குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 08, 2018

பிரணவ வித்யா பரிமளம் {ஓங்கார மந்திர இரகசியம்} - 02

ஓம் என்ற மந்திரம் பற்றிய பிரமாணங்கள் எவை? 


பிரமாண என்பது நம்பத்தகுந்த அனுபவஸ்தகளின் வாய்மொழி அல்லது அறுவு என்று பொருள். பண்டைய ரிஷிகள் இதனை அறிவிற்கான ஒரு வழிமுறையாக கடைப்பிடித்திருக்கிறார்கள். ஏனெனில் ஒருவனது ஆயுள் பிரபஞ்சத்தின் உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள போதுமானது இல்லை. ஆகவே தமக்கு முன்னர் இந்த உண்மைகளை அனுபவமாக அறிந்த அனுபூதியாளர்களின் வாக்கினை ஏற்றுக்கொண்டு தமது அறிவை தெளிதல் பிரமாணம் எனப்படும். 

இனி ஓம் என்ற மந்திரத்திற்குரிய பிரமாணத்தை ஆராய்வோம். 

அதர்வண வேத அதர்வசிகோபனிஷத்தில்  "ஓமித்யே ததக்ஷர மாதௌ ப்ரயுக்தம் த்யா நம் த்யாயிதவ்யம்" என்று கூறப்படுகிறது. இதன் பொருள் "ஓமென்னும் பிரணவாக்ஷரமே ஆதியிலுபதேசிக்கப்பட்டது, அதுவே தியானம், அதுவே தியானிப்பதற்குரியது" என்பதாகும்/. 

ஆகவே ஓம் என்ற மந்திர தியானமே ஆதியான பரம்பொருளை அறிவதற்குரிய மூல மந்திரம். 

இந்த மகாமந்திரம் எப்படி உண்டாயிற்று என்பதற்குரிய விளக்கம் வருமாறு; 

சிருஷ்டியின் ஆரம்பத்தில் பரமசிவம் என்ற ஏக வஸ்து ஆன்மாக்கள் மேல் கருணைகொண்டு அவற்றை இரட்சிக்கும் வழியை சொல்லி வைப்பதற்காக கருணை கொண்டு சுத்தமாயையுடன் தனது ஒளியை கலக்க உண்டன நாதமே "ௐ"

ஆக ௐ சுத்தமாயையும், பரசிவ ஓளியும் கலந்த நாதம்.

பின்னர் இந்த ஓம் என்ற நாதம் விந்து தத்துவமாக விரியத்தொடங்கியது.

இது எப்படி எனில் மின்னலும், இடியும் தோன்ரும் விதத்தை ஒப்பிட்டு விளங்கி கொள்ளலாம்.  ஒடுங்கிய மேகங்கள் கீழிருந்து வரும் மேகங்களுடன் மோதி மின்னலை உருவாக்குகிறது. இந்த மின்னலால் நாதமாகிய இடி உருவாகிறது. இதுபோன்ற ஒரு செயல் முறை சிருஷ்டியின் ஆதியில் நடைபெற்றது . ஏற்கனவே இருக்கும் மேகம் போன்றது பரசிவம்,  அந்த சாஸ்வதமான பிரசிவத்துடன் கீழிருந்து ஒடுங்கிச் செல்லும் மேகம் போன்ற சுத்த மாயை உராயும் போது உருவாகும் நாதமே ஓங்காரம்,  மேகம் உராயும் போது ஒளி, ஒலி, மழை ஆகிய மூன்றும் வருகிறது. இது போல் பரசிவமும், சுத்த மாயையும் உராயும் போது ஓளியும், ஓங்கார நாதமும், விந்து என்ற கருவும் உருவாகிறது.

உருவாகிய நாதமே சித்தர்களும், ரிஷிகளும் கூறும் தத்துவங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையான தத்துவம். இதுவே எல்லா ஆன்மாக்களுக்கும் உண்மை அறிவை விழிப்பிக்கச்செய்யும் ஆற்றல் உள்ள  ஞானம். இது அளக்கவோ, உரைக்கவோ முடியாதது. எங்கும் நிறைந்டதாகவும், நித்தியமாயும், பிறப்பு இறப்பற்றதாகவும் இருக்கிறது. இந்ததத்துவம் எல்லாவற்றிற்கு மேலாக இருப்பதாலும் சிவத்திலிருந்து தோன்றியதாலும் இதற்கு சிவதத்துவம் என்று சொல்வார்கள். இந்த சிவம் என்ற நாத தத்துவமே தோற்றக்கிரமத்தில் முதலாவதும், லயம் எனும் ஒடுக்க கிரமத்தில் முப்பதியாறாவது தத்துவமுமாகும்.

சிவத்தில் இருந்து தோன்றியது நாதம் என்பதுபோல் சுத்த மாயை எனும் குடிலையில் இருந்து தோன்றிய தொனியானது  வட்ட வடிவ விந்துவாகும். இதனை சக்தி தத்துவம் என்று கூறுவர். இது தோற்றக்கிரமத்தில் 35வது தத்துவமாகும்.

இந்த நாதமும் விந்துவும் விரிந்து  பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களாகவும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபஸ்தம் என்ற கர்மேந்திரியமாகவும், சுரோத்திரம், துவக்கு, சட்சு, ஜிவ்வா, ஆகிராணம் ஆகிய ஞானேந்திரியமாகவும் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் என்ர தன்மாத்திரைகளாகவும், மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற அந்தக்கரணமாகவும் ஆக இருபத்தி நான்காக விரிந்து ஆன்ம தத்துவமாக மனிதனில் உண்டாகியது. இதை அசுத்த தத்துவம் என்று சொல்லப்படும்.  இதுபற்றி விரிவாக அதர்வண வேத பிரசினோபனிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரக்ருதி, புருஷன், அராகம், வித்தை, கலை, நியதி, காலம் ஆகிய ஏழாக விரியும் தொகுதி வித்யா தத்துவம் எனப்படும். இவை சுத்தாசுத்த தத்துவமெனப்படும். இது பற்றி க்ருஷ்ண யஜூர்வேத சுவேதாசுவதரோபனிஷத்திலும்,  அதர்வண வேத நாரதபரிவிராஜகோபனிஷத்திலும் கூறப்பட்டுள்ளது.

சுத்த வித்தை, ஈசுவரம், சாதாக்கியம், சக்தி அல்லது விந்து, சிவம் அல்லது நாதம் ஆகிய ஐந்தும் சிவதத்துவம் எனப்படும். இதிபற்றி அதர்வண வேத பிருகஜ்ஜாபாலோப நிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி 36 தத்துவங்களாக விரிந்துள்ளவற்றிற்கு உறைவிடமாய் மூலமாய் இருப்பது நாத தத்துவம். இதிலிருந்தே பிரபஞ்ச சிருஷ்டி நடைபெறுகிறது என்பது எமது ரிஷிகளும் சித்தர்களும் கண்ட உண்மை.

மேற்சொன்ன தத்துவங்கள் இயங்க முதற்காரணங்கள் சுத்தம், சுத்தா அசுத்தம், அசுத்தம் என மூன்று வகைப்படுத்தப்படுகிறது.

  1. சுத்த மாயை அல்லது பரப்பிரக்ருதி 
  2. அசுத்த மாயை அல்லது அபரப்ரக்ருதி
  3. பிரக்ருதிமாயை அல்லது மூலப்ரக்ருதி 
எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

மலங்களுடனும், கர்மத்துடனும் தொடர்பு படாமல் முதல் காரணமாக இருப்பது சுத்தமாயை ஆகும். இது அசுத்த மாயையும், பிரக்ருதி மாயையும் மேவி மேலே நின்று காரியமாற்றுவது.  இவை இரண்டும் சுத்தமாயைக்கும் கீழாக நின்று மல கர்மங்களுடன் விரவி முதற்காரணமாக இருபது அசுத்த மாயை. இந்த அசுத்த மாயையின் ஸ்தூல வடிவமே பிரக்ருதி மாயையாகும். 

பிரக்ருதி மாயையே ஸ்தூல பிரபஞ்சத்தின் முளைவிடும் விதையாகும். இந்த பிரக்ருதி மாயையே எமது ஸ்தூல புலங்களாக உலகில் அனுபவிக்கிறோம். 

சுத்தமாயை என்பது துணியில் இருந்து கூடாரம் தோன்றியதை உவமானமாக கூறலாம். அதாவது மடித்து வைக்கப்பட்ட துணியே விரிந்து கூடாராமாக கட்டப்பட்டது போன்ற செய்கையே சுத்த மாயையின் செய்கை. 

அசுத்த மாயையின் செயல் நெய்யில் இருந்து புழு உண்டாவது போல் ஏகதேச பரிமாணம். அதாவது நெய் இருப்பதால் புழு அதில் உண்டாகிறது. அதுபோல் அசுத்தமாயையால் பிரபஞ்சம் உண்டாகிறது. 

இனி மாயை என்பது என்னவென்று அறிவோம். 

மாயை ஆத்மாக்களின் அறிவை மயக்குவது என்று பொருள், இதை மா + யா என்றும் பொருள் கொள்ளலாம். மா என்றால் ஒடுங்குதல், யா என்றால் தோன்றுதல் என்று பொருள். எது ஒடுங்குவதற்கும், தோன்றுவதற்கும் காரணமாக இருக்கிறதோ அதுவே மாயை எனப்படும். 

தத்துவம் என்பதன் நித்தியம் என்று பொருள். அதாவது தத்துவம் என்று குறிப்பிடும் எதுவும் பிரளயகாலம் வரை நீடிக்கும் வல்லமை உள்ளவைகளையே தத்துவம் என்று சித்தர்களும் ரிஷிகளும் குறித்து வைத்தார்கள். பிரபஞ்ச ஒடுக்கத்தில் ஒடுங்குபவர்களை அமரர்கள் என்று பெயரிட்டு அழைப்பது போல் பிரபஞ்ச ஒடுக்கத்தில் ஒடுங்கும் கருவிகளை தத்துவம் என்று பெயரிட்டனர். இந்த தத்துவ கருவிகளின் துணைகொண்டே அமரத்துவம் பெற்றார்கள் சித்தர்களும், ரிஷிகளும். 

தோடரும்... 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...