குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 08, 2016

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் பற்றி வாசகர்கள்


நூலைப்படித்த அன்பர்கள்  சிலரது கருத்துக்கள்! 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 
இந்த புத்தகத்தை வாங்குவதற்கு காரணம் என்ன என்றும், எப்படி வாங்கினேன் என்றும் பல முறை வியந்திருக்கிறேன். ஏனென்றால், எனது தற்பொழுதைய பொருளாதார சிக்கலுக்கிடையில், இது என் முயற்சி/சுயநினைவின்றி நடந்தது. இதற்கு அந்த அகத்தியர்க்கும், கடும் உழைப்பிற்கு பின் புத்தகமயமாக்கிய உங்களுக்கும் எனது நன்றிகள்.


புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கவில்லை. குரு மந்திரமும், "முதல் தகுதி" என்ற முதல் ஞானத்தை மட்டுமே மனனம் செய்துள்ளேன். அதற்குள் ஏற்பட்ட அனுபவங்களில் எதை சொல்ல எதை சொல்லாமல் மனதிலேயே வைத்து அனுபவிக்க என்று தெரியவில்லை.



அகத்தியர் இன்னும் எனக்கு ஒரு சத்குருவை காண்பிக்கவில்லை (அல்லது நான் அடையாளம் காணவில்லை). ஆனால், முதல் படி நிலையாக, அகத்தியரின் தொடர்பு கிடைத்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கடந்த சில நாட்களாக, பல எளிய (பரி)சோதனைகள். "முதல் தகுதி" எனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என்பதாக சோதனைகள் நடந்துகொண்டிருகின்றன.



திருக்குறள் 1330 பாடல்கள் கொண்டது. ஆனால், முப்பதே பாடல்களில் அனைத்து கருத்துக்களையும் அடக்கிய நூல் இது. இதனை பின்பற்றும் சாதகனுக்கு என்ன குறை இருக்கும்? இந்த 30 பாடல்களில் இல்லாத கருத்துக்கள் என்ன? இந்த 30 பாடல்களில் இல்லாத தீர்வுகளா? சித்தர்கள் என்றாலே வைத்தியர்கள் என்ற கொள்கை கொண்ட என்னை போன்றவர்களுக்கு ஒரு சவுக்கடி.



அதேபோல், இந்த புத்தகத்தை நீங்கள் எழுதியாத ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (கடும்) உழைப்பு மட்டுமே உங்களுடைது. உங்களை ஒரு கருவியாக அகத்தியர் உபயோகபடுத்தியுள்ளார். இதை எழுதியது அந்த அகத்தியரே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.



அகத்தியரே எழுதி, அதற்கு அகத்தியரே விளக்க உரையும் கொடுத்துள்ள ஒரு பொக்கிஷம் இந்த புத்தகம். இதனை எவ்வாறு விமர்சனம் செய்வது?


போத்தி காளிமுத்து 

*********************************************************************************************************


ஐயா,
தாங்கள் எழுதிய ஸ்ரீ அகத்தியர் யோக ஞான திறவுகோல் புத்தகம் கிடைக்கப் பெற்று தினம் ஒரு பாடம் வீதம் படித்து வருகிறேன்.
அடியேன், கடந்த 16 வருடமாக தேடிய தேடலுக்கு தமது நூலில் விளக்கமும் வழி முறையும் கிடைத்து உள்ளது.
ஆனால், ஸ்ரீ அகத்தியர் பாடலில் மகிழ்ந்து கொண்டு துள்ளி விடாதே என்ற அறிவுரையை உணர்ந்து அடக்கம் காண்கிறேன்.
அதை கண்டு எனது மனம் மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டு உள்ளது. சாதாரணமாக பார்த்தால் தெளிவாகத்தானே பாடல்கள் உள்ளன எனத் தெரிகிறது. ஆனால் அப்பப்பா..!!!!
இந்த நூல் மூலம் அடியேனது இலட்சியத்தை அடைவேன் என்ற உறுதியை அடைந்து உள்ளேன் ஐயா.
எத்தனை பூட்டுகள் அதற்கான திறவுகோல்கள்..... எழுதியவரின் பூரண அருள் இல்லாமல் இவற்றை திறக்கவே முடியாது.. மிக்க மகிழ்ச்சி ஐயா....
அதற்கான மெய்ஞான குரு ஸ்ரீ அகத்தியரின் அருளாசியும் தங்களின் வழி காட்டுதலும் பூரணமாக கிடைக்கும் என நம்புகிறேன்.


சண்முகசுந்தரம் - மைசூர்

*************************************************************


அன்பு வணக்கம்,


நேற்றை ராஜயோகி ராஜமோகன் அய்யாவின் அணிந்துரை முதற்கொண்டு தங்களின்
அகத்தியர் யோக ஞானத் திறவுகோலை (புத்தகத்தை) படிக்க தொடங்கினேன்.



இது வரை தங்களைப் பற்றியும், எத்தனை அதிக உயரிய அறிவும் அனுபவமும்
ஞானமும் பெற்றிருப்பினும் இயல்பான மேலும் கற்றுக்கொண்டே இருக்கும்
தங்களின் தன்மையையும் புரிந்து கொள்ள ஆரம்பித்ததில் எனக்கான பாடம்
தொடங்கியது!!



ஒவ்வொரு பாடல் விளக்கத்திற்கும் (பாடத்திற்கும்) முன் தங்கள் மாணவர்களை
குறித்து அழைக்கும் போது, எங்களை அந்த பாடத்திற்கு எத்தகைய தன்மையும்
விடயமும் புரிந்தவர்களாய் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை தெரிவிப்பது
சிறப்பு :)
 பாட இறுதியில் கேள்வி முறை அடுத்த பாடத்திற்கு தயார் செய்வதாய் (தெளிவு
பெற-சித்ததில் பதிய) ஏதுவாய் உள்ளது!



இது வரை யாம் மூன்று பாடல் படித்துள்ளோம் குருவே. 


ஜெயசீலன்  மாதேஸ்வரன் , வேலூர்  

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...