச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயற்படுவார். அவருக்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமம்.
34.   இந்த தகுதியை எப்படி பெறுவது? அதற்கு ஜீவன் சாதனா அல்லது ஆத்ம சாதனா என்று பெயர். எந்த உபாசனையும் இந்த ஆத்ம சாதனை இன்றி சித்தி பெறுவதில்லை.
35.   ஆத்ம சாதனை என்பதை மின்சக்தி செல்வதற்கு உலோக கம்பி தேவை என்பதைப்போல் தெய்வ சக்தி எம்முள் ஊடுருவி எம்மை மாற்றுவதற்கு ஆத்ம சாதனை என்ற உலோக கம்பி தேவை.
36.   இறைவனின் அருகில் செல்வதற்கு இதய – மனச்சுத்தி அவசியம். ராம நாம ஜெபத்தை வாயால் செய்துகொண்டு மனதில் மற்றவர் பொருளை அபகரிக்க நினைக்கிறோம். நாம் தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டு கடவுளை கோயிலிற்கு சென்று வழிபடுவதன் மூலமும், தான தர்மங்களை ஆடம்பரமாக செய்வதன் மூலம் விடுபடலாம் என்றும் எண்ணுகிறோம். இது மிகப்பெயரிய முரண்.
37.   விதை விதைக்க முன்னர் நிலத்தை சுத்தி செய்து மண்ணை உழவேண்டும், இதைப்போல் இறைசக்தியை விதைக்க முன்னர் மனம் ஆத்ம சாதனையால் பண்பட வேண்டும்.
38.   ஆன்ம சாதனை செய்யாத எவருடைய மனம் எண்ணங்கள், பண்பு, உணவு, தினசரி கடமைகள் எல்லாவற்றிலும் விரும்பத்தகாத அமிசங்கள் நிறைந்திருக்கும். பொறாமை, பேராசை போன்ற தீய உணர்வுகளால் நிறைந்த மனம் எப்போதும் அமைதி இழந்த நிலையில் இருக்கும். இந்த நிலையில் மனம் ஒருமைப்பட்டு தியானத்தில் ஒன்றாது.
39.   வெறும் பூஜை, புனஸ்காரங்கள் மூலம் கர்மகாண்டத்தினை செய்வதன் மூலம் உருவ வழிபாடு செய்வதன் மூலம் எந்த நன்மையையும் உண்டாகாது.
40.   வழிபாடு உள்ளுணர்வுடன் தொடர்புடையது. உள்ளுணர்வு மூலம்தான் ஒருவன் தனது நல்லொழுக்கம், செயல்கள், இயல்புகள் என்பவற்றுடன் நேர்மையை இணைக்க வேண்டும்.
41.   பொறாமை, பேராசை, உலக மாயையை உண்மை என்று நம்பி வாழ்வது, ஆணவம் ஆகியவையே வெறுக்க தக்க வாழ்க்கையின் ஆணிவேர். தெய்வ சக்தியை எம்மை ஆண்ட விடாத காரணிகள்.
42.   நம்முடைய பண்புகளை பொறுத்துதான் செயல்கள் அமைக்கின்றன. நமது ஸ்தூல உடல் மனத்தால் ஆளப்படுகிறது. ஆகவே நாம் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் மனம்தான் பொறுப்பு. உடல் எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது. இதை சாதகர்கள் மிகவும் தெளிவாகவும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
43.   எப்போதும் ஒரு சாதகன் தனது பண்புகளை (குணங்களை) செயல்களை (கர்மங்கள்) இயல்புகளை (சுபாவங்களை) ஒரு ஆன்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய நெறியில் இருந்து சிறிதும் வழுவாமல் ஆக்கி கொள்ள வேண்டும்.
44.   பிறக்கும்போது ஒருவர் முற்பிறவியில் அவர்களுக்கு ஏற்பட்ட பண்புகளுடன் தமது தீயபண்புகளின் படிவுடன் தான் பிறக்கிறார். இவற்றை பூஜைகள் செய்வதாலோ, குருவருளாலோ கூட அழித்து விட முடியாது. அவற்றை அழிக்க ஒரேவழி அவற்றை எதிர்த்து போராடுவது மட்டுமே, தீய எண்ணங்கள் எமது மனதில் நுழையும்போது அவற்றை எதிர்த்து போராட தகுந்த நல்லெண்ணங்களால் ஆன படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
45.   தீய எண்ணங்கள் பழக்க வழக்கங்களை நம்பியே வாழ்கின்றது. ஒருவர் தமது நல்ல பழக்க வழக்கங்களை உறுதியாக பின்பற்றினால் தீய எண்ணங்கள் அவர்களில் நிலை கொள்ள முடியாமல் போகும்.
46.   திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சந்திக்கும் புண்ணிய தீர்த்தம் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடுபவர்கள் பாவங்கள் நீங்கி புண்ணிய வாழ்க்கை அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நீரில் மூழ்குவதால் காக்கை குயிலாக மாறமுடியாது என்பதை அனைவரும் அறிவர்.
47.   திரிவேணி சங்கமத்தின் உண்மை அர்த்தம் உபாசனை, சாதனை, ஆராதனை என்றார் மூன்று மின்னோட்டங்களை மக்கள் ஸ்தூலமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இப்படி கதா ரூபத்தில் கூறி வைத்தார்கள். மேற்குறித்த இந்த மூன்று மின்னோட்டங்களும் ஒன்றாக சேரும்போது ஒரு மனிதனின் அகவாழ்வும், புற வாழ்வும் அசாதாரண முறையில் மாற்றம் அடைந்து விடுகிறது.
48.   உபாசனை, சாதனை, ஆராதனை ஆகிய மூன்றும் வெவ்வேறு நேரத்தில் அல்லது ஒரே நேரத்த்தில் செய்யும் சடங்குகள் அல்ல. இது மனிதனின் சிந்தனை, பண்பு, எண்ணங்கள் ஆகியவற்றில் ஏற்படும் உன்னதமான மாற்றங்கள். இதற்கு உடலின் செயலையும், மனதின் எண்ணங்களையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும்.
49.   பாவங்களை அழிக்க கூர்மையான ஞானத்தை பாவிக்க வேண்டும். சர்க்கஸில் விலங்குகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியைபோல் எமது மனதிற்கு நல்ல கருத்துக்களை புகுத்தி, நற்செயல்களை செய்ய வைத்து, நல்ல சுபாவத்தை உருவாக்க வேண்டும்.
50.   உபாசனையை – காயத்ரி ஜெபத்தை சிறிது நேரம் செய்தல் போதுமானது. ஆனால் ஆன்ம சாதனையை ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வது போல் மனதையும், உடலையும் கவனித்து தொடர்ந்து செய்து வர வேண்டும்.
51.   பூஜை செய்வதை வித்தை காட்டுவது போல் நினைத்துக்கொண்டு இந்த பூஜையை செய்தால் அந்த சித்தியை அடையலாம், இந்த சித்தி அடையலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் எந்த சித்தியையும் அடைவதில்லை.
52.   உபாசனை – சாதனை  –ஆராதனை ஆகிய மூன்றின் சங்கமமே திரிவேணி சங்கமும், திரிபாத காயத்ரியின் இரகசியார்த்தமும் ஆகும்.
53.   மந்திர ஜெபமும், தியானமும் செய்யும் போது மனதின் எண்ணங்கள் உபாசனையிலும், தினசரி செயல்கள் செய்யும் போது பண்பில் சாதனையும் ஊடுருவி இருத்தல் வேண்டும்.
54.   ஆராதனை என்பது ஒருவன் தனது தனிப்பட்ட தொழிலை செய்வதற்குரிய நேரமும், குடும்ப கடமைகளை கவனிக்கும் நேரமும் போக மிகுதி இருக்கும் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதுதான் ஆராதனை.
55.   சாதாரண மக்கள் இந்த நேர சேமிப்பை தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் தேவையற்ற பொருட்களை வாங்குவதில், செயல்களிலும் வீணாக்குவர்.
56.   இந்த பிரபஞ்சம் அனைத்தும் கடவுள் தன்மையால் நிறைந்தது. அந்த கடவுள் தன்மை நன்கு செயற்பட, உலகம் மகிழ்ச்சியுடன் செயற்பட ஒவ்வொருவரும் ஆற்றக்கூடிய சேவை ஆராதனை எனப்படுகிறது.
 

Saturday, October 29, 2016

தீபாவளியும் மகாலக்ஷ்மி அருளும்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 
 
 
தீபாவளி என்பது பலகாரம் உண்ணவும், பட்டாசு சுடவும் என்பதை தாண்டி ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தனது மனதில், உடலில் இருக்கும் இருளை அகற்றி முன்னேற வேண்டும் என்று சங்கல்பிப்பதற்குரிய நாளாக எமது முன்னோர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.
தீபாவளி இரவு மனித வாழ்க்கையின் எல்லா வளங்களுக்கும் குறியீடான ஸ்ரீ மகாலக்ஷ்மியை பூஜிப்பதற்குரிய நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மகாலக்ஷ்மியை பூஜித்துவிட்டால் (ஆடம்பரமாக செலவு செய்து லஞ்சம் கொடுத்துவிட்டால்) தமக்கு பணம் வந்து சேர்ந்து விடும் என்று லக்ஷ்மி பூஜை செய்பவர்கள் ஏராளம். இது வெறும் அறியாமை!
மகாலக்ஷ்மி என்பது ஒருவன் தனது வாழ்வில் முன்னேற கைக்கொள்ள வேண்டிய தத்துவம். காத்தல் கடவுள் விஷ்ணுவும் மனைவி லக்ஷ்மி என்று கூறுவதன் உள்ளார்ந்த தத்துவ விளக்கம், ஒருவன் தனது வாழ்க்கையின் கடின உழைப்பால் அடையும் நன்மைகளை லக்ஷ்மி என்ற பண்பினை கொண்டு நிலைத்திருக்க செய்ய வேண்டும் என்பதே! மகாவிஷ்ணு என்பது மனிதனின் ஆன்மாவின் ஆற்றல் என்றால் அந்த ஆன்ம ஆற்றலுக்கு இருக்க வேண்டிய பண்பே மகாலக்ஷ்மி தத்துவம்.
இதனை விளங்கி கொள்ள மகாலட்சுமி எப்படி தோன்றினால் என்ற புராண வரலாறு மறைமுகமாக விளக்கும், தேவர்களும் (மனிதனின் நல்லெண்ணம்) அசுரர்களும் (மனிதனின் தீய எண்ணம்) மேருவை மத்தாக (சுழுமுனை நாடி ஓடும் முள்ளந்தண்டு) வாசுகி என்ற பாம்பை (வாசி எனும் மூச்சு காற்றை) இயக்கி அதில் ஆலகால விஷத்தை கக்க, சிவன் (ஆன்மா) ஏற்க சக்தி (பிராணன்) கண்டத்தில் (விசுத்தி) சக்கரத்தில் தடுக்க, பின்னர் அமிர்த்தத்துடன் தோன்றிய சங்கு, அமிர்தம் போன்ற அறிய பொருட்களுடன் அவற்றை பரிபாலிக்கும் தெய்வமாக தொன்றயவள் மகாலக்ஷ்மி.
இந்த கதையில் இருந்து விளங்கும் உண்மை மகாலட்சுமி என்பது ஒருவன்
௧. தனது கடின உழைப்பால் / யோக சாதனையினால் அடையும் ஆற்றல்களை காக்கும் தெய்வ பண்பினை குறிக்கும் தெய்வ சக்தி.
௨. மேலும் உயர்ந்த வெற்றிகள் நீண்ட, தொடர்ச்சியான, தளராத, கடும் உழைப்பின் பின்னர் கிடைப்பது.
௩. மகாலக்ஷ்மியை “கர்ம பிரபாவ பிரகாஷினி” என்று சாத்திரம் குறிப்பிடும். இதன் பொருள் எங்கு கடின உழைப்பு இருக்கிறதோ அங்கு பிரகாசிப்பவள் என்பதாகும்.
௪. தனது வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாதவர்கள், சோம்பித்திரிபவர்கள், வேலை செய்ய மறுப்பவர்கள், துர் பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மனவுறுதி அற்றவர்கள், குறை கூறுபவர்கள் இவர்களிடம் மகாலக்ஷ்மி பண்பு வாய்ப்பதில்லை.
௫. வலிமையற்ற மனம் உடையவர் வாழ்க்கையின் தடைகளை உடைத்து, தாண்டி முன்னேற கஷ்டப்படுவர்.
ஆகவே தீபாவளி என்பது தனது மனதில் இருக்கும் வலிமையற்ற இருளான எண்ணங்களை நீக்கி வளமான வாழ்க்கையினை பெறுவதற்குரிய சங்கல்பத்தை/உறுதியை ஏற்படுத்திக்கொள்வதற்கான நாளாகும். ஆகவே இந்த தீபாவளி நாளில் அனைவரும் கீழ்வரும் உறுதிமொழிகளை சங்கல்பித்துக்கொள்வோம்.
1. எனது வாழ்வினை உறுதியான பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்தும்படி மாற்றிக்கொள்வேன். எனது நேரத்தினை எக்காரணம் கொண்டும் வீணாக்க மாட்டேன். எனது தவறுகளை அனுபவங்களாக்க கற்றுக்கொள்வேன்.
2. எனது வாழ்வில் கஷ்டங்கள் ஏற்படும்போது மனதினை பலவீனமாக்கும் சிந்தைகளில் செலுத்தாமல், அந்த கஷ்டங்களை தீர்ப்பதற்குரிய வழிகள் என்ன என்பதை சிந்தித்து அவ்வழியில் செயற்படுவேன்.
3. வாழ்வு எத்தகைய இருளாக இருப்பினும் மனது ஒளியுடன் இருக்கும் படி உயர்ந்த உணர்வுடன் செயற்பட என்னை தயார்படுத்திக் கொள்வேன். இதற்கு என்னை விட உயர்ந்த தெய்வ சக்தியுடனும், குருவின் வழிகாட்டலையும் எப்போதும் பெற்றுக்கொள்வேன்.
4. எனது உடலை எப்போதும் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு விடாமல் காப்பாற்றிக் கொள்வேன். எனது ஆரோக்கியத்தை பாதுகாப்பேன். மற்றவர்களை சங்கடப்படுத்தும் தன்மையினை ஏற்படுத்த மாட்டேன்.
5. எனது வாழ்வின் அனைத்து முக்கிய முடிவுகளிலும் எனது குடும்பத்திடம் ஆலோசித்து நடப்பேன். எனது மனைவி/கணவன், பிள்ளைகளை மதித்து நடப்பேன். எப்போதும் குடும்ப ஒற்றுமையினை பாதுகாப்பேன்.
6. தினசரி எனது தாய், தந்தை, முன்னோர்கள், குருமார்கள், இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை ஆராதிப்பேன். எந்த முக்கிய காரியத்தை தொடங்குவதானாலும் அவர்களை மானசீகமாகவேனும் வணங்கியே தொடங்குவேன்.
7. இன்றைய, இந்த வருட தீபாவளி தினத்தில் எனது இச்சா சக்தி (will power) எனது வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் எனது இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு உறுதியுடன், உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க தொடங்குவேன்.
8. என்னில், எனது இல்லத்தில், மகாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். என்னிடம் உள்ள மகாலக்ஷ்மியின் ஆற்றலை எக்காரணம் கொண்டும் வீணாக தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.
மேற்குறித்த உறுதிமொழியுடன் தீபாவளியை கொண்டாடும் எந்த நபரும் வரும் வருடம் பூராகவும் உறுதியான, இன்பமான வாழ்க்கையினை பெறுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை!
இந்த உறுதிமொழிகளை மனதில் ஏற்படுத்திக்கொண்டு அதன் படி நடந்தால் நிச்சயம் உங்கள் வாழ்வினை அன்னையின் ஆற்றல் கொண்டு ;
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும்
பொருள் நலம் பொறுமை ஈகை வாழ்வில் பொருந்திட செய்து
ஆயுள், ஆரோக்கியம், வீரம், அசைந்திடா பக்தி அன்பு
தேயுறா செல்வம் கீர்த்தி என்பவற்றை அருள்வாள் என வாழ்த்துகிறோம்!a

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...