குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 31, 2016

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூல்

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூல் தேவையானவர்கள் வெளியீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.



Wednesday, January 27, 2016

மனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர்



மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே


இன்று யோக சாதனை பயிலும் பலர் மூச்சை பிரணாயாமத்தால் பிராணனை கட்டுப்படுத்தி ஆற்றலை பெறுவது சித்தி என்று மயங்கி முயற்சிக்கின்றனர். எனினும் பிராணனை கையாள்வது என்பது வாகனத்தின் எரிபொருளாகிய fuel இனை கையாள்வது போன்றது. இவற்றை எல்லாம் அறிவதற்கு ஆன்மாவின் பிரதிநிதியாகிய மனம் சரியாக இருக்க வேண்டும். மனம் ஆன்மாவினை சார்ந்து இயங்கினால் அது ஞானம், புறப்பொருளை சார்ந்து இயங்கினால் அஞ்ஞானம்!

இனி பாடலிற்கு வருவோம்!

மந்திரம் என்பது ஒருவனது ஆத்ம சக்தியை ஒருங்கிணைத்து மனதிற்கும் பிராணனுக்கு ஆற்றல் தரும் கருவி. மனம் செம்மையாக இருந்தால் மனதில் ஆத்ம சக்தி பிரவாகிக்கும். ஆகவே மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவியில்லை!

மனம் செம்மை இல்லை என்றால் பிராணனி ஸ்தூல மாகிய வாயு சலனிக்கும் வாயு சலனித்தால் பிராணன் சலனிக்கும், மனதின் எண்ணங்கள் கீழானால் பிராணனின் அதிர்வு குறையும், பிராணனின் அதிர்வு குறைந்தால் ஆன்ம பரிணாமம் குறையும், இப்படி குறையும் ஆன்ம பரிணாமத்தை தடுக்க வாயுவை உயர்த்தி பிரணாயமம் செய்ய வேண்டும். மனதை செம்மையாக தெரிய வேண்டும். ஆக மனது செம்மையாக இருந்தால் வாயுவை உயர்த்த தேவையில்லை.

பிராணனின் ஒழுகாகி பிரபஞ்ச சக்தியை குறித்த அதிர்வலையில் உடலில் ஏற்க தெரிந்தால் அந்த நிலை வாசி, அப்படி பிரபஞ்ச சக்தியை ஈர்த்து உடலில் ஆறாதார சக்கரங்களில் வாசியை நிறுத்தினால் ஆன்ம பரிணாமம் உயரும். இப்படியான உயர்வை தடுப்பதும் மனதே, இந்த மனது செம்மையாக இருந்தால் வாசியை நிறுத்தி கஷ்டப்பட தேவையில்லை.

மனது செம்மையாக இருந்தால் அந்த மனதில் உதிக்கும் எதுவும் மந்திரம் போன்று ஆன்ம சக்தியை விழிப்பிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.

ஆக சாதனையின் நோக்கம் ஞானம், அதனை பெறுவதற்கு மனது செம்மை அற்று இருப்பது ஒரு தடை! அதுவே மூல காரணமும் கூட! ஆக மனதினை செம்மைப்படுத்துவதே சிறந்த யோக சாதனையும் கூட!

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...