குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, February 28, 2017

நிர்வாண ஷடகம்


மனோபுத்த்யஹங்காரசித்தாநி நாஹம் ந ச ச்ரோத்ரஜிஹ்வே ந ச க்ரணநேத்ரே |ந ச வ்யோம பூமிர்ந தேஜோ ந வாயுச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௧||

பொருள்:

நான் மனமில்லை, புத்தியில்லை, ஆங்காரமில்லை, நான் கேட்கும் செவியுமில்லை, சுவைக்கும் நாவுமில்லை, நுகரும் நாசியுமில்லை, காணும் கண்களுமில்லை, நான் ஆகாயமுமில்லை, பூமியுமில்லை, தேயுவுமில்லை, வாயுமில்லை

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்) 




***************************************************************

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்) ந ச ப்ராணஸம்ஜ்ஞோ ந வை பஞ்சவாயுர்ந வா ஸப்ததாதுர்ந வா பஞ்சகோசா: |
ந வாக்பாணிபாதம் ந சோபஸ்தபாயூ சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௨||

நான் பிராணன் இல்லை, பஞ்ச வாயுக்களில்லை, சப்த தாதுக்கள் இல்லை, பஞ்ச கோஸங்கள் இல்லை, நான் பேசும் நாவுமில்லை, நான் பற்றும் கையுமில்லை, நகரும் கைகளுமில்லை, நான் மலத்தை வெளியேற்றும் எருவாயுமில்லை,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


**************************************************************

ந மே த்வேஷராகௌ ந மே லோபமோஹௌ மதோ நைவ மே நைவ மாத்ஸர்யபாவ: |
ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மோக்ஷச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௩||

நான் வெறுப்புமன்று, நான் பற்றுமன்று, நான் பேராசையுமன்று, நான் மோகமுமன்று, நான் பெருமையுமன்று, நான் போறாமையுமன்று, நான் அறம், பொருள், இன்பம் , வீடு என்ற நான்கு புருடார்த்தங்களால் கட்டுண்ட வஸ்துவும் அன்று,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


****************************************************************




ந புண்யம் ந பாபம் ந ஸௌக்யம் ந து:கம் ந மந்த்ரோ ந தீர்தம் ந வேதா ந யஜ்ஞா: |
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௪||
 
நான் புண்ணியத்தால் கட்டுண்டவனுமன்று, நான் பாவத்தால் கட்டுண்டவனுமன்று, நான் இன்பமும் அன்று, நான் துன்பமுமன்று, நான் மந்திரத்தால் கட்டுண்டவனுமன்று, நான் புண்ணிய தீர்த்த்த்தில் உறைவபவனுமன்று, நான் வேதங்களுமன்று, நான் யக்ஞமுமன்று, நான் போகமும் அன்று, நான் போகிக்கும் இன்பமும் அன்று, நான் போகிப்பவனுமன்று,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)







*******************************************************
ந ம்ருத்யுர்ந சங்கா ந மே ஜாதிபேத: பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம |
ந பந்துர்ந மித்ரம் குருர்நைவ சிஷ்யச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௫||

நான் இறப்பால் கட்டுண்டவனுமன்று, நான் பயத்தால் பீடிக்கப்பட்டவனுமன்று, நான் ஜாதியில் அகப்பட்டவனுமன்று, எனக்கு தாயும் இல்லை, தந்தையுமில்லை, பிறப்புமில்லை, எனக்கு உறவுமில்லை, நட்புமில்லை, குருவுமில்லை, சீடனுமில்லை,

**********************************************

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)
அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ விபுத்வாஞ்ச ஸர்வத்ர ஸர்வேத்ரியாணாம் |
ந சாஸங்கதம் நைவ முக்திர்ந மேயச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௬||

நான் எங்கும் படர்ந்தவன், நான் குணங்கள் அற்றவன், நான் ரூபம் அற்றவன், நான் உலகத்துடன் பற்று அற்றவன், நான் எங்கும் நிறைந்தவன், நான் அனைத்துக்கும் மூலமானவன், நான் அனைத்து புலன் அனுபவங்களுக்கும் ஆதாரமானவன், நான் எதனுடனும் பந்தப்படுபவனுமன்று, நான் எதனிலும் விலகி இருப்பவனுமன்று!

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


Wednesday, February 15, 2017

திருமந்திர விளக்கம்



ஆறெழுத்தாவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே
-திருமந்திரம் 994-

ஆறு எழுத்துக்கள் ஓம் ந ம சி வ ய ஆகும். ஆறு சமயங்கள் என்பது மனிதன் மீண்டும் பிறவா நிலை அடைய, இருக்கும் பாதைகளாகும். இது சிவ தத்துவம் ஐந்தும் அதற்கு மூலமான பிரணவமும் சேர்ந்த ஆறு பாதைகள். 

இந்த மூலமான பிரணவமும் ஐந்து சிவ தத்துவங்களும் ஆக ஆறு சமயங்கள் அந்தக்கரணம் நான்கினால் சலனமுற்று இருபத்து நான்கு ஆன்ம தத்துவமாக விரிகிறது. இந்த ஆன்ம தத்துவத்தை சுத்தி செய்யும் சாதனமே ஐந்து முகம் கொண்ட தேவியின் உருவாக வர்ணிக்கப்படும் சாவித்ரி, இந்த சாவித்ரிக்கு கூறப்படும் 24 எழுத்து மந்திரத்தால் ஆன்ம தத்துவத்தை சுத்தித்து, பின்னர் தலையெழுத்தாகிய ஓம் காரத்தால் பேதிக்க மகாகாரண சரீரமான சிகாரத்தில் ஒன்றி மானிடன் பிறவி அற்றவனாவான். 

இதுவே இந்த மந்திரத்தின் உட்பொருள்

Saturday, February 04, 2017

பரராசசேகரம் - யாழ்ப்பாணத்து அரசர்களின் இராஜ வைத்திய நூல்

யாழ்ப்பாண இராசதானியின் அரச வைத்திய நூல். 

இந்நூல் இப்பொழுது ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. முதலாம் பாகத்திற் சிரரோக நிதானம் பற்றியும், இரண்டாம் பாகத்திற் கெர்ப்பரோக நிதானம், பாலரோக நிதானம் பற்றியும், மூன்றாம் பாகத்திற் சுரரோக நிதானம், சன்னிரோக நிதானம், வலிரோக நிதானம், விக்கல்ரோக நிதானம், சத்திரோக நிதானம், ஆகியன பற்றியும், நான்காம் பாகத்தில் வாதரோக நிதானம், பித்தரோக நிதானம், சிலேற்பனரோக நிதானம் ஆகியன பற்றியும், ஐந்தாம் பாகத்தில் மேகரோக நிதானம், பிளவைரோக நிதானம், பவுத்திர ரோக நிதானம், வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி, ஆகியன பற்றியும், ஆறாம் பாகத்தில் உதரரோக நிதானம் பற்றியும், ஏழாம் பாகத்தில் மூலரோக நிதானம், அதிகாரரோக நிதானம், கிரகணிரோக நிதானம், கரப்பன்ரோக நிதானம், கிரந்திரோக நிதானம், குட்டரோக நிதானம் என 8000 செய்யுட்களுடன் 1928 ‍ 35 இற்குள் ஏழு பாகங்களாக ஏழாலை ஐ. பொன்னையபிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது. 

இப்போது வடமாகாணசபை சுதேச வைத்திய திணைக்களத்தினால் நான்கு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்த வடமாகாணசபைக்கும், மூலகாரணமாக இருந்த திணைக்கள ஆணையாளர் Shyama Thurairatnnam
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். 

இந்தப் பணி தற்போது மருத்துவம் படிப்பவர்களுக்கும் , ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அரிய பொக்கிஷம் என்பதில் மாற்றூக்கருத்து இல்லை!
பித்தரோக நிதானத்திற்கு நாம் உரை எழுதிய பகுதியான பதிவுகள் எம்மால் 2016 மே மாதமளவில் எமது வலைத்தளத்தில் பதியப்பட்டது. http://sumananayurveda.blogspot.com/2015/05/01.html

இந்த நூல் ஒவ்வொரு தமிழரும் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக தம்முடன் வைத்திருக்க வேண்டிய நூல். 

இன்று தமிழ் ஆயுர்வேத ‍சித்த வைத்தியம் கற்பவர்களிடம் காணப்படும் மிகுந்த குறைபாடு மூல நூற்களை தொடர்ந்து கற்றலும், அதற்கான பொருள் கோடலும்.

எதிர்வரும் காலத்தில் இதனை மாகாண சபை சுதேச வைத்திய திணைக்களத்தின் உதவியுடன் இணைந்து பட்டதாரி வைத்தியர்களுடனும், துறைசார் புத்தி ஜீவிகளுடனும் சேர்ந்து பொருள் கண்டு ஒரு கற்கை வட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பயிற்சியில் கொண்டுவரவேண்டும்.
இந்த முயற்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய முடியும்.

Thursday, February 02, 2017

அகத்திய மாமகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல் 26 - 32}








அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்


புத்தகங்கள் கீழ்வரும் முகவரிகளில் பெற்றுக்கொள்ளலாம்:
Sri Markandeya Book Gallery
No. 42-44, Kumbeswarar Sannathi
Kumbakonam - 612 001
Ph : 0435 - 2422779
**********
Mr. Chitambaram
Udumalai.com,
No: 18, Kannusamy Layout,
State Bank Colony,
Udumalpet - 642126
Cell No: 7373737740
**********
Samata Books Pvt., Ltd.,
No: 10, Congress Building,
573 Mount Road,
Teynampet, Chennai - 600 006.
***********
A. Vijayakumar
Nammabooks.com
No: 23, Bazaar Street,
Pollachi - 642 001.
Tamil Nadu, India.
Cell No: 9843931463
**********
Chettiyar Book House
Phone: 9443205757
No: 4-B, Venkatrao Road, Salem - 636 001.
***********
Vivekananda Book Depot No: 18, Pudumandapam, Madurai-625 001
Mobile: 7010415599
9842134761
9245861629
************
Publisher
Pranav Swasta Sthanam
10/18, G1, Temple View Apartment
West Tank Street, Thiruvanmiyur
Chennai 600041
+91 9600 666 661
+91 44 4210 2582

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...