குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 09, 2016

காயத்ரி லகு அனுஷ்டான சாதனை அனுபவம்

எம்மிடம்  காயத்ரி சாதனை பயின்று லகு அனுஷ்டான ஜெபம்  பூர்த்தி செய்த மாணவர்  ஒருவரின் அனுபவம். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
குரு வணக்கம்,

28-03-2016 அன்று தொடங்கப்பட்ட காயத்ரி லகு அனுஷ்டானம் 05-04-2016 அன்று பூர்த்தி செய்தோம்

அது குறித்தான அனுபவம் பற்றி

முதல் நாளான 28-03 திங்கட்கிழமை அன்று அனுஷ்டானம் தொடங்கி மந்திர மாலைகள் ஆரம்பித்த போது நான் இருந்த நிலை மிகவும் crtical ஆக இருந்தது!
நான் எங்கு இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று தெரியாத நிலையில் மந்திரம் சொல்லிக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு சில நொடிகளுக்கும் விழிப்புணர்வு நிலைக்கு வர முயற்சித்து ஜெபம் செய்து கொண்டே இருந்தேன்.
பிறகு என் வகுப்பிற்கு சென்றேன். அங்கு being in present என்ற நிலையினில் இருக்க சில விடயங்கள் கற்றுக்கொண்டேன் பாடம் கவனிக்கையில்.
முதல் 9 மாலைகளுக்கு உடல் ஒரு விதமாய் எரிய செய்தது. நான் அறிந்து கொண்ட விடயம் மூலம் மாலையும், இரவும் சிறிது முன்னேற்றமுடன் ஜெபத்தை முடித்தேன். ஜெபம் செய்ய செய்யவே சில சில விடயம் யோசனையாய் உதிக்கும். உதாரணம்: காயத்ரி தேவி தாயின் படத்தை முழுமாய் observe செய்வது, மிகவும் முடியாத நிலையில் இடையில் நிறுத்தி மூச்சினை கவனிப்பது பிறகு தொடர்வது போல்.
உடல் எரிய செய்தது.

இரண்டாம் நாள் காலையில் செய்யும் போதும், இந்த நிலை தொடர்ந்தது. பின்பு தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். புதன் அன்று தங்கள் பதிலைக் கண்டேன். சிந்தித்தேன்.
ஆம். என்ன ஆகிட போகின்றது. குருமார்களும் அன்னையும் நிச்சயம் எனக்கு எது நல்லதோ அதை செய்வார்கள் என்று செய்யத்துணிந்தேன். நம்பிக்கை தான் எல்லாம்! (எனது வருங்கால மனைவியும் ஒரு காரணமானாள்)
உத்வேகமோடு, அன்று மாலை மீண்டும் தொடர்ந்தேன். இன்று எரிச்சல் இல்லை. ஆனால் பிராண ஓட்டம் கைகளில் நன்றாக் தெரியும் அளவு இருந்தது. உள்ளங்கை முழுவதும் ஒரு மாதிரி ஊருவது போல்!

நான்காம் நாள் இரவு, ஒரு இயல்பு நிலைக்கு திரும்பியது போன்ற உணர்வு. மறந்தது போன்றவை எல்லாம் ஞாபகம் வந்தது போல் இருந்தது.
ஐந்தாம் நாள் ஜெபத்தின் போது நான் ஒரு சரியான நிலையில் இல்லாமல் அழுத்தமாக உணர்ந்தேன். இருப்பினும் செய்யலாம் என்று எண்ணி செய்ய பார்த்தேன். அன்றைக்கென்று ஒருவர் அந்த இடத்தில் இரவு தங்க நேர்ந்தது. என்னால் இயல்பாய் செய்ய முடியவில்லை என்று இரவு ஜெபம் செய்யவில்லை.
அடுத்த நாள் காலை நன்றாக் உனார்ந்த போது தான், நான் அந்நிலையில் செய்யாமல் விட்டது நல்லது என்று உணர்ந்தேன்.
எட்டாம் நாள் இரவு முற்றிலும் இயல்பாக ஆனது போல் உணர்ந்தேன். நான் வேறு ஒன்றை நினைத்திருந்தேன். தெளிவாக உணர முடியும் என்பது போல். வழமையான என் அவசர தனத்தால் இரவு ஜெபத்தில் அதை நினைத்து கொண்டு எதையோ கஷ்டப்பட்டு மாற்ற செய்ய மீண்டும் disturb பண்ணி விட்டது போல் ஆனது. ”எல்லாம் உடனே நடக்காது. எதுவும் படிபடியாய் தான் நடக்கும்” என்று நினைவுக்கு வந்தது. 
எதையும் குருமார்களிடமும், அன்னை காயத்ரி தேவியிடமும் விட்டுவிட வேண்டும் என்பது மூன்றாம் நாள் முதலே நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும்.

சாதனையின் போது நான் கற்ற (உணர்த்தல் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்ட) விடயங்கள்
*எதிலும் அவசரம் கூடாது. 
*இறையிடம் நம்பிக்கையோடு வேண்டுதல் செய்து விட்டுவிட்டு அதற்கான செயலை இயன்ற வரை சிரத்தையுடன் செய்ய வேண்டும்.
*அவர் அவர்களின் அனுபவம் தன்மை பொறுத்து உணர்த்தபடும் விதமும் மாறுபடும்!
*விழிப்புணர்வு நிலை முக்கியம் (இயன்றவரை)
*கற்பனை எதுவும் செய்திடாமல் வரும் பலனை ஏற்க வேண்டும். அதுவே சரியானதாக, முழுமையானதாக இருக்கும்!
*எந்த நிலையானாலும் நம்பிக்கையோடு முயற்சித்தால் பலன் நிச்சயம்.
*நான் வாழும் வாழ்விற்கு எது தேவையோ அதை மட்டும் சிந்தித்தால் போதும். வீண் ஆராய்ச்சியை விட்டுவிட வேண்டும்.
*எதிர்காலம் இப்படி தான் இருக்கும் என்று முடிவு செய்து செயல்படுவது கூடவே கூடாது! சிந்தனை புத்தி கொண்டு ஆராய்ந்து செயல்பட வேண்டும்

நான் என் மன சலனம் அதிகமாய் விழிப்புணர்வு கொண்டு வர முடியாத போதெல்லாம், 
-காகிதத்தில் எழுதிய சங்கல்பத்தைப் பார்த்துக்கொண்டே ஜெபம் செய்தேன்.
-சித்த சாதனையை படித்துக்கொண்டே செய்தேன்

இறுதி மூன்று நாட்கள், காலையில் சூரிய ஒளியில் நினைந்துகொண்டேன் 10 நிமிடம். நிறைய ஜெபம் தொடர்சியாய் செய்ய முடிந்தது. ஒரே நாளில் 30 மாலைகள் பக்கம் செய்ய முடிந்தது.

ஆறாம் நாள் முதலே மிக நல்ல வித்தியாசம், செயல்பாட்டில். தியான அறை பகுதியை சுத்தம் செய்ய தோன்றியது, காகங்களுக்கு காலையில் தயிர் வைத்தது, ஜெபம் முடித்ததும் தங்கள் தளத்தைப் படிக்க தோன்றியது,

ஒரு நாள்... ஒரு விதமாய் வெறுமையாய் இருந்த போது (லகு அனுஷ்டானம் குறித்த தங்கள் மின்னஞ்சல் மூலம்) காயத்ரி சாதனையின் மகிமை பல படித்தேன். நன்றாக உணர்ந்தேன். மீண்டும் ஜெபத்தைத்தொடங்கினேன்.
இப்படி ஏதோ ஒன்று இறுதி வரை என்னை வழி நடத்திக்கொண்டே சென்றது!!

அனுஷ்டானப்பூர்த்தி அன்று இரவு மிக தைரியமாய் சரியான கருத்துகளை ஒரு அண்ணனிடம் ஒரு வாதத்தில் பேசினேன்! 
என்னை அறியாமல் செய்யும் பல விடயத்திலும் நற்பலனே கிடைத்தது.
------
இன்று பல கசடுகளும் அழுக்குகளும் நீங்கி ஒரு நன்மை மிக்க வளர்ச்சி பாதையில் இருக்கின்றோம் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. நான் நிச்சயம் சிந்தித்து செயற்படும் தன்மையைப் பெறுவேன். என் கற்பனையில் மனம் கொண்டு இயங்கும் தன்மையை கலந்து எனுக்குள் இருக்கும் சுயதன்மையை அடைவேன். அனுபவம் மூலம் வாழ்வைக் கற்று வாழ்வேன். என் உணர்ச்சிகள் மீளும் என்று நம்பிக்கை கொள்கிறேன். என் வாழ்விற்கு நான் பொறுப்பேற்று வாழ வேண்டும் என்ற உணர்வுபூர்வ புரிதல் அடைவேன்!

நான் பெற்ற அனுபவம், உணர்ந்த விடயம் யாவுமே குரு அருளால் மட்டுமே வந்தது! 
நான் அடையும் அனைத்து முன்னேற்றமும் தங்கள் அருளால் வந்தது.
மிக்க நன்றி குருவே. 

இப்படிக்கு
அன்புடன்
ஜெயசீலன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...