குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 14, 2018

கல்வி / அறிவுத்தேடல்

கல்வி/அறிவுத்தேடல்

அனேகர் கல்வியின் நோக்கம் பட்டங்கள் பெறுவது என்று பட்டங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றனர், பட்டங்கள் கூட மனமும் அறிவுச்செருக்கால் உயரப்பறக்கிறது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு விவாதப்போட்டியில் பங்குபற்றி பரிசு வாங்கினோம். அந்தப்பரிசில் புத்தகங்கள் சில, அவற்றுள் சிறிய விவேகானதரின் உபதேசங்கள் அடங்கிய புத்தங்கம்.

திறந்தால் முதலில் கண்களில் பட்டது;

" கல்வி என்பது மனதை பண்படுத்தும் ஒருமைப்படுத்தும் செய்முறையே உண்மையான கல்வி என்பேன்"

என்ற வரிகள் கண்களில் பட்டது. இந்த வரிகளே இன்று வரை எனது அறிவுத்தேடலின் உந்து சக்தி என்று நான் நம்புகிறேன்.

மனதை பற்றி புரிய வேண்டும்?
மனம் என்றால் என்ன?
மனதை எப்படி அறிவது?

இந்தக்கேள்விகளும் அதற்கான விடையுமாக எனது இளமைக்கால கல்வி அமைந்தது, பாடசாலை, பல்கலைக்கழக கல்வி ஒரு புறமிருக்க, பண்டைய வழியில் இதை அறிவதற்குரிய வழி குரு, அந்த குருவிற்கு கேள்விகேட்காமல் சேவை, சேவையின் மூலம் அனுபவத்தில் உணர்தல் என்ற வழியில் எனது பயணம் தொடர்ந்தது!

இந்தப் பயணத்தில் ஈட்டிய செல்வங்கள் இப்போது இங்கு பகிர்ந்தளிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

4 comments:

  1. பட்டங்கள் செருக்கை வளர்க்கும் என்பது உண்மை ஐயா. ஆனால் அந்த பட்டங்கள் வாழ்க்கையில் பயன்படுவதில்லை . பெரும்பாலும் படித்தது ஒன்று செய்யும் வேலை வேறொன்று . ஆகவே இப்பொழுது வாழ்க்கைக்கும் வாழ்க்கைக்குப் பிறகும் பயன்படும் பாடங்களை கற்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. பட்டங்கள் செருக்கை வளர்க்கும் என்பது உண்மை ஐயா. ஆனால் அந்த பட்டங்கள் வாழ்க்கையில் பயன்படுவதில்லை . பெரும்பாலும் படித்தது ஒன்று செய்யும் வேலை வேறொன்று . ஆகவே இப்பொழுது வாழ்க்கைக்கும் வாழ்க்கைக்குப் பிறகும் பயன்படும் பாடங்களை கற்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  3. ஆம் நமக்கு தற்பொழுது பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்கப்படும் கல்வி புற உலகில் எப்படி வெற்றிகரமாக பொருளீட்டுவது என்பதது குறித்தே முதன்மை தருகிறது.மனதை பற்றியோ அதை செம்மைபடுத்துவது குறித்தோ கூறுவது இல்லை.விளைவு இன்று போட்டியும் மன அழுத்தமுமே மிஞ்சுகிறது.இதில் உண்மையான அறிவு என்றால் என்ன என்பதை நாம் தான் வாழ்க்கையில் சில பல மன துயரங்களை அடைந்தபின் தேட வேண்டிய நிலையில் உள்ளது. அப்படி தேடி வருவோர்க்கு தாங்கள் பகிர்ந்தளித்து கொண்டிருக்கும் செல்வங்கள் உயர் நிலையை அடைய வழி காட்டிகொண்டிருக்கிறது என்பதே உண்மை. நன்றி ஐயா.

    ReplyDelete
  4. உண்மை! அறிவு தேடல் என்பது எமக்கு விரும்பிய ஒன்றாகவும் அது மனதை செம்மையாக்குவதாகவும் இருத்தல் வேண்டும்!இந்த பிரபஞ்சமானது அதை கற்று கொடுத்து கொண்டு தான் உள்ளது! அவற்றை அறிய வேண்டும் என்ற நிலையில் இருந்தால் பெற்றுக்கொண்டே இருப்போம்!! நம் வாழ்விற்கும் சூழ உள்ளவர்க்கும் அது அற வழியில் பயன்பட வேண்டும்!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...