குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 27, 2018

ஸ்ரீ அரவிந்தரின் தெய்வீக வாழ்க்கை வாசிப்புக்கள

மனிதனின் சிந்தனை விழிப்புணர்வு எண்ணம், துன்பங்களில் இருந்து விடுபடல், மனித எண்ணம் அடையக்கூடிய அதியுயர் நிலை, மனித உடலில் தெய்வ சக்தியை விழிப்படைய வைத்தல், தன்னை அதியுயர் சீரான தன்மையுடையவனாக ஆக்குதல், தூய உண்மை, கலப்பற்ற ஆனந்தம், இரகசியமான அம்ருதத்துவம் ஆகியபற்றியவை. 

பண்டைய மனித அறிவின் உதயம் இந்த சிந்தனை பற்றி அதிக தகவல்களை கூறுகின்றது. இன்றைய மனிதனின் தேடலும் வெளிப்புற விஷய ஞானத்தில் இருந்து விடுபட்டு இத்தகைய உண்மைகளை தேடுவதிலேயே ஆர்வம் செல்வதை அவதானிக்கலாம். 

பண்டைய ஞானத்தின் சூத்திரம் கடவுள், ஒளி, விடுதலை, அம்ருதத்துவம் ஆகிய நான்கினை விளக்கியே நிற்கிறது. 

இதைப்பற்றி தொடர்ச்சியாக ஆராய்ந்த இலட்சியவாதிகள் இவற்றை அடைவதற்கான வழி சாதாரண உலக அனுபவத்துடன் முரண்படுவதையும்,  இந்த உயர்ந்ததும், ஆழமானதுமான உறுதிமொழி மனிதனின் பொது அனுபவத்திலிருந்து அசாதாரணமாக இருப்பதையும், இதை மனித குலம் அடைவதற்கு, தமது குழுக்கள் புரட்சிகரமான தனிமனித முயற்சியா அல்லது பரிணாம வளர்ச்சியால் ஏற்படும் பொது வளர்ச்சியா சிறந்தது என ஆராய தலைப்பட்டனர். 

இந்தப்பாதையை அறிவதற்கும், தெரிவதற்கும் மிருக குணமும் ஆணவமும் உள்ள இந்த உணர்வில் தெய்வ தன்மையி விழிப்பிக்கவும், எமது தெளிவற்ற மெலிதான ஒளியுள்ள மனதை அதியுயர் பிரகாசமான உயர் ஒளியாக மாற்றுவதற்கும், அமைதியை கட்டமைக்கவும், தற்காலிகமான அழுத்தத்தையும் உணர்ச்சிகளால் வரும் துன்பத்தை தீர்க்கவும், பூரண விடுதலையை அடையவும், இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபடவும், இறப்படையும், மாறும் இந்த உடலில் அம்ருதத்துவத்தை அடையவும் ஜடத்தில் இறை சக்தி உண்டென்பதும், இயற்கையில் புவியின் பரிணாம கூர்ப்பாகவும்  அமைக்கப்பட்டுள்ளது. 

சாதாரண லௌகீக புத்திக்கு , எது தனது எல்லையையும், அதன் சாத்தியங்களையும் தனது அனுபவத்திற்குள் மட்டும் அறியக்கூடியதாக உணர்வு உள்ளதோ அது தான் அறியாத உணராத ஒரு உண்மையுடன் முரண்படும். இத்தகைய புத்தி தான் அறிந்தது மட்டுமே அதன் நம்பகத்தன்மைக்கு உறுதி அளிக்கும். 

தொடரும் (???) 

Thursday, April 26, 2018

ஸ்ரீ அரவிந்தரின் சாவித்ரி காவியச் சுருக்கம் - ஸ்ரீ காயத்ரி சாதனை


மகாபாரதத்தில் வரும் ஒரு உபகதை ஸத்தியவான் ஸாவித்ரி கதை.

அரசனான அசுவபதி அன்னை காயத்ரியை நோக்கி பதினெட்டு ஆண்டுகள் தபஸ் செய்கிறான், மகவு வரம் வேண்டி. ஸ்ரீ காயத்ரி அவன் முன் தோன்றி தானே மகளாக அவனிற்கு அவதரிப்பதாக வாக்களிக்கிறாள். அசுவபதி தவத்தை பூர்த்தி செய்து தனது அரசிற்கு திரும்புகிறான். மகள் பிறக்கிறாள். அவள் பெயர் ஸாவித்ரி. அவள் வளர்ந்து பருவ வயது அடைந்தபின்னர் அசுவபதி அவளை தனக்கு ஏற்ற வரனை தேர்ந்தெடுக்கும்படி அசுவபதி கூறுகிறார்.  அவள் அரசினை விட்டு விரட்டப்பட்ட குருட்டு அரசனின் மகனை மணக்க விரும்புவதாக அசுவபதியிடம் கூறுகிறாள். அவள் அப்படி தெரிவு செய்தபின்னர் நாரத மகரிஷி தோன்றி அவன் பன்னிரெண்டு மாதங்களில் இறந்துவிடப்போகும் அற்ப ஆயுள் உள்ளவன் என்று கூறுகிறார். அவள் அதை கருத்தில் கொள்ளாமல் ஸத்தியவானை மணந்து கொள்கிறாள். கணவனைக்காக்க விரதங்களும், தபஸும் இருக்கிறாள்.  காலம் முடிய யமன் உயிரைக்கொண்டு போக வருகிறான். ஸத்தியவானின் உயிரை எடுத்துக்கொண்டு யமன் யமலோகம் செல்ல, ஸாவித்ரி யமனை பின் தொடர்கிறாள். யமன் இதனை  விரும்பாவிட்டாலும் ஒன்றும் சொல்லாமல் தனது வேலையை செய்கிறார், ஏனெனில் வைதரணி ஆறு சொர்க்கத்தையும் பூவுலகையும் பிரிக்கும் எல்லைக்கோடு, அதைத்தாண்டி மனிதர்கள் வரமுடியாது என்பதால்.  எனினும் ஆற்றை கடந்தபின்னரும் ஸாவித்ரி வருவதைக்கண்டு யமன் ஆச்சரியத்துடன் அவளின் மனவுறுதியும், தபஸும் கண்டு அவளுடன் உரையாடி இறுதியில் ஸத்தியவானிற்கு ஆயுளை வழங்குகிறார்.

இதுவே ஸத்தியவான் ஸாவித்ரி கதை, இதை காரடையான் நோன்பிற்கு கணவன் ஆயுளை நீட்ட மனைவி இப்படி உதாரணமாக இருக்க வேண்டும் என்று இன்று பின்பற்றப்படுகிறது.

ஆனால் ஸ்ரீ அரவிந்தரிற்கு இந்தக்கதை ஒருவித மரணத்தை வெல்ல கூறப்பட்ட உத்தியாக புரிந்தது. இதனால் விளைந்ததே  24000 அடிகள் கொண்ட ஸாவித்ரி காவியம்.

இந்தக்கதையில் கதையை விட பாத்திரங்களும் அவை சொல்ல வரும் சூக்ஷ்மங்களும் அவசியமானது.

யோகமார்கத்தில் இறவா நிலை பெறும் இரகசியத்தி இந்தக்கதை கூறுகிறது.

இந்தக்கதையில் யோக மார்க்க பரிபாஷை விளக்கம் வருமாறு;

யோகி ஒருவன் அம்ருதத்துவம் – இறவா நிலை பெற தபஸ் செய்கிறான். தபஸின் முதல் நிலை பிராணனை உயர் நிலைப்படுத்துவது. நரியாக ஓடும் பிராணணை கடிவாளம் கட்டிய குதிரையாக – பரியாக ஆக்கி அதை ஆளத்தெரிந்து பிரபஞ்ச மூல சக்தியை ஈர்த்தால் அவன் அசுவபதி.

பிரபஞ்ச மூல பிராண சக்தி காயத்ரி. இதனால் அசுவபதி காயத்ரியை நோக்கி தவமிருந்தான் என்று கதை சொல்லப்பட்டது.

பதினெட்டு வருடன் என்பது ஒருவன் தனது பிராணனை கட்டுப்படுத்தி ஊர்த்துவ முகமாக செலுத்த நீண்டகாலம் சிரத்தையான கடும்பயிற்சி தேவை என்பதன் குறியீடு.

இப்படி நீண்டகாலம் சிரத்தையாக முயற்சித்தால் பிரபஞ்ச பிராண மகா சக்தி எம்மில் இறங்கத்தொடங்கும். இதுவே காயத்ரி தோன்றி உனக்கு மகளாக பிறக்கிறேன் என்றது.

இப்படி இறங்கு பிராணமாகா சக்தி சாதகனின் உடலிலே இறங்கும் நிலையே அசுவபதியின் மகளாக காயத்ரி பிறந்தாள் என்பது.

இப்போது அசுபதி (பிராணனை கட்டுப்படுத்தி, பிரபஞ்ச மகா சக்தியை தன்னில் ஈர்த்த யோகி) தன்னில் இருந்து ஊருவாக்கிய புதிய யோக சக்தி ஸாவித்ரி. சித்தர்கள் தம்மில் பிறக்கும் புதிய யோக சக்தியை வாலை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி பிறந்த யோக சக்தி சாதகன் மேல் கருணை கொண்டு சாதகனை முன்னேற்றுகிறது.

இப்படி பிராணனை கட்டுப்படுத்தி, பிரபஞ்ச மகா சக்தியை தன்னில் ஈர்த்த யோகி தன்னில் பிறப்பித்த புதிய யோக சக்தியை (ஸாவித்ரியை) கொண்டு குருட்டு அரசனின் (அறியாமையில் ஆழ்ந்த ஆன்மா) மகனான ஸத்தியவானை (எவன் தன்னில் ஸத்தியத்தை நிலை நிறுத்தியவனோ) மணக்கச் செய்யும் செயலையே ஸாவித்ரி ஸத்தியவானை மணந்தான் என்று கூறப்பட்டது.

இங்கு நாரதன் என்பது சித்த விருத்தி,  நாரதர் என்று பாத்திரம் எப்போதும் கலகக்காரனாக குறிப்பிடுவது எந்தச் செயலை செய்தாலும் எமது சித்தம் எமக்குள் இருந்து பயத்தை உருவாக்கும் என்பதை குறியீடாக காட்டவே.

நாரதரின் (சித்தத்தின்) கலகத்தை கருத்தில் கொள்ளாமல் ஸாவித்ரி தனது தபஸின் வலிமை கொண்டு யமனிடமிருந்து ஸத்தியவானை மீட்டாள்.

இந்த நிலை ஒரு யோகி தனது பிராணனை வலுப்படுத்தி, தனது ஸாதனையால் பிரபஞ்ச மகாசக்தியின் அருளை பெற்று, அந்த அருளை தன்னில் ஈர்த்து தனது மகளாக தன்னுள் வளர்த்தால், அவனில் வளர்ந்த அந்த ஸாவித்ரி சக்தி, அவனிற்குள்ளே சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனதினையும், அந்தக்கரணங்களையும் மணந்து, மரணத்தை செல்லும்!

இந்த இரகசியத்தையே விரிவாக ஸ்ரீ அரவிந்தர் 24000 அடிகளில் காவியமாக விரித்துக்கூறியுள்ளார்.  
இங்கு ஒரு சாதகன் அறியவேண்டியது;
·        பிரபஞ்ச மகாசக்தியை பெற ஒருவன் நீண்டகால தபஸும் தனது பிராணனை ஒழுங்காக்கிய அசுவபதி நிலையும்.
·        இப்படி முயற்சித்தாலும் பிரபஞ்ச மகாசக்தி கருணை இருந்தால் மட்டுமே சித்தி பெறலாம்.
·        அந்த பிரபஞ்ச மகா சக்தியையே எமது ரிஷிகளும் சித்தர்களும் காயத்ரி  என்று குறித்து வைத்தார்கள்.
·        சித்தி என்பது பிரபஞ்ச மகாசக்தியை தன்னுள் ஈர்த்து வளக்கும் நிலை.
·        இப்படி பிராண் நிலை ஒழுங்குபெற்றால் பிரபஞ்ச மகாசக்தியான காயத்ரி ஒரு சாதகனிற்குள் வளர்ந்த நிலை ஸாவித்ரி.
·        ஒரு சாதகன் தான் பெற்ற சக்தியை தனது மகள் போல் தன்னுள் அன்புடன் வளர்த்து வரவேண்டும்.
·        இப்படி வளர்ந்த ஸாவித்ரி, அந்த யோகியின் மனம் ஸத்தியத்தை கடைப்பிடிப்பதாக இருந்தால், அந்த மனத்தை மணந்து, தனது ஆற்றலால் யமனை வென்று அம்ருதத்துவத்தை தரும்.

இந்த கதையை தொகுத்த மகரிஷிகள் ஒரு யோகிக்குள் நடக்கும் யோக தெய்வ உருமாற்றத்தை பல்வேறு கதாபாத்திரமாக்கி அந்தக்கதாபாத்திரங்களை உறவுகளாக்கி அந்த உறவுகளில் நடைபெறும் செயல்களை யோக உத்தியாக்கி தந்துள்ளார்கள்.

Friday, April 20, 2018

பகவத் கீதை - யோக விளக்கம் 01


பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.

"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

மேலே உள்ள பகவத்கீதை சுலோகங்களை படித்து விட்டு உலகில் அதர்மம் நடக்கம் போது வானத்தில் இருந்து கிருஷ்ணன் வெள்ளைக்குதிரையில் வருவான் என்று கற்பனை செய்து கொண்டு இருப்பவர்கள் பலர். இப்படி பக்தியால் கெஞ்சி கூத்தாடி இறைவனிடம் தம் பிரச்சனைகளை கொட்டி விடலாம் என்று நினைப்பவர்களும் ஸ்ரீ க்ருஷ்ணன் என்ன சொல்ல வருகிறான் என்பது அதிர்ச்சியாக இருக்கும்.

யார் க்ருஷ்ணன்?
எமக்குள் உயிராய் இருக்கும் இறையே க்ருஷ்ணன், அந்த உயிர் வெளிப்படுத்தும் அறிவே க்ருஷ்ணன் (பிரமாணம் பகவத்கீதை (அத்தியாயம் ஏழு: ஞான விஞ் ஞான யோகம், பூரணத்தின் ஞானம் 7.21 : எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன், 7.8: மனிதரில் திறமையாகவும் இருப்பது நானே.)

யார் அர்ஜுனன்?
மாயையின் வசப்பட்டு, தமஸ் நிறைந்த எமது மனமே அர்ஜுனன்,

எது உலகு?
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்இந்த எட்டும் சேர்ந்ததே  மனிதனே உலகு.

எங்கு தர்மம் குறைகிறது?
ஒவ்வொரு மனிதனிலும் அவன் உடலும் மனமும் சேர்ந்த அவனது உலகிற்குள் சத்துவ, ராஜோ தமோ குணத்தால் தான் செய்ய வேண்டிய காரியத்தில் சிரத்தை குறையும் போது “அவனுக்குள்” தர்மம் குறைகிறது.

தர்மம் என்பது என்ன?
உலகும் தானும் ஒத்திசைவாக இயங்க ஒருவன் கடைப்பிடிக்கவேண்டிய மன, உடல் நியதிகள்.

அதர்மம் என்பது என்ன?
எது தானும் உலகும் ஒத்திசைவாக இயங்க தடையாக இருக்கிறதோ அதுவே அதர்மம்.

நல்லவர் யார்?
தர்மத்தின் வழி (மேலே கூறிய வரைவிலக்கணப்படி) சிந்திக்கும் எண்ணங்களும் அவற்றை உருவாக்கும் மனத்தின் ஒரு பாகம்.

தீயவர் யார்?
மனதையும் உடலையும் உலகுடன் ஒத்திசைவாக்காமல் அதர்ம வழி எண்ணத்தை உண்டுபண்ணு எமது மனத்தின் ஒரு பாகம்.
தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் என்பதன் விளக்கம் என்ன?

ஒவ்வொருவருடைய மனம் தர்மத்தில் இருந்து விலகி அதர்மத்தில் குழம்பும் போது ஒவ்வொருவருக்குள் உயிராய் இருக்கும் க்ருஷ்ணன் அறிவாய் மனதில் தோன்றி ஒவ்வொருவரையும் தர்ம வழி செலுத்துவதே இயற்கையின் நியதி!

ஆக இந்த சுலோகத்தின் பொருள் க்ருஷ்ணன் எங்கோ பிறந்து கத்தி எடுத்துக்கொண்டு வந்து தீயவர்களை கொல்வான் என்று தீவிரவாத எண்ணத்துடன் எண்ணாமல், ஒவ்வொருவரும் தமக்குள் அறிவாய் விளங்கும் உயிரின் ஆற்றலைக்கொண்டு தமது மனத்தில் உதிக்கும் அதர்ம எண்ணத்தை அழித்து தர்ம எண்ணத்தை நிலை நாட்டவேண்டும் என்பதே இதன் பொருள்.

நான் அவதரிப்பேன் என்பதன் பொருள் உயிரான இறை அறிவால் மனதில் வழி வெளிவருவேன் என்பதே!

Wednesday, April 18, 2018

சோதிடமும் இயற்கையும்



எதிர்காலத்தை உங்களால் மாற்றமுடியும், ஆனால் நிச்சயமாக பார்க்க முடியாது. கடந்த காலத்தை உங்களால் பார்க்க மட்டுமே முடியும். மாற்ற இயலாது. எவராவது உங்கள் ஜாதகத்தைப்பார்த்து எதிர்காலம் உறுதியாக இப்படித்தான் இருக்கும் என்று பயமுறுத்தினால் நிச்சயமாக புன் சிரிப்புடன் அகன்று விடுங்கள். எம்முடைய நிகழ்காலம் என்பது அறிந்த பழைய வாழ்க்கைக்கும் அறிவவேண்டிய எதிர்காலத்திற்கும் இடையில் இருக்கும் ஒரு இடைத்தொடர்பு. கடந்தகாலம் வரலாறு, எதிர்காலம் அறியாத புதிர்.

எதிர்காலத்தை அறிவதில் மனிதனுக்கு எப்போதும் பேரார்வம் இருக்கிறது. ஏனெனில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துகொண்டால் வாழ்க்கையில் பிரச்சனைகள் பலவற்றிற்கு தீர்வு காணலாம் என்று நம்புகிறான். இதனாலேயே அவன் சோதிடம், குறிபார்த்தல் என்பவற்றில் ஈடுபாட்டைக்காட்டுகிறான். இது சில நேரங்களில் தந்திரமாக உதவி செய்கிறது, உங்கள் பெண்ணை விரும்பும் ஒருவனை சுலபமாக நிராகரிக்க, விருப்பமில்லாதவர்களை ஒதுக்கி வைக்க, தனிப்பட்ட முயற்சியின்மையையும், சோம்பேறித்தனத்தையும் காரணப்படுத்த என்று பலவாறாக உதவுகிறது.

இப்படி எல்லாம் கூறுவதால் சோதிட சாஸ்திரத்தை பொய் என்று சொல்லுவதாக அர்த்தப்படுத்தக்கூடாது. சோதிடம் நிகழ்ந்ததை சரியாக கணித்து, அதற்கேற்றவாறு நிகழ்காலத்தை சரிப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் ஒரு கலை.

இந்தக்கலையில் நிகழ்காலத்தை சரிப்படுத்தும் கலை ஒருவனின் இறை அல்லது யோக மனச்சாதனைகள். இந்த சாதனைகளுடன் பண்பட்ட நுண்மையான மன, புத்தி, சித்தத்திற்கே பிரபஞ்ச இயக்கத்தின் தாக்கத்தை உணரமுடியும். அத்தகைய நுண்மை பெற்ற மனம் எப்படி தனது வாழ்வில் இயற்கையும், பிரபஞ்சமும் தாக்கம் செய்கிறது என்பதை அறிந்து, உணர்ந்து தனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

ஆகவே சோதிடம் பார்ப்பதால் உங்கள் எதிர்காலம் மாறிவிடாது என்பதை ஆழமாக புரிவதன் மூலமும், நிகழ்காலத்தில் சரியானவழியில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை கட்டமைக்கலாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதற்கு குரு-அகத்திய-காயத்ரி சாதனை துணை செய்யும்.

அக்ஷயதிருதியை பரிசு!


நண்பர்கள் அனைவருக்கும் அக்ஷயதிருதியை பரிசு!

உலகில் மிக உயர்ந்த பெறுமதியான விஷயம் பணமோ தங்கமோ அல்ல, ஒருவன் தனது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் மனோ வலிமையும், புத்தித் தெளிவும் உடையவனாக இருப்பது. ஆகவே இந்த அக்ஷய திருதியையில் அத்தகைய பரிசு ஒன்றினை அனைவருக்கும் நாம் தர விரும்புகிறோம். 

உங்கள் வாழ்வில் எந்தப்பிரச்சனை இருந்தாலும் அந்தப்பிரச்சனைகளை தீர்க்க பிரபஞ்ச மகா சக்தி எப்போதும் உதவ தயாராக இருக்கிறது. இந்த உதவியைப் பெற மனிதன் தனது மனதில் குறித்த ஏற்பு நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். அப்படி ஏற்படுத்திக்கொண்டால் அவனுக்கு தெய்வ உதவிகள் வந்து சேரும்.

இதை எப்படி சாதிப்பது என்பது எமது குரு நாதர் ஸ்ரீ கண்ணைய யோகியார் இலகுவான முறையில் விளங்கப்படுத்தி இருக்கிறார்.

பழங்காலத்தில் சௌபாக்கியம் என்பது மனித வாழ்க்கையில் ஒரு அதிமுக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இது பிறந்த நாள் முதல் இறப்பு வரை ஏற்படும் துன்பங்களை தீர்க்கும் வழியை அறிந்திருக்கும் ஞானமே சௌபாக்கியம் எனப்பட்டது.

இந்த சௌபாக்கிய ஆற்றலை பெறுவதற்குரிய இலகு முறை மந்திர சக்திகள்.

இந்த ஒலி நாடாவில் 108 வருடங்கள் பூவுலகில் வாழ்ந்த அகத்திய மகரிஷியின் சீடர் ஸ்ரீ கண்ணைய யோகியார் தமது மனோசக்தியையும் சேர்த்து மனித வாழ்க்கைக்கு நன்மை தரும் மந்திரங்களை தொகுத்து தந்திருக்கிறார்.

ஆகவே வாழ்க்கையில் வியாபார நட்டம், ஆரோக்கியக்குறைவு, குடும்ப பிரச்சனை, பணப்பற்றாக்குறை இப்படி எந்தக்குறைகள் இருந்தாலும் இந்த ஒலி நாடாவை குறைந்தது 45 நாட்கள் தொடர்ச்சியாக கேட்கலாம்.

மனதை காப்பது மந்திரம். ஆகவே மந்திரங்களை கேட்பதால் மனதில் எழும் எண்ணங்கள் குறித்த காரியத்தை ஆற்றுவதற்குரிய வகையில் சீராக்கப்படும். இப்படித்தான் மந்திரம் ஒருவனுக்கு பலன் தருகிறது. ஆகவே மூட நம்பிக்கையாக கற்பனை செய்துகொள்ளாமல் மந்திரம் பலன் தரும் முறைய புரிந்து இந்த ஒலி நாடாவை கேட்டு பலன் பெற வேண்டுகிறோம்.

பயன்பெற்று உங்கள் துன்பம் தீர்ந்தால் அதுவே எமக்கு மிக பெரிய பாக்கியமாக கருதுவோம்!

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

இந்த ஒலி நாடாவில் உள்ள மந்திரங்கள்:
  1. ஆயுள் ஸ்திர மந்திரம், 
  2. நோய் தீர்க்கும் சஞ்சீவினி மந்திரம், 
  3. புத்தியை சீர்படுத்தும் மந்திரம், 
  4. கணவன் மனைவி மனம் ஒன்று பட்டு குடும்ப ஒற்றுமை சீராக்கும் மந்திரம், 
  5. பண ஆகர்ஷண லக்ஷ்மி மந்திரம், 
  6. இரகசிய பகைமை அகற்றும் மந்திரம், 
  7. ஆபத்துக்களை தடுக்கும் மந்திரம், 
  8. மனச்சுத்தி மந்திரம், 
  9. பெண்களுக்கான சௌபாக்கிய மந்திரம்,
  10. வாழ்வில் நன்மையை ஈர்க்கும் ஸ்வஸ்தி மந்திரங்கள், 
  11. மன சமனிலை ஏற்படுத்தி நிம்மதி ஏற்படுத்தும் சாந்தி மந்திரங்கள், 
  12. மனதினை வலுப்படுத்தும் சிவ சங்கல்ப மந்திரங்கள்,
  13. தேவர்களும் இயற்கை சக்திகளும் ரக்ஷிக்கும் ரக்ஷணை மந்திரங்கள்,
  14. தேவ திருப்தி மந்திரங்கள்,
  15. தீர்த்த ஆசீர்வாதம், 
  16. அக்ஷதை ஆசீர்வாதம், 
  17. குங்கும ஆசீர்வாதம்
  18. மங்கள மந்திரங்கள்
பதிவிறக்கி கொள்ள: 

Monday, April 16, 2018

காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடங்கள் 21, 22, 23 & 24

இந்த வாரத்திற்குரிய பாடம்: 
பாடம் 21 & 22
பாடம் 23 & 24

காயத்ரி குப்த விஞ்ஞானம் என்பது காயத்ரி மந்திரம் பற்றிய அனேக ரிஷி பாரம்பரிய இரகசியங்கள் அகத்திய மகரிஷி குரு பாரம்பரியத்தில் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரால் இலங்கை காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு ஸ்வாமிகளுக்கு கற்பிக்கப்பட்டு, பின்னர் முருகேசு சுவாமிகளிடம் ஸ்ரீ ஸக்தி சுமனன் குருமுகமாய் பயின்ற சாதனா பாடங்களின் தொகுப்பு. 

இந்தப்பாடங்கள் கொழும்பில் வாரம் தோறும் வகுப்புகளாகா நடாத்தப்படுகிறது. எதுவித கட்டணமும் இல்லை. பங்குபற்றுபவர்கள் குரு - அகத்திய - காயத்ரி சாதனை செய்பவர்களாக இருக வேண்டும். 

பாடத்தின் ஒலிக்கோப்புகள் இங்கே பதியப்படுகிறது:

Monday, April 02, 2018

தினசரி சாதனை - சில அனுபவ குறிப்புகள்!

மனிதன் பொதுவாக மறதி உடையவன். தனது புலன்களுக்கு அகப்படக்கூடிய விஷயங்களையே  ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் சலனிக்கும் மனதை உடையவன். தினசரி பல விஷயங்களை மனதில் பதிவித்துக்கொண்டு இருக்கும் சாதகன் தான் இறைசக்தியின் அமிசம் என்பதையும் அந்த இறை சக்தியுடன் தொடர்பு கொள்கிறோம் என்ற விழிப்புணர்வு எப்போது இருக்க வேண்டும். 

இதற்கு தினசரி சாதனை அத்தியாவசியம். தினசரி சாதனையை ஒழுங்காக செய்யும் சாதகனது ஆழ்மனது அடிக்கட் இறைசக்தியுடன் தொடர்பு கொள்வதால் படிப்படியாக, மெதுவாக அவனில் தெய்வ சக்தி விழித்து வரும். இப்படி மனதிலும், சித்தத்திலும் தெய்வ சக்தி விழிப்படைவதால் சாதகனுக்கு அவனது முயற்சியில்லாமலே பலவித பௌதீக, ஆன்மீக முன்னேற்றம் ஏற்படத்தொடங்கும். 

ஒருவரிடம் ஏதாவது பலனைப்பெறவேண்டுமாயின் முதலில் அந்த நபரிற்கும் எமக்கும் சிறந்த நட்பு இருக்க வேண்டும். அடுத்து அவரை அடிக்கடி சந்தித்து புரிந்துணர்வு ஏற்படவேண்டும். இதனால் ஏற்படும் உறவிலேயே அவரிடம் உதவியினை பெறமுடியும். 

இதே உண்மை சாதனைக்கும் பொருந்தும். பலர் தாம் தினசரி சாதனை செய்கிறோம் என்ற எண்ணத்துடன் வழிகாட்டும் ஆச்சாரியருடன் எந்த தொடர்பு கொள்ளாமல் தாம் அதிக சாதனை செய்யலாம் என்று எண்ணி முயற்சிப்பதும் சிலவேளைகளில் தவறாக முடியலாம். ஆகவே சாதனையில் ஈடுபட விரும்பும் சாதகன் கீழ்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 
  1. தினசரி ஒழுங்காக உங்கள் ஆச்சாரியர் உபதேசித்த படி சாதனை செய்து வரவேண்டும். 
  2. உங்கள் சாதனையில் மாறுதல் செய்வதாக இருந்தால் உங்கள் உபதேச குருவுடன் உரையாடி அவர் ஆலோசனைப்படி மட்டும் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் தன்முனைப்பில் அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையில் முயற்சிக்க வேண்டாம். திருமூலர் கூறிய "ஈசனோடாயினும் ஆசை அறுமின்" என்ற வார்த்தைகளை ஞாபகம் வைத்து சாதனையில் மெதுவாக, அமைதியாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள். 
  3. ஆச்சாரியாரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் எக்காரணம் கொண்டும் எந்த வித மனக்குழப்பங்களையோ, தாம் கவனிக்கப்படவில்லை என்ற மனக்குறையையோ, தர்க்கிக்கவோ செல்லாதீர்கள். உங்களுக்கு உபதேசிக்கப்பட்டதை தொடர் ச்சியாக பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சரியான பக்குவமடைந்தால் எவராலும் உங்களுக்கு ஆன்ம உயர்வை தடுக்க  முடியாது என்ற பிரபஞ்ச உண்மையை மனதில் வையுங்கள். 
  4. ஆச்சாரியார் எக்காரணம் கொண்டும் தமது சொந்த விருப்பத்தில் இவர் எனக்கு அதிக உதவி செய்கிறார் அதனால் அவரிற்கு உயர்ந்த சாதனா இரகசியங்களை  உபதேசிப்போம் என்று உபதேசம் செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்ற உண்மையை அறியுங்கள். 
  5. ஒருவர் முன்னேறுவது அவரவர் சொந்த முயற்சியும், சாதனையில் உள்ள சிரத்தையுமே. 
  6. மற்ற சாதகர்கள் என்ன சாதானை செய்கிறார்? அவரிற்கு ஏன் வேறு விதமாக சாதனை செய்யச்சொல்லியுள்ளார்? போன்ற விஷயங்களில் மனதை செலுத்தாதீர்கள். இது முழுமையாக உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை தடை செய்யும். 
  7. உங்களுக்கு சந்தேகம் எதுவும் இருந்தால் எதுவித பயமும் இல்லாமல் நேரடியாக உபதேச ஆச்சாரியரிடம் உரையாடுங்கள். வீணான மனக்குழப்பங்களால் வேறு எவரிடமும் உரையாடுவது மீண்டும் உங்கள் சாதனையில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தும். 
  8. காயத்ரி சித்த சாதனைகளில் உள்ள பண்புகள் உங்களில் வளர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் படி உங்களை நீங்கள் உருவகப்படுத்துங்கள். ஏதாவது தவறு நடந்துவிட்டால் உடனடியாக அது அறியாமையில் நடந்து விட்டது என்பதை உணர்ந்து அது இனி ஏற்படாது என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். குரு மண்டல அருளும், காயத்ரியின் தெய்வ குணங்களும் விழிப்படையும் என்னில் இத்தகையவை இனி நிகழாது என்பதை உறுதியாக உங்கள் ஆழ்மனதிற்கு சொல்லுங்கள்.  

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...