குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 17, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? - 02

இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை செய்தல், மலையேறுதல், நேர்த்திக்கடன் வைப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் கடவுளுக்கு எல்லாவற்றையும் செய்தபின்னர் தமது வேண்டுதலை முன்வைக்கிறார்கள்.

பெரும் அளவில் பணத்தை தருவதாகவும், தங்க நகை செய்து தருவதாகவும், கட்டிடம் கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் அவ்வளவு பேராசை பிடித்த ஒருவரா? இத்தகைய லஞ்சத்திற்காக கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு?

இன்னும் சிலர் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் கடவுளை திருப்திப்படுத்தி தாம் நினைப்பதை அடையலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படியானால் கோயிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் பூசகர்கள் அனைவரும் இறை நிலை அடைந்திருப்பார்கள் அல்லவா?

ஆகவே உண்மையான ஆன்மீக முன்னேற்றம் என்பது என்ன?

ரிஷிகளும் சித்தர்களும் தரும் பதில் தபஸ் அல்லது தவம் மற்றும் சாதனா அல்லது சாதனை. இந்த இரண்டுமே ஒருவனது உணர்வை உயர் நிலை அடையச்செய்ய முடியும்.

தவம் என்பது தன்னை தன்னை சுயகட்டுபாடு மூலம் கடுமையான சூழலுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளல். ஆசனங்கள் செய்வது, உணவினை தவிர்த்து விரதம் இருப்பது, சோர்வின்றி மன உற்சாகத்துடன் மலை ஏறுதல், கிடைப்பதை மட்டும் உண்ணல் என்பவை தவத்தின் உதாரணங்களாகும். இதன் மூலம் உடல், மனம் என்பவற்றில் ஏற்படும் துன்பங்களை சகித்து மனதை விரக்தி இன்றி உற்சாகத்துடன் இருக்கும் மனப்பண்பு ஒருவனுக்கு ஏற்படும். இப்படி பண்படுத்திய மனதையும் உடலுமே சாதனையில் செல்லுவதற்கு உதவும், அனேகர் இவற்றையே ஆன்மீகம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். இவை மனதையும் உடலையும் பண்படுத்தும் புடம் போடும் ஆரம்ப பயிற்சிகளே.

சாதனை அல்லது சாதனா என்பது ஒருவன் தனது சுயமுயற்சியுடன் தன்னை சுயகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சுய முன்னேற்றமடையச் செய்து, தெய்வ குணங்கள் உடையவனாக தன்னை உருமாற்றம் செய்யும் முயற்சி சாதனா எனப்படுகிறது. ஒருவன் சாதனா மூலம் மனப்பாங்கு எப்போதும் நேர் எண்ணங்கள் உடையதாகவும், மனம் விரிவடைந்து எல்லாவற்றையும் ஏற்று சிந்தித்து புரியும் ஆற்றல் உள்ளதாகவும், உயர்ந்த குணங்களை மனப்பண்புகளையும் உருவாக்கும் செயல்முறையை செய்கிறான்.

ஆக சுருக்கமாக சாதனை என்பது ஒருவன் தனது ஆளுமையில் தூய்மையை கொணர்ந்து, தனது செயல்கள் நேர்மையுடனும், உணர்ச்சிகளுலும் எண்ணத்திலும் ஞானத்துடனும், செய்கையில் தர்மத்துடனும் சரியான செயல்களை செய்யும் உள்ளவனாக மாறுதலே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கம்.

இப்படி ஒருவன் செய்தால் அதுவரை தான் அல்லது நான் என்று அவன் எண்ணிக்கொண்டிருந்த வட்டம் விரியத்தொடங்கும். இதை உணர்வு சக்தி அல்லது சேதன சக்தி என்று சொல்லுவார்கள். இந்த உணர்வு சக்தி சாதரணமானவர்களில் நான் ராமன், இன்னாருடைய மகன், இந்த வேலை செய்கிறேன், இந்த ஜாதியை சேர்ந்தவன், என்ற அடிப்படையில் தாம் ஏற்படுத்திக்கொண்ட அபிமானங்களின் அடிப்படையிலேயே செயல்புரிகிறது. ஆனால் சாதனையால் தன்னை விரிவு படுத்திக்கொண்ட ஒருவனின் உணர்வு சக்தி மெதுவாக விரிவடைந்து பிரபஞ்ச உணர்வு சக்தியாக மாறுகிறது. தான் என்ற உணர்வை பிரபஞ்ச உணர்வாக விரிவடைய செய்யும் செயல் முறையே ஆன்ம விஞ்ஞானத்தின் இலக்காகும்.
இன்று நவீன விஞ் ஞானம் பௌதீக ஜட சக்திகளைப் பற்றி ஆராய்வதிலேயே தமது இலக்கினை நிர்ணயிக்கின்றன. ஆனால் ரிஷிகளும் சித்தர்களும் உணர்வு சக்தியை எப்படி கையாள்வது என்றே ஆராய்ந்தனர். இந்த விஞ் ஞானமே ஆன்ம விஞ்ஞானம் எனப்பட்டது. இந்த விஞ் ஞானத்தை சுயமாக பரிசோதிக்கும் பயிற் சியே சாதனை அல்லது சாதனா எனப்பட்டது.

ஆன்ம விஞ் ஞானம் கண்டறிந்த உண்மைகளில் ஒன்று உணர்வு சக்தி மனிதனில் மனதின் ஒரு பாகமான புத்தியின் மூலம் செயல் கொள்ளுகிறது என்பது. மனதின் மற்றொரு பாகம் புலன் கள் வழி செயல்பட ஒருபாகம் உணர்வு வழி செயற்ப்படுகிறது. உண்மையில் எந்த ஒருமனிதனது அறிவுத்திறன் என்பது அவனது உள்ளிரிந்து வரும் உணர்வு சக்தி மனதிற்கு தரும் ஆற்றலே, இந்த ஆற்றலை மனிதன் மனதின் மூலம் தனது சுக போகங்களுக்காகவும், சூழ்ச்சிகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்கிறான்.


ஆக எல்லாமனிதர்களிலும் புத்தியை செயற்படுத்த உணர்வு சக்தி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. எனினும் இந்த உணர்வு சக்தி மனதின் பிடியில் சிக்கிவிடாமல் உலகை உயர்விக்கும் எண்ணங்களை தோற்றுவிப்பதற்கு மனிதன் தன்னை பயிற்றுவிக்கும் பயிற்சியே சாதனை. இதுவே ஆன்மீகம். 

1 comment:

  1. http://yogicpsychology-research.blogspot.in/2018/01/02.html?m=1

    ஐயா...

    மேற்கண்ட பதிவை தற்போதே படித்தேன்....

    இந்த பதிவே அடியேனுக்காக எழுதப்பட்ட பதிவாகவே தோன்றுகிறது ஐயா...

    என்னில் எழுந்த ஐயங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்து விட்டது ஐயா...

    மிக்க நன்றி...

    🌹 *நல்லதே நடக்கிறது*🌺

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...