குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 04, 2017

பரராசசேகரம் - யாழ்ப்பாணத்து அரசர்களின் இராஜ வைத்திய நூல்

யாழ்ப்பாண இராசதானியின் அரச வைத்திய நூல். 

இந்நூல் இப்பொழுது ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. முதலாம் பாகத்திற் சிரரோக நிதானம் பற்றியும், இரண்டாம் பாகத்திற் கெர்ப்பரோக நிதானம், பாலரோக நிதானம் பற்றியும், மூன்றாம் பாகத்திற் சுரரோக நிதானம், சன்னிரோக நிதானம், வலிரோக நிதானம், விக்கல்ரோக நிதானம், சத்திரோக நிதானம், ஆகியன பற்றியும், நான்காம் பாகத்தில் வாதரோக நிதானம், பித்தரோக நிதானம், சிலேற்பனரோக நிதானம் ஆகியன பற்றியும், ஐந்தாம் பாகத்தில் மேகரோக நிதானம், பிளவைரோக நிதானம், பவுத்திர ரோக நிதானம், வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி, ஆகியன பற்றியும், ஆறாம் பாகத்தில் உதரரோக நிதானம் பற்றியும், ஏழாம் பாகத்தில் மூலரோக நிதானம், அதிகாரரோக நிதானம், கிரகணிரோக நிதானம், கரப்பன்ரோக நிதானம், கிரந்திரோக நிதானம், குட்டரோக நிதானம் என 8000 செய்யுட்களுடன் 1928 ‍ 35 இற்குள் ஏழு பாகங்களாக ஏழாலை ஐ. பொன்னையபிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது. 

இப்போது வடமாகாணசபை சுதேச வைத்திய திணைக்களத்தினால் நான்கு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்த வடமாகாணசபைக்கும், மூலகாரணமாக இருந்த திணைக்கள ஆணையாளர் Shyama Thurairatnnam
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். 

இந்தப் பணி தற்போது மருத்துவம் படிப்பவர்களுக்கும் , ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அரிய பொக்கிஷம் என்பதில் மாற்றூக்கருத்து இல்லை!
பித்தரோக நிதானத்திற்கு நாம் உரை எழுதிய பகுதியான பதிவுகள் எம்மால் 2016 மே மாதமளவில் எமது வலைத்தளத்தில் பதியப்பட்டது. http://sumananayurveda.blogspot.com/2015/05/01.html

இந்த நூல் ஒவ்வொரு தமிழரும் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக தம்முடன் வைத்திருக்க வேண்டிய நூல். 

இன்று தமிழ் ஆயுர்வேத ‍சித்த வைத்தியம் கற்பவர்களிடம் காணப்படும் மிகுந்த குறைபாடு மூல நூற்களை தொடர்ந்து கற்றலும், அதற்கான பொருள் கோடலும்.

எதிர்வரும் காலத்தில் இதனை மாகாண சபை சுதேச வைத்திய திணைக்களத்தின் உதவியுடன் இணைந்து பட்டதாரி வைத்தியர்களுடனும், துறைசார் புத்தி ஜீவிகளுடனும் சேர்ந்து பொருள் கண்டு ஒரு கற்கை வட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பயிற்சியில் கொண்டுவரவேண்டும்.
இந்த முயற்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய முடியும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...