குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 04, 2017

அர்த்த சாஸ்திரம் - 004: த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி என்பவை என்ன?

த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி என்பவை என்ன?

இவை நான்கும் ஏன் வித்தை என கூறுகிறார்?

ஆன்விக்ஷிகி பற்றி முதல் பதிவில் பார்த்தோம்.

த்ரயீ என்பது ரிக், யஜுர், சாம என்ற மூன்று வேதங்களை குறிப்பவை. இவற்றை த்ரியாதி வித்தை எனப்படும். இந்த மூன்றும் மனிதன் பெறவேண்டிய ஆன்ம ஞானத்தை நோக்கிய உலக வாழ்க்கை பற்றிய அடிப்படைகளைக் கூறும். வேதங்களில் காணப்படும் சூக்தங்கள் ஒரு மனிதன் அந்த இயற்கை, வளத்துடன் எப்படியான மனப்பண்புடன் அணுகவேண்டும் என்ற அறிவை மனதிற்கு தரும். செல்வம் வேண்டியவன் ஸ்ரீ சூக்தத்தை பொருளணர்ந்து படிக்க செல்வம் பெறவேண்டிய மனப்பண்பு பற்றிய அறிவு உண்டாகும். ஜல ஆசீர்வாத சாந்தி மந்திரங்கள் நீர் பற்றிய இயற்கையுடனான நட்பு மனப்பான்மையை வளர்க்கும். இப்படி முழு பிரபஞ்சம் பற்றிய ரிஷிகளின் அனுபவ வாக்கியங்களும், ஆழ்ந்த ஞானமும் உள்ளவை வேதங்கள்.

வர்த்தா என்பது பொருளியல் செல்வம், அக்காலத்து சமூகத்தில் பசுக்களும், விவசாயமும் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருந்தது. இன்றைய பொருளாதாரத்தின் அடிப்படையில் பல வியாபார நிறுவனங்கள் பொருளாதாரத்தை தாங்குகிறது. ஒரு அரசன் தனது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பொருளாதார மையங்களின் இயக்கம் பற்றியும் சரியான புரிதல் இருக்கவேண்டும். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும் தனது நிறுவனத்தின் பொருளை ஈட்டும் அனைத்து செயற்பாடுகள் பற்றிய பூரண அறிவு இருத்த்தல் வேண்டும்.

தண்ட நீதி என்பது நீதிக்கான கொள்கை வரையறை. அரசின் ஆட்சிக்குள் எது செய்யலாம், எது செய்யக்கூடாது என்ற வரையறை. அது மீறப்படும்போது அதற்கான தண்டனை என்ன என்பது பற்றிய சரியான முடிவுகள். ஒரு நிறுவனத்தில் control Mechanism and Disciplinary action என்றும் அரசாங்கத்தில் Law & Enforcement என்றும் வகைப்படுத்தலாம். இதில் அரசன் அல்லது நிறுவன தலைவர் சிறப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த நான்கையும் வித்யா என்று வரையறுக்கிறார். வித்யா என்பதை வெறுமனே புத்தகங்களை தகவல்களை சேர்த்துக்கொண்டதால் வரும் அறிவு என்று பொருள் கொள்ளக்கூடாது. ரிஷிகளின் வரையறைப்படி வித்யா என்றால் பௌதீக விஞ்ஞானம், தத்துவம், பிரபஞ்சம், மனித உடல், மனம் பற்றிய அறிந்து புரிந்து தெளிந்த நிலையே வித்யா எனப்படுகிறது. ஒரு துறையில் வித்யா நிலை அடைந்தால் அந்த துறையில் அவனால் தனது அறிவை பிரயோகித்து சாதிக்க செயல்புரிய முடியும் ஆற்றலை ஒருவன் பெறுவான்.

ஆகவே அரசன்/தலைமை நிர்வாகி ஆன்விக்ஷிகி, த்ரயாதி வித்யா, வார்த்தா, தண்ட நீதி ஆகிய நான்கு துறைகளிலும் அறிந்து புரிந்து தெளிந்த நிலை பெற்று சிறப்பு தேர்ச்சி பெறவேண்டும்.

இதுவே ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆகிய எமது அபிப்பிராயம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...