குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 09, 2018

பிரணவ வித்யா பரிமளம் {ஓங்கார மந்திர இரகசியம்} - 05

இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் நாதத்தில் இருந்து தோன்றியது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்விக்கு விடை பிரபஞ்சம் தொடர்பான உண்மைகள் வேதங்களில் மந்திரங்களாகவும் அதன் வழியே பிரபஞ்ச உண்மைகளை அறியக்கூடியதாகவும் இருப்பதே பிரமாணம். 

நாதவடிவான வேதங்களும், அவற்றின் மந்திரங்களுமே பர ஞான உண்மைகளை அறிய மூலமாக இருப்பதால் நாதமே மூலமாக இருக்கும் என்பதை அறியலாம். 

இதை அதர்வணவேத மாண்டூக்யோப நிஷத் "ஓமித்யே ததக்ஷரமிதம் ஸர்வம் தஸ்யோப் வ்யாக்யானம் பூதம் பவத் பவிஷ்யமிதி ஸர்மோங்கார ஏவ" என்று கூறுகிறது. இதன் பொருள் "இந்தப்பிரபஞ்சம் யாவும் ஓமென்னும் அக்ஷரமாக சொல்லப்படுகின்றது. அந்த அக்ஷரமே விரிவான பொருளாயுமிருக்கிறது. கடந்தது, நிகழ்வது, வருவது யாவும் ஓங்காரமே" என்பதாகும். 

மேலும் அதர்வணவேத அதர்வசிரோப நிஷத் "இந்த அக்ஷரமே காணப்படும் பிரபஞ்சமெனலாம். ஜகத்துக்கு இதமாயுள்ளது. பிரஜாபதியை சார்ந்தது, ஸர்வவேத ஸாரபூதமானது, சேமெனென்ற உமா நாதனை தேவதையாகவுடையது" என்று பொருள் பட "ஸர்வம் ஜகதிதம் வா ஏகதாக்ஷரம் ப்ரஜாபத்யம் சூக்ஷ்மம் ஸௌம்யம்" என்று மந்திரமாக உரைக்கிறது. 

அதர்வணவேத அதர்வசிரோப நிஷத்தின் இன்னுமொரு மந்திரம் " ஸர்வதேவ வேத யோனி ஸர்வ வாஸ் ய வஸ்து ப்ரணவாத்மகம்" என்று உரைக்கிறது. ப்ரணவாத்மகம் சர்வ தேவர்களுக்கும் சர்வ வேதங்களுக்கும், மூல யோனி ஆக இருக்கிறது, சர்வ வஸ்துக்களும் இதுவே என்பது இதன் அர்த்தம். 

தாருமோத்தரச் செய்யுள் " ஓமென்னும் பதமதனில் வேத்மாதி யுற்பவிக்குமாலம் வித்தி நுதிக்குமாபோல்" என்று கூறும் வரிகளும், தாயுமானார் " ஓங்காரமைந்தெழுத்தாற் புவனத்தை உண்டு பண்ணிப் பங்கா நடத்தும் பொருளேய கண்ட பரசிவமே" என்ற வரிகளாலும் மேலும் தெளியலாம். 

ஓம் என்ற இந்த அக்ஷரமே பரப்பிரம்ம ஸ்வரூபம், எல்லாவாற்றிற்கும் மூலம், இது இல்லாமல் எந்தக்காரியமும் நடவாது என்பதை அனேக உப நிஷத்துகள் தெளிவுறக்கூறுகின்றன. 

க்ருஷ்ண யஜுர்வேடஹ் கடோபனிஷத் ஏதத்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏததேவாக்ஷரம்பரம் - (ஓம் எனும்) இந்த அக்ஷரமே பிரமம், இந்த அக்ஷரமே சிரேஷ்டம்"

அதர்வணவேத அதர்வசிகோபனிஷத் "ஏததக்ஷரம் பரம் ப்ரஹ்ம" - இந்த அக்ஷரம் பரப்பிரம்ம சொரூபம்" 

க்ருஷ்ண யஜுர்வேத அமிர்த நாதோபனிஷத் "ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம ஓமித்யேதந் நரேசயேத்" - பிரணவமென்பது ஏகாட்சரப்பிரமம், பிரணவத்தை என்றும் தள்ளக்கூடாது". 

ஸாமவேத மைத்ராயாண்யுப நிஷத் "ஓமித்யேததாத்ம ஓமித்யே ததக்ஷரம்" ஓமென்பது அந்தப்பரமாத்மா, இந்தப்பிரணவமே அக்ஷரப்பிரமம்"

சுக்கிலயஜுர் வேத தாரஸாரோப நிஷத் "ஓமித்தியேததக்ஷரம் பரம்ப்ரஹ்ம ததேவோ பாஸிதவ்யம்" - ஓமென்ற அந்த அக்ஷரமே பரப்பிரமம், அதுவே உபாசிக்கவேண்டியது. 

க்ருஷ்ண யஜுர் வேத தைத்திரீயோப நிஷத் "ஓம் என்பது பிரமம், சதாசிவன் பிரணவன்" 

கூர்ம புராணம் பகவாந் ஸர்வ  விஜ்ஞாநா தவ நாதோமிதி ஸம்ருத" சர்வஞ் ஞராதலின் பகவான் எனவும், காப்பவராதலின் ஓம் எனவும் சிவபிரான் எண்ணப்படுகின்றார். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...